This entry is in the series 20110508_Issue

ரவிசந்திரன்


சிறுமை கண்டு மேடையில் பொங்கி
கிழே சில்லறைக்கு சிண்டு பிடி

சமத்துவ புரத்திலும் சாதி சண்டை
பாக பிரிவினையில்

வட மொழி மேல் போர் செய்ய
தாய் மொழிக்கு நவீன கல்லறை

நீதி, புரட்சி ,வாழ்கிறது தேய்கிறது என்று கூவி வியாபாரம்
பிரித்து பார்த்தால் அத்தனையும் சொத்தை

வாழ்க்கை தரம் உயர்கிறது என சொல்லி விலை மட்டும் வானில்
தரமோ அருணாசல பாதத்தில்

ஆனந்‌த மெளனத்தை அழிக்க வந்த
வெட்டிப்பேச்சு

**

Series Navigation