- சங்கனாச்சேரியும் ‘ஸ்டார்டஸ்டு ‘ம்
- விண்வெளியில் செல்லும் வால்மீன் ஒளிமுகில் மாதிரித் தூளைப் பிடித்து வந்த விண்சிமிழ் (Stardust Space Ship Collects Comet ‘s Coma Sa
- பிரபஞ்சத்தில் ஒரு நீலப்படம் ? (Between the Black-hole and the White-hole there is a Worm-hole)
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-6) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- யமேய்க்கனுடன் சில கணங்கள்!
- வீடற்றவன்…
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம்- 5
- கல்லறைக்குச் செல்லும் வழி (மூலம் : தாமஸ் மன் (ஜெர்மனி) )
- மிட்டாதார்
- முதலாம் தீர்மான கோட்பாடு
- பிளவுண்ட சமூகம் என்பதால் என்றென்றும் பிளவுபட்டிருப்பதா ?
- பிறவழிப் பாதைகள் : அன்புள்ள குட்டி ரேவதி
- சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு!
- தனிநபர்-புரட்சி-முன்னெடுப்பு, சில அபிப்பிராயங்கள்!
- (இங்கிலாந்து இடம் பெறாத) எடின்பரோ குறிப்புகள் – 7
- ஒருவரையொருவர் காயப்படுத்தி ரத்தம் ருசித்தலா விவாதம் ?
- மாயச் சரக்குப் பெட்டிகள் (Phantom Cargo)
- கைநுனி மின்மினி
- எச்சங்கள் இன்னும்
- கீதாஞ்சலி (58) ஒளிந்திருக்கும் காதலன்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- ஈரமான தீ
- அபத்தங்களின் சுகந்தம்
- கவிதைகள்
- பெரியபுராணம் – 74 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- காத்திரு காத்திரு
- சாத்தானுடன் போகும் இரவு
- விதிகளின் மீறுகை
- செரிபடட்டும்
- வீடு
- ஹெச்.ஜி.ரசூல் கவிதைகள்
- ஸி. செளரிராஜன் கவிதைகள்
- இரண்டாம் அர்த்த வரிசையின் கதை- சல்மாவின் நாவலை முன்வைத்து
- துக்கத்தின் அலையோசை – கோகுலக்கண்ணனின் ‘இரவின் ரகசியப் பொழுது ‘
- நான் கண்ட சிஷெல்ஸ் – 7
- மு புஸ்பராஜனின் ‘மீண்டும் வரும் நாட்கள் ‘
- சி.கனகசபாபதியின் ‘ புனைகதைகள் ‘
- உயிர்ப்பு தொகுப்பின் பத்து சிறுகதைகள்
- சேதிராயர்
- ஜெயமோகனின் கொற்றவை
- சுப்ரபாரதிமணியன் படைப்பு மனத்தின் செயல்பாடுகள்
- ஹெச்.ஜி.ரசூலுக்கு….
- ஹெச்.ஜி. ரசூலின் ‘வாகாபிசமும் நவீன முதலாளியமும் ‘ கட்டுரைக்கு எதிர்வினை
- கடிதம்
- ஜெயந்தி சங்கரின் மூன்று நூல்கள் வெளியீடு
- பாட்டி
ஸி. செளரிராஜன்

1. சிறு மீன்
கடலில்
வால் துடிப்பின்
சக பயணத்தில்
புது உலகம்
தசைச் சுவரோ ?
இதுவரை கேட்காத
சப்தங்கள்
காதைக் குடைகின்றன
பிரளயம் வடியக்
கோட்டையாய்…
எனக்குக் கீழே
என் சகாக்களின்
தசைக் கூழ்!
இன்னும் சிறிது நேரத்தில்
நானும் ஜீரணம் ஆவேன்.
குகைவழி பார்த்ததில்
வானத்தில் என்ன
அத்தனை சதுரங்கள் ?
2. முகம் சொரிந்த கண்ணீர்
அந்த தார்ச்சாலையின் ஓரம்
புஜ பல பராக்கிரமத்துடன்
பல வர்ணங்களில்
மிகவும் கம்பீரமாய் நிற்கிறார் அனுமன்!
அவர் மீது ஆங்காங்கே
கடந்து செல்வோர் வீசிய
சில நாணயங்கள்
கலைத்திறன்
என்றும் ஆதரவை சம்பாதிக்கிறது
வெயிலுக்கு மரம் நிழலில்
ஒதுங்கி இருந்த ஓவியனுக்கு
உடல் நலமில்லாத குழந்தையின் நினைவு . . .
வழக்கமான நேரத்திற்கு முன்பே
பல மணி நேரம் செலவிட்ட
அந்த ஓவியத்தை
கால்கள் படலாகாது என
மனமில்லாமல் அழிக்கிறது அவன் கை
…. வரைந்த அதே கை!
அழித்து முடித்ததும்
வியர்வை என
அவன் முகம் கண்ணீர் சொரிந்தது.
srirangamsowrirajan@yahoo.co.in