அகரம்.அமுதா
ஆஸ்திரியாவில் தான் பெற்ற மகள் எலிசபெத்தை 24 ஆண்டுகள் வீட்டின் பாதாளச் சிறையில் வைத்து அவள் ஏழு குழந்தைகளுக்குத் தாயாகக் காரணமானான் ஜோசப் ஃபிரிட்சல்!
-செய்தி-
(எலிசபெத்தின் நிலையிலிருந்து எழுதப்பட்டது!)
காமக் கயவனவன் கைக்குள் சிறைப்பட்டுச்
சாதப் பொழுதுகளில் சீரழிந்(து) -ஊமையாய்
இன்றுவரை வாழ்வில் இடர்பட்டேன் வேறுண்டோ
என்போல் உழந்தார் இடர்?
தொட்டில் உறவைத் துளிர்த்துவரும் காமத்தால்
கட்டிலுற வாக்கிக் களித்திட்டான் -இட்டமில்லாத்
தன்மனையைக் கூடத் தழுவத் தடையிருந்தும்
என்றனுக் கிந்தநிலை ஏன்?
அழுது புலம்பி அவனிருதாள் பற்றித்
தொழுது துவண்டு; துடித்தேன் -உழன்றேன்
இனிப்புத்தான் என்மேனி என்றெறும்பாய் மொய்த்தான்
நினைக்கத்தான் கூசுதென் நெஞ்சு!
அன்னைக்குத் தன்மகளே ஆனாள் சகக்கழுத்தி
என்னுமிழுக் கேற்பட்ட தென்னாலே! -என்விதி
ஏட்டிலே காணா எழுத்தாச்சே! என்கதை
நாட்டிலே காணா நடப்பு!
வெங்கானம் தானேகி வெந்துத் தணிந்தாலும்
மங்கைநான் முன்புற்ற மாசறுமோ? -பங்கமெல்லாம்
உற்றும் உயிர்வாழக் கற்றேனே! பெற்றவனால்
பெற்றேனே துன்பம் பெரிது!
அன்பைப் பொழிந்துநாளும் அன்னையவள் மஞ்சத்தில்
தன்னை வருத்தித் தவம்கிடந்து -முன்னம்
கொடுத்தான் உயிரைக் கொடுத்தவன்பின் கற்பைக்
கெடுத்தான் அருகில் கிடந்து!
தான்பெற்ற பெண்ணென்னை தாரமென் றெண்ணியென்
ஊன்மீது மோகவெறி உற்றவனை -யான்பெற்ற
சேய்களெல்லாம் தந்தையெனச் செப்ப விழைந்திடுமே!
தாய்வழிப் பாட்டனைத் தான்!
அப்பனை ஆசையால் ஆளன் எனஅழைக்க
எப்படியென் நெஞ்சம் இடம்கொடுக்கும் -அப்படியே
கற்பனையும் காணக் கடவுவதோ? அய்யோநான்
முற்பிறப்பில் செய்தவினை யோ?
அகரம்.அமுதா
- வார்த்தை மே-2008 இதழில்
- முன்னாள் தெய்வம்
- திராவிட திருக்குறள் பார்வைகள்: எனது விமர்சனத்திற்கு மு.இளங்கோவன் எதிர்வினை குறித்து
- காற்றினிலே வரும் கீதங்கள் – 18 விதி எழுதி வைத்தது !
- ‘பிட்’தகோரஸ் தேற்றங்கள்
- பரிபுறகநராம் லா கூர்நெவில் இலக்கிய விழா
- பதுங்குகுழி நாட்கள் – பா.அகிலன் கவிதைகள்
- பெரும்புதிர்களின் இடையில் : லங்கேஷ் சிறுகதைகள்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூமியின் சிக்கலான உள்ளமைப்பு எப்படித் தோன்றியது ? (கட்டுரை: 28)
- எரியும் நினைவுகளைக் காவிவரும் ஓர் ஆவணப்படம்!
- ‘எழுத்துக்கலை பற்றி இவர்கள்’- 20 – கி.ராஜநாராயணன்
- மணல் வீடு : சுப்ரபாரதிமணியனின் நாடக நூல் – நடித்தலும், நவீனமும்
- உ.வே.சா வின் நினைவில்
- தனி ஆண்மை கொண்ட நெடுவேல்
- தீபச்செல்வன் கவிதைகள்
- கொலை செய்யப்பட்ட உருவங்கள் : ஜாகிர்ராஜாவின் கருத்தலெப்பை படைப்புலகம்
- “அக்கர்மஷி”யின் அடையாளங்களைத் தேடி
- பிறமொழிச சொற்கள் உரியபொருளில ்தான் கலந் தெழுதப் படுகின்றனவா?
- “தமிழ்க் கணிப்பொறி” வலைப்பதிவர் பயிலரங்கு
- உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் திருச்சி மாவட்டக்கிளை துவக்கவிழா.
- வரைமுறைப் படிமங்கள்
- நிழலா..?நிஜமா..?
- Last kilo byte – 14 அஸ்தினபுரத்தின் வாசம் – ஆயில்பாலத்தூவாபனன்
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 10
- கண்ணாடி மனிதர்கள்
- அறை எண் 786ல் கடவுள்!
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 6 (சுருக்கப் பட்டது)
- காலத்தைச் செலவு செய்தல்
- சமூக-அரசியல்-பொருளியல் சிந்தனையாளரும் செயல்வீரருமான குணாவின் ஆராய்ச்சிகள்
- சம்பந்தமில்லை என்றாலும் 12 : தீண்டப்படாதவர் வரலாறு-டாக்டர் அம்பேத்கர்
- கே.எம்.பணிக்கரின் “ஆசியாவும் மேற்கத்திய ஆதிக்கமும்” – ஆசியாவின் காலனிய வரலாறும், கிறிஸ்தவ மிஷனரிகளும்
- ஔரங்கசீப் எழுதிய பிரசித்திப் பெற்றக் கடிதம்
- மைன் நதியில்..
- யாம் மெய்யாய்க் கண்டவற்றுள் – 4
- கல்வியும் வேலை வாய்ப்பும்
- “ஞாபகம் வருதே…ஞாபகம் வருதே’ – சரித்திரம் செய்த சாதுக்களின் சவால்கள்
- தாகூரின் கீதங்கள் – 29 முடிவான மனநிறைவு மரணம் !
- பேற்றேனே துன்பம் பெரிது!
- காதலின் உச்சி
- “பிம்பங்களை உடைக்கும் சாத்தான் – கடவுள்”
- தடுப்பூசி மரணங்கள்!!