மா.சித்திவினாயகம்
புலம் பெயர்ந்த நாட்டினிலே, புலம் பெயர்ந்தோரால், புலம் பெயர்ந்த சூழலில் எடுக்கப்பட்டிருக்கிற இந்த “இயல்” விருது புலம்பெயர் எழுத்தாளர்களை மட்டுமே சந்தோசப்படுத்த எடுக்கப்பட்டதா? அல்லது
தமிழ்ப் படைப்பாளிகளை மேன்மைப்படுத்த எடுக்கப்பட்டதா? அல்லது விருது கொடுப்போரை மட்டுமே விளம்பரப்படுத்த எடுக்கப்பட்டதா?
பூட்டிய அறைகளுக்குள் முடுக்கிவிடப்பட்ட கணணி இயந்திரங்கள் மட்டுமே கண்டறிந்த அல்லது சிபார்சு செய்த பேர்வளிகளுக்கு மட்டுமே இந்த இயல் விருது பரிந்துரை செய்யப் படுகிறதா? மானிட சமூகத்தின் ஒப்பற்ற மேன்மைகளுக்கெல்லாம் உயிர் நாடியாக இருக்கக்கூடிய மொழியைச் செம்மைப்படுத்தத் தவறியவர்களுக்கெல்லாம் இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறதா? என்பது போன்ற கேள்விகள் இன்று சரமாரியாக எழத் தொடங்கிவிட்டன.
பேச்சு வழக்கில் தொடங்கிய மொழியானது எழுத்து வடிவம் பெற பல காலமாய் அல்லற்பட வேண்டியிருந்திருக்கிறது. இவ்வாறான மொழி மற்றும் வாழ்வியல் போரட்டங்களுக்குள் தான் மனிதனுக்குச் சிந்தனைகளும் கருத்துகளும் வளரத்தொடங்கின.
மானிடத்துச் சிந்தனைகள் நோக்கம் இருப்பு வெளிப்படுத்தல் என்பவைகள் பொதுத்தன்மை கொண்டதாகவோ அல்லது ஒருமைப்பாடு கொண்டதாகவோ இல்லை. ஒடுக்கப்பட்டோருக்காக
குரல் கொடுப்போரும் நிறவெறிக்கெதிராய் ஆர்ப்பரிப்போரும் மொழியினைச் சீர்ப்படுத்த முனைந்து நிற்போரும் என திறந்துவிட்டிருக்கிற மிகப்பெரிய இலக்கிய வெளியைச் செப்பனிடுகிற
மேதமையாளர்களைக் கண்டறிந்து அவர்களது தனித்துவத்தை போற்றிக் கௌரவிக்கவேண்டியது கட்டாயமாகிறது.
அற்புதமான அரிய படைப்பாற்றல்களை தந்தவர்கள் பலர் விருதுகள் எதுவும் இல்லாமலேயே மண்மூடிப் போனார்கள்.மீந்திருப்பவர்களில் பலர் இனங்காணப்படாமல் இலைமறைகாய்களாக காலச்சுழியினில் அலைப்புண்டுபோனார்கள். ஆக அறியப்பட்டு எஞ்சியிருப்பவர்கள் சிலரை கணணிகள் அறிவதில்லை. அதிலும் அறியப்பட்டவர்களை இந்த விருது நாடகங்களின், பாராமுகமும் , மெத்தனப்போக்கும், இழுபறிப்பாடுகளும், ஈனத்தனங்களும் மிக மிகக் கீழ்மைப் படுத்தி விடுகின்றன.
