வே.சபாநாயகம்
(‘சந்திரமௌலி’ என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்’)
கடிதம் – 47
திருப்பத்தூர்.வ.ஆ.
19 – 7 – 97.
அன்புமிக்க சபா அவர்களுக்கு,
வணக்கம்.
தங்கள் கடிதம் கிடைத்தது. உடனடியாகப் பதில் எழுதாமைக்குக் காரணம், உடனடியாகப் புறப்பட்டு வரவேண்டு என்று, அதற்காக நாளூம் வேளையும் பார்த்தது தான்.
தங்களுக்கு ஏற்பட்ட பாரிசவாயு பாதிப்பினை அறிந்து அனவருமே அதிர்ச்சியடைந்தோம். நல்ல வேளையாக உடனே சென்னை சென்று மருத்துவ சிகிச்சை பெற்றதால் பெரும் பாதிப்பின்றி மீண்டிருப்பது பெருத்த நிம்மதியை அளிக்கிறது.
இறைவனருளால் வந்த ஆபத்து இவ்வளவோடு தவிர்ந்ததே என்று அவனுக்கு நன்றி செலுத்தினோம். பழையபடி கை நன்றாக எழுதமுடிகிறது என்பதறிய மகிழ்ச்சி.
அஞ்சற்க – சபா! நிமிர்ந்து நில்லுங்கள். நம் புண்ணியங்கள் நம் முதுகெலும்பைத் தாங்குகின்றன. நமது சிந்தனைகள் நமது மூளையைச் சேமப்படுத்துகின்றன. வாழ்வை ரசித்து ரசித்து உருகினோமே, அந்த ரசனை நம் உயிர்வாழ்வை இன்னும் நெடுங்காலம் ரட்சிக்கும். அஞ்சற்க!.
வைத்தியர்கள் வகுத்த விதிப்படி நடவுங்கள். உணவுக் கட்டுப்பாடு வெகு எளிது! “உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்” எனக் கருதிய மரபில் வந்த நமக்கு எல்லாமே எளிது!
படிப்பதையும் எழுதுவதையும் தொடருங்கள். தியானம் எப்பொழுதுமே புரிகிறீர்கள். உங்கள் வாழ்வு மிக அருமையாகப் பதிவு செய்யப் பட்டிருக்கிறது என்கிற அபூர்வமான திருப்தியும் தைரியமும் எஞ்ஞான்றும் நெஞ்சில் நிலவட்டும்.
இவையே நோயை விரட்டும் மந்திரங்கள்.
இறைவன், எப்பொழுதும் போல் இனியும் தங்களைக் காத்தருள்வான். அதற்கான பிரார்த்தனைகளை எங்கள் பூஜாவேளைகளின் போதெல்லாம் நாங்கள் புரிகின்றோம்.
விரைவில் நண்பர்களுடன் வந்து தங்களை நேரில் சந்திக்கிறேன்.
தங்கள்,
பி.ச.குப்புசாமி.
( இத்துடன், திரு.பி.ச.குப்புசாமி வே.சபாநாயகத்துக்கு எழுதிய கடிதங்கள் முடிவுறுகின்றன. அடுத்து இன்னொரு நண்பர் கவிஞர் ஆதிராஜ் அவர்களுக்கு எழுதிய கடிதம் தொடர்கிறது. )
- விருதுநகரில் விடியல் விழா நாள் 8/3/2007 வியாழன் மாலை 5.30 மணி
- எண்ணச் சிதறல்கள் – சாரு, சாய் பாபா, அமிர்தானந்தமயி, தமிழக முதல்வர், கனிமொழி,அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது
- தொலைந்த ஆன்மா
- நீர்வலை – (13)
- உண்மை கசக்கும்
- “மும்பை டப்பா வாலாவுக்கு ஜே…ஏஏ!!!”
- சுதந்திரமும் சுதந்திரம் துறத்தலும்
- கடல் மெளனமாகப் பொங்குகிறது
- நியூசிலாந்து பயண நினைவுகள்
- அம்பைக்கு விளக்கு விருது வழங்கும் விழா
- சினிமா – BABEL
- ‘பெரியார்’ வருகிறார்!!
- காதல் நாற்பது (11) காதலுணர்வு எழிலானது !
- புதுமைப்பித்தன் இலக்கியச்சர்ச்சை 1951 – 52 நூல்வெளியீடு
- எரங்காட்டின் எல்லைக்கல்
- அரசியல் கலந்துரையாடல்
- கலவியில் காயம் – நடேசன்
- கடித இலக்கியம் -47
- திரு அரவிந்தன் நீலகண்டன் எழுதிய ‘புஷ்யமித்திரரும் பிரச்சார படுகொலைகளும்’
- ஜெயமோகனின் “இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன?” கட்டுரை குறித்து
- சமுதாய மாற்றத்தில் தமிழ் இதழ்கள்
- கந்தர்வன் நினைவு சிறுகதைப்போட்டி
- வாழும் விருப்பமுள்ள மனிதர்கள் ( நாஞ்சில்நாடனுடைய கதையுலகம்)
- கவிதையின்மீது நடத்தப்படும் வன்முறை……
- வால்மீனில் தடம் வைத்து உளவப் போகும் ஈசாவின் ரோஸெட்டா விண்கப்பல்
- கவிதைகள்
- கவிதைகள்
- நாங்கள் புதுக்கவிஞர்கள்
- தூரமொன்றைத் தேடித்தேடி..
- குருதிவடியும் கிறிஸ்து
- பெரியபுராணம்-124 திருமூல நாயனார் புராணம் தொடர்ச்சி
- நிலவு “டால்பின்”
- ஹிந்து குடிமைச் சட்டத்திற்கு அடிப்படை மனு ஸ்மிருதியா?
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:7 காட்சி:2)
- மடியில் நெருப்பு – 27