தாஜ்
தெளிவுற வழிகாட்டி நின்ற
கை காட்டிகள் எல்லாம்
திசையற்று கவிழ்ந்து கிடக்க
பாதசாரிகளுக்கு
பாதைகள் என்றும்
விடிவதே இல்லை.
ஓரப் பாதைகள்
தடைகளாகிப் போக
புகுந்து புறப்படும்
அவசரத்திலும்
குண்டும் குழியும்
மனிதக் கழிவுகளும்
அடியெடுக்கும்
முயற்சியையும்
கூச வைக்கும்.
மறித்து கண் சிமிட்டும்
மின்னொளிகள்
முன்னேற விடும் நாழியும்
எதிர்பட
முட்டிக் கொண்டு நிற்பர்
எம் மக்கள்.
பொது சாலையில்
இறங்கி நடக்க முனைந்தால்
சகல ஓட்டங்களும்
புகை கக்கி அலறி
கலகலக்க வைக்கும் விதியை.
உந்தலின் நினைவுடன்
தூரத்தைக் கடக்க
பேருந்திற்காக
காத்திருக்குமோர் காலகெடுவில்
பேருந்துகளாலும்
முற்றுப் பெறலாம்
கவிதையான நம்
ஜீவ வாக்கியம்.
————————
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com
- அரபிக்கடலோரம் அறிஞர் அண்ணா
- மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 3
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்-தாமரையம்மையார் அறக்கட்டளை நான்காம் பொழிவு
- தாகூரின் கீதங்கள் – 49 நெஞ்சில் குத்தியது முள் !
- மகா அண்ணா!
- உலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரம் புரியும் பிரபஞ்சப் படைப்புச் சோதனை !
- செப்டம்பர் 2008 வார்த்தை இதழில்…
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் : காலைக் கவிதை -4
- வடக்கு வாசல் இலக்கிய மலர் 2008
- இணையத்தில் தமிழ் அதிகமாக புழங்குகிறது என்கிற செய்தி மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது
- விழுப்புரம் தமிழ்ச்சங்கம் ஏழாம் ஆண்டுவிழா
- நினைவுகளின் தடத்தில் – (18)
- மூன்று
- கடிதம்
- இலக்கியப் போட்டி 2008
- தமிழ் விடு தூது – 1
- பின்நவீனத்துவத்தின் மரணம்/முடிவு அல்லது பின்னைபின்நவீனத்துவம் அல்லது நிகழ்த்தலியம்
- வேத வனம் விருட்சம் 4
- “18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்கள் தேசத்தின் துரோகி”
- ஹைக்கூ – துளிப்பாக்கள்
- பேருந்துக்கு காத்திருந்தவர் மீது.
- தீராத கேள்விக் கரையோரம் பிலால்
- உறுத்தல்…!
- சிதறும் பிம்பங்கள்..!
- மலேசியாவில் கலாச்சார வரவும் செலவும்
- இந்த நூற்றாண்டின் மகள்.
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 9(சுருக்கப் பட்டது)
- விஸ்வரூபம் – அத்தியாயம் எட்டு