தாய் மொழியில் எழுதுபவனின் வாசகப்பரப்பிற்கும் மாற்றுமொழிக்கு மொழியாக்கம் செய்கின்ற மொழிபெயர்ப்பாளனின் வாசகப்பரப்பிற்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு. எப்படி தமிழியற்
சாதனை விருதை ஒரு மொழிபெயர்ப்பாளருக்குக் கொடுக்க முடியும் என்கின்ற ஜெயமோகனின் கேள்வியில் உண்மையில்லாமல் இல்லை. ஆனாலும் தி.க.சி.என்று எழுத்துலகில் பிரபலமான எழுத்தாளர் த.க.சிவசங்கரன் அவர்களுக்கு ஏழு அல்லது எட்டு வருடங்களுக்கு முன்னதாக சாகித்திய அகாதமியின் விருது அறிவிக்கப்பட்ட பொழுது ஜெயமோகன் அவர்கள் அதனை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அவருக்கு கிடைத்தது ஒரு விருதேயல்ல என்றும் அது அவருக்கு கிடைத்திருக்கும் முதியோர் நல உதவி அதாவது “பென்சன்” என்றும் கூடச் சொல்லியிருந்ததாக எனக்கு ஞாபகம். அப்படி விமர்சித்த ஜெயமோகன் அவர்களே இன்று சுந்தரராமசாமி அவர்களுக்கு முதுமையில் இயல் விருது கிடைத்ததினால் அது இயல் விருதுக்குப் பெருமை என்று வாதிடுவது எவ்வகையில் நியாயம்.ஒருவருக்கு ஒரு நீதி! மற்றொருவருக்கு வேறொன்றா?
தமிழிற்காய் வாழுகின்ற பத்மநாப ஜயருக்கு இவ்விருது வழங்கப்பட்டதறிந்து இவ்விருது பற்றிய உயரிய எண்ணம் என்னுள் இருந்தது.அதுமட்டுமன்றி
சுந்தரராமசுவாமி, வெங்கட்சாமிநாதன், கே.கணேஸ், தாஸிசியஸ் என அந்தப்பட்டியல் நம்பிக்கையோடு நீண்டது.
நம்பிக்கை இன்னமும் பொய்த்துப்போய்விடவில்லை.வருங்காலத்தில் தங்களைப் பரிசீலிப்பார்கள்
என எண்ணுகின்றேன். விருதுகளை அளிக்க முற்படுவோர் படைப்பாளிகளையும் படைப்புகளையும் ஆள அறிந்து தேடுதல் வேண்டும்.அவற்றையும் அவர்களையும் தேடிவாசித்தல் உங்கள் தலையாய கடமை. அவைகள் உங்களைத்தேடி வராமாட்டாது. அப்படி நீங்கள்தேடாதவரையில் இவ்வாறான நச்சரிப்புகள் உங்களைத் தொடர்ந்த வண்ணமேயிருக்கும் என்று யாழ்மண்ணில் இருந்து 1980 களில் வெளியாகிய “புதுசு”வின் சாரத்தை இங்கு நினவுகூர்தல் சாலப்பொருந்தும்.
விருதுவழங்கல் என்பது உலகமுற்றிலும் இன்று இலக்கில்லாத வெறும் பண்டமாற்றுப் பயணிப்பாகவேயுள்ளது. இலக்கியத்தில் அல்லது மொழியில் உள்ள படைப்பை, அழகியல் பண்பை, மதிப்பை, கருவை, தகுதியானது அல்லது தகுதியற்றது எனத் தீர்மானிப்பது எது? பல்கலைகழகங்களின் அங்கீகரிப்பாளர்களா? அரசாங்க சார்பு எடுபிடிகளா? மிகுந்த வாசகர்களா?அல்லது அவரவர் எழுதிதள்ளியிருக்கிற புத்தகங்களின் தொகையா? அழகான தடித்த அட்டைகளா? உப்பிப் பெருத்த பக்கங்களா? நிறைய எழுதியுள்ளவர்களுக்குத்தான் விருதுகள் என்றால் வெறும் 1330 இரட்டை வரிகளை எழுதிய திருவள்ளுவரைக்கூட இந்த விருதுகள் காலால் உதைத்து எறிந்துவிடுமே?
எது எப்படியோ படைப்பு சார்ந்த அளவுகோலகள் புறக்கணிக்கப்பட்டு அமைப்பு சார்ந்த “பெரிய மனிதர்களை” மட்டுமே பரிசீலிக்கிற அமைப்பாக இயல் விருது அமைப்பு மாறிவிட்டதோ? என்கிற நியாயமான ஜயப்பாட்டினையும், “விருதுகளினால் இலக்கியவாதி உருவாவதில்லை. வாழ்வதுமில்லை. ஆனால் இலக்கிய முன்னோடிகளை மதிப்பதும், கௌரவிப்பதும் ஒரு சூழலின் இலக்கிய அடிப்படைகளை வலுப்படுத்தும். சில ஆதார மதிப்பிடுகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லும்.. தன் சாதனைகள் புறக்கணிக்கப்படுகையில் தன் தியாகம் அவமதிக்கப்படுகையில் படைப்பாளியின் அகம் கண்ணீர்வடிக்கத்தான் செய்யும். அவர்களின் கண்ணீர் ஒருபோதும் ஒருபண்பாட்டுக்கு நல்லதல்ல” என்கிற அக்கறையுள்ள வாசகங்களையும் இயல் விருது அமைப்பாளர்கள் கவனத்தில் கொள்வார்களென்று எண்ணுகின்றேன்.
