பிரச்சாரம்
ரவிசந்திரன்

சிறுமை கண்டு மேடையில் பொங்கி
கிழே சில்லறைக்கு சிண்டு பிடி
சமத்துவ புரத்திலும் சாதி சண்டை
பாக பிரிவினையில்
வட மொழி மேல் போர் செய்ய
தாய் மொழிக்கு நவீன கல்லறை
நீதி, புரட்சி ,வாழ்கிறது தேய்கிறது என்று கூவி வியாபாரம்
பிரித்து பார்த்தால் அத்தனையும் சொத்தை
வாழ்க்கை தரம் உயர்கிறது என சொல்லி விலை மட்டும் வானில்
தரமோ அருணாசல பாதத்தில்
ஆனந்த மெளனத்தை அழிக்க வந்த
வெட்டிப்பேச்சு
**