கவியோகி வேதம்
கதவு திறந்ததும் பூம்பூம் காளைஎன்
..கண்ணையும் கருத்தையும் கவர்கிறது!–திருமணப்
புதிதில் ‘அவளுக்கு’ எதற்கும்-ஆமாம்
…போட்ட நினைவைக் கொணர்கிறது!
..
கதவின் அருகில் நிற்கும் காளையோ
..கடமையை “ஆட்டிச்’ செய்கிறது!-கண்ணில்
பதிந்த காட்சியில் என்றன் பாட்டோ
..பந்தல் விரித்து மகிழ்கிறது!
..
என்ன அழகுஅந்த ‘ஆமாம்’ மாடு!
…எத்தனை அரியஅலங் கரிப்பு!-ஆகா!
மின்னல் சுற்றிடும் முகில்போல் கொம்பை
..மேவிடும் மணிகள் எழில்தொகுப்பு!
..
மணிகளின் அழகு போதா தென்றா-(கொம்பில்)
..மயில்பீ-லிகளின் அணிவகுப்பு?-ஓ!
பணிகள் இன்னும் முடியா ததுவாய்
..பதக்கம்,ஜிகினா ஜிலுஜிலுப்பு!
..
நீலம்,சிவப்பில் பஞ்சுக் குஞ்சம்
..நிற்கும்அக் ‘குட்டைக்’ கழகுதரும்!-அது
காலம் செடிகளில் போடும் பூக்கள்
..கோலமாய்க் கற்பனைக் காட்சிதரும்!
..
இத்தனை அழகும் போதா தென்றா
..எழிலாய் நெற்றியில் நாமங்கள்?-ஓ!அவை
அத்தனை முயன்றும்,வயிறே நிரம்பா-(இரு)
..அவல ஏழைகளின் ரூபங்கள்!
*******************************
(எனக்குத் திருமணம் ஆகி ஆறு வருடம் கழித்து மனைவியுடன் சொந்த(கிராமம்)
ஊர் சென்றேன்..பொல்லென கிழக்குவெளுத்த போது.ஒரு நாள்.
கதவு திறக்கிறேன்.நகரத்தில் காணக் கிட்டாத அற்புதக் காட்சி..!!
கவிதையும் பிறந்தாச்சு!)
(கவியோகி வேதம்)
kaviyogi.vedham@gmail.com
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 4
- காதல் நாற்பது – 35 காதல் என்பது மனக்குடைவு !
- பூம்பூம் காளை!!
- ஸூபி முஹம்மதிற்கு…..
- கால நதிக்கரையில் – அத்தியாயம் – 20
- சீனக்கவிதைகள்
- எஸ்.ராமகிருஷ்ணனின் ‘இலைகளை வியக்கும் மரம்’
- கவிச்சக்கரவர்த்தி கம்பன் ஆவணப்படம் தொடக்கவிழா
- எனி இந்தியன் பதிப்பகம் நடத்தும் கருத்தரங்கு
- ஊர்விலக்கத்தினூடே தொடரும் பயணங்கள்
- குடியேற்றம் முத்தமிழ்ச்சுவைச்சுற்றம் பதினொன்றாம் ஆண்டு பைந்தமிழ்த்திருவிழா
- அரிமா விருதுகள் 2006
- பத்துப் பைசா பெறாத ஃபத்வாக்கள்
- ‘நாங்கோரி என்ற உறுப்பினர்’ கதையை பற்றி
- மும்பையனுக்கு மும்பாதேவி
- திரு அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரை
- தொடர்நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் இருபத்திநான்கு: அனிஸ்மானின் ஆலோசனை!
- மழை என்னும் மாபெரும் சக்தி – சரவணன் கவிதைத்தொகுப்பு
- பிழைதிருத்தம் 13 : வாய்பாடு – வாய்ப்பாடு
- ஜப்பான் நிலநடுக்கமும், அணுமின் நிலையங்களின் கண்காணிப்பும் -2 (ஜூலை 17, 2007)
- அறிவுநிதி கவிதைகள்
- உருக்கியில் (HIV) உருகும் சிறார்!!
- விமர்சனக்குருவிகள்
- ஒரு புயலும் சில பூக்களும்
- என் வெளி…..
- தஸ்லிமாவின் முன்னோடி : இஸ்மத் சுக்தாய் எதிர்கொண்ட ஆபாச எழுத்து வழக்கு
- ஹெச்.ஜி.ரசூல் மீதான ஊர்விலக்கமும் எழுத்துக்களின் உடனான உரையாடலும்
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்)
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 24