தந்தை பெரியார்
ஆந்திர மாகாண பெண்கள் மாநாட்டில் விவாகரத்து செய்து கொள்வதற்கு ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒன்று போலவே உரிமை இருக்கும்படியாக ஒரு தீர்மானம் பெண்களால் கொண்டு வரப்பட்டு ஒரே ஒரு ஓட்டில் அத்தீர்மானம் தோல்வியடைந்து விட்டதாக தெரியவருகிறது.
அன்றியும் 3 மணி நேரம் அத்தீர்மானத்தின் மீது பல பெண்கள் கூடி பலமான வாதப்பிரதிவாதம் நடந்ததாக காணப்படுகின்றது. தீர்மானம் தோற்றுவிட்டாலும் கூட இந்தச் சேதி நமக்கு மிகவும் மகிழ்ச்சியையும் பெண்கள் விடுதலையில் நமக்கு நம்பிக்கையும் கொடுக்கின்றது.
ஏனெனில் கல்யாண விடுதலை, விவாகரத்து என்கின்ற வார்த்தைகளைக் காதினால் கேட்கவே நடுங்கிக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான ஆண்களுக்கு அடங்கி அடிமையாய்க் கிடந்து வந்த, பெண்கள் கை தொட்டு தாலி கட்டின புருஷன் கல்லானாலும், புல்லானாலும், கெட்டவனானாலும், பிறருக்குத் தன்னைக் கூட்டிவிட்டு ஜீவனம் செய்யும் மானமற்ற பேடியாய் இருந்தாலும் அவர்களையெல்லாம் ‘கடவுள் ‘ போலவே பாவிக்கவேண்டுமென்றும், கணவன் குஷ்டரோகியாய் இருந்தாலும் அவனைத் தலையில் தூக்கிக் கொண்டு போய் அவன் விரும்பும் தாசி வீட்டுக்கு அழைத்துப் போய் விடுவது தான் கற்புள்ள பெண்களின் லட்சணமென்றும், பெண்களுக்குக் கர்ப்பத்தில் இருந்தே சரீரத்தில் ரத்தத்துடன் கலக்கும்படி செய்து வைத்திருக்கும் இந்த நாட்டில் ரத்து என்பதும், ஆண்களைப்போலவே பெண்களுக்கு சுதந்திரம் என்றும் சொல்லப்பட்டது போன்ற தீர்மானங்கள் மகாநாட்டுக்குக் கொண்டு வருவதும் அதுவும் பெண்களாலேயே கொண்டு வருவதும் அதைப் பற்றி பலர் பேசி வாதப்பிரதிவாதம் செய்ய இடம் ஏற்படுவதுமான காரியம் என்பது லேசான காரியமல்ல.
அதுமாத்திரமல்லாமல் அத்தீர்மானம் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்கும் படி அதற்கு ஓட்டு கிடைப்பது அதுவும் சாதாரண காரியமல்ல. ஆகவே இதிலிருந்தே கூடிய சீக்கிரம் பெண்ணுக்கு விடுதலை பெற்றுவிடும் என்று தைரியமாய் இருக்கலாம் என்றே நினைக்கின்றோம்.
– டிசம்பர் 21, 1930 ‘குடிஅரசு ‘ இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய துணைத் தலையங்கம். ‘பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம், 50 ஈ.வெ.கி. சம்பத் சாலை, சென்னை – 600007 ‘ வெளியிட்டுள்ள ‘பெரியார் களஞ்சியம் ‘ நூல் வரிசையின் ஐந்தாம் தொகுதியில் (குறைந்த அளவு நன்கொடை ரூ.50) வெளிவந்துள்ள கட்டுரை இது.
(தட்டச்சு உதவி: ஆசாரகீனன் aacharakeen@yahoo.com)
பெரியாரின் பிற பெண் விடுதலை சிந்தனைகள்:
எல்லாப் பெண்களும் கற்பில்லாதவர்களா ?