elamraji@yahoo.ca
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 16 நமது அரசியலுக்கும் மக்களின் யதார்த்த வாழ்வுக்கும் சம்பந்தமில்லை
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பிரபஞ்சத்தை அமைத்த அடிப்படைத் துகள்கள் ! (கட்டுரை: 12)
- தர்மசரி பண்டாரநாயக்காவின் நான்கு விவரணப் படங்கள் : கலைஅனுபவம் – வரலாறு – அரசியல்
- புத்தகப் பார்வை : மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும் – முனைவர் மு. இளங்கோவன்
- தாகூரின் கீதங்கள் – 12 என்ன பூரிப்பு உனக்கு !
- இந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து
- தைவான் நாடோடிக் கதைகள் 9. கடல்நீர் எப்படி உப்பானது? (உப்புத் தண்ணீர்)
- தாரெ ஜமீன் பர் (தரையில் நட்சத்திரங்கள் : அமீர்கானின் திரைப்படம் ) ::: ஓர் அற்புத அனுபவம்
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 3
- தமிழ் ஓவிய உலகின் அடையாளம்–ஒவியர் ஆதிமூலம் மறைவு
- ஏழரைப்பக்க நாளேடு!
- எந்த ரகம்?
- திரு ஜெயமோகனின் வேண்டுகோள் கடிதம் – Thank You
- எழுத்துக்கு அடையாளம்
- ஆய்வரங்கம் : புலம் பெயர் வாழ்வில் தமிழர்களும் அடையாளமும்
- மதிப்புக்குரிய ஜெயமோகனுக்கு….
- கீதாஞ்சலி பிரியதர்சினி கவிதைகள்
- கடவுள்களின் மடிகள்
- கவிதைகள்
- ஞாபகம்
- பொங்கல் வாழ்த்துக்கள்
- வாய்ப்பளிக்கும் வஹ்ஹாபிக்கு வந்தனம்
- ஹென்டர்சன் இந்திய நற்பணிச் செயற்குழுவின் 24-வது பட்டிமன்றம்
- வா.மணிகண்டனின் “கண்ணாடியில் நகரும் வெயில்” கவிதைத் தொகுதி வெளியீடு
- ‘எழுத்துக்கலை’ பற்றி இவர்கள்…………..(8) கு.ப.ராஜகோபாலன்
- பூஜ்ஜியம்
- நூல் நயம்…. – அன்பு மலர் அன்னை தெரேசா ஆசிரியர் : புலவர் திரு ம. அருள்சாமி அவர்கள்
- மாத்தா- ஹரி அத்தியாயம் -45
- சாத்தானாகிவிடும் சாத்தானின் வழக்குரைஞர்
- படிப்பினைகள் – பாடங்கள் – கற்றது அரசியல்
- சந்திப்பின் சங்கதிகள்
- தடுத்தாலும் தாலாட்டு
- காற்றினிலே வரும் கீதங்கள் – 2 என்னைப் பிரிந்து செல்லாதே !
- வரித்துக்கொள்வோம் மரணத்தை
- யுத்தத்தின் பின்னரான நிறுத்தமும் பிரகடனமும்
- இவை பேசினால்….
- பிரியம்
- “இலக்கிய விருதுகளும் இழுபறிப்பாடுகளும்”
- “பருவம்” தாண்டிய சமூக வேலிகள் – (கன்னட நாவலாசிரியர் எஸ்.எல்.பைரப்பாவின் புகழ்பெற்ற ‘பருவம்’ நாவலை முன்வைத்து)
- சூரியன் தனித்தலையும் பகல் – தமிழ்நதி கவிதைகள்
- ஹும்