ஆண்களுக்கு உத்தியோகம் கொடுக்கக்கூடாது
பெண்கள் விடுதலை அடைய ஆண்மை அழிய வேண்டும்
கர்ப்பத்தடையும் கத்தோலிக்கரும்
கற்பு என்கின்ற காட்டுமிராண்டித்தனம்
- டாலர்க் கனவுகள்
- குதிரைவால் மரம்
- நந்திக் கலம்பகம்.
- சரியும் மணல் மடிப்புகள் நடுவே
- கவிதை உருவான கதை-2
- ஜெய மோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரல் ‘ : ஓர் அலசல்
- மரபும் புதிதும் : இரு கவிதைகள்
- வெற்றி
- அனுபவம்
- டான் கில்மோர்
- காசு
- காயம்
- உணவுச் சங்கிலிகள்
- சத்தியின் கவிக்கட்டு 3
- புத்தாண்டுப் பொன்மகளே புது அழகாய் நீவருவாய்!
- பரம்பொருள்
- அன்புடன் இதயம் – 14 – காற்று
- ஓவியம்
- கடிதம் – ஏப்ரல் 15, 2004
- மலர் வசந்தம் – நிழற்படத் தொகுப்பு
- தேவலோகத்தில் ஒரு கடிதப் போக்குவரத்து
- ஆருயிர்கெல்லாம் ‘வம்பு ‘ செய்யல் வேண்டும்!
- எந்த செய்தி – யார் பிரசுரித்தது ? தினகரன் – தினத்தந்தி தினமலர்
- உயிர்மைக்கு ஒரு கடிதம்
- கடிதம் – ஏப்ரல் 15,2004
- தமிழ்ப் படைப்பிலக்கியத் தடத்தில் மா அரங்கநாதன் படைப்புகள்
- ஏசுநாதர் வாழ்க்கை : நடன நாடகம் – ஏப்ரல் 18 , 2004
- துரோகர்(துரோணர்)
- காலம் சஞ்சிகையின் இலக்கியப் பொழுது
- 2004-ஆம் ஆண்டிற்கான இலக்கியச் சிற்பி விருது
- கடிதங்கள் ஏப்ரல் 15,2004
- கடிதம் – ஏப்ரல் 25 – சுமதி ரூபனின் ‘வடு ‘
- குளிர்பானங்கள்
- சொற்புணர்ச்சி விளக்கச்சொற்கள்
- என்னோடு என் கவிதை
- மலைப்படுகடாம். ஒரு சித்திரம்
- என்னைப் பெத்த அம்மாாாாஆ…
- முரண்பாடுகளின் முழுமை
- இந்துத்துவம் = சர்வ மத சமத்துவ சம்மதத்துவம்
- இது எப்படி இருக்கு…. ?
- நிழல் யுத்தமும், நிஜ யுத்தமும்
- தயானந்த சரஸ்வதி சொல்லும் கடமை என்ன ?
- கல்யாண ரத்து தீர்மானம்
- காடன்விளி
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 1
- விளிம்பு
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் -15
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -20)
- புழுத் துளைகள் (குறுநாவல் – 4)
- யூசுஃபும் கண்ணாடியும் -கதை — 04
- திரேசா
- உலக விந்தைகளில் ஒப்பற்ற பொறியியல் உன்னதமான பனாமா கால்வாய் [Panama Canal (1870-1914) The Greatest Engineering Marvel]
- மைக்ரோசாஃப்ட் – வின்டோஸ் சமாச்சாரங்கள்
- மன்னித்து விடலாம்….
- வேர்கள்
- என் பிரிய தோழி
- தமிழவன் கவிதைகள்-ஒன்று
- கவிதைகள்
- உயிர் தொலைத்தல்
- வசந்தத்தின் திரட்சி
- தீர்மானிக்காதவரை.. .. ..
- பகல் மிருகம்
- தொழில்நுட்பச் செய்திகள் ஏப்ரல் 15, 2004
- அவதாரம்
- அம்மணம்
- என்னைப் பொறுத்தவரை
- வாழும் வகை
- ஓட்டப்பந்தயம்
- அளவுகோல்
- வா
- ஜங் அவுர் அமான்!