அறிவிப்பு
இணைய நூலகங்களின் வருகை உலகின் எந்த மூலையில் உள்ளோரும் உடனடியாகத் தாம் விரும்பும் நூல்களை வாசிக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தமிழ்ச்சூழலில் முன்னெடுக்கப்படும் இணைய நூலகங்களில் மிகப் பெரியது நூலகத் திட்டமாகும். (www.noolaham.net) ஈழத்தின் 1650க்கும் அதிகமான நூல்களும் இதழ்களும் நூலகத் திட்டத்தினரால் இணையத்தில் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன.
இத்திட்டம் பெருமளவு தன்னார்வலர்களின் முயற்சியால் அனைத்துத் தமிழருக்கும் பயன்படும்வண்ணம் வேகமாக வளர்ந்து வருகிறது. தகவல்களைத் தேடவும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் அறிவை விருத்தியாக்கவும் ஏற்றவகையில் கூட்டுச் செயற்பாடு பல பரிமாணங்களில் முன்னெடுக்கப்படுகிறது. ஈழத் தமிழர்களுடன் இந்தியர்களும் இத்திட்டத்தில் பங்களித்து வருகின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.
2007 இல் முன்னெடுக்கப்பட்டு நிலுவையில் இருந்த மின்னூலாக்கற் செயற்றிட்டங்களின் அடைவுகளில் பெரும்பாலானவை இணையமேற்றப்பட்ட நிலையில் தினமும் குறைந்தது ஒரு மின்னூலை வெளியிடும் முயற்சியில் நூலகத் திட்டம் ஈடுபட்டுள்ளது.
2005 இல் நூறு மின்னூல்களையும் 2006 இல் 250 மின்னூல்களையும் நூலகத் திட்டம் வெளியிட்டிருந்தது. 2006 இறுதியில் மின்வருடி (scan) மின்னூல்களை வெளியிடும் முயற்சி தொடங்கியது. இம்முயற்சி 2007 இல் பெரும் எடுப்பில் தொடர்ந்தது. சுமார் 1200 மின்னூல்கள் 2007 இல் உருவாக்கப்பட்டன. நூலகத் திட்ட ஒழுங்கில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டதால் 2008 இல் முதல் நான்கு மாதங்கள் புதிய செயற்றிட்டங்கள் தொடங்கப்படாமலிருந்தன.
2007 இறுதியில் வலைத்தளம் மீடியாவிக்கியில் இயங்கத் தொடங்கியது. அத்துடன் மின்னூல் வெளியீட்டு ஒழுங்கிலும் முழுமையான மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த மாற்றங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து புதிய செயற்றிட்டமொன்று தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு மின்னூல் இணையமேற்றப்படுகிறது. தொழிலாளர் நாளான மே முதலாம் திகதியிலிருந்து இச்செயற்றிட்டம் நடைபெறுகிறது.
www.noolaham.net என்ற முகவரியில் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக வெளியிடப்படும் மின்னூல்களையும் ஏற்கனவே வெளியாகியுள்ள 1650 க்கும் மேற்பட்ட ஈழத்து நூல்களையும் இதழ்களையும் பார்வையிடலாம்.
noolaham@gmail.com
- ஜெகத்ஜால ஜப்பான் 12. மோஷி மோஷி
- உங்கள் மேம்பாட்டிற்கு ஒரு இணைய தளம்
- நினைவுகளின் தடத்தில் – (10)
- செவ்வாய்க் கோளில் சீராக இறங்கித் தடம்வைத்த ·பீனிக்ஸ் தளவுளவி (மே 25, 2008)
- யாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 7
- அறை எண் 305 ல்- வயிற்றெரிச்சல்
- காற்றினிலே வரும் கீதங்கள் – 21 எதுவும் சொந்தமில்லை இப்புவியில் !
- கர்நாடகத்தில் பா.ஜ.க வெற்றி சொல்வது என்ன?
- ஜப்பான்-ஒரு உட்டோப்பியன் (Utopian) கனவா?
- வார்த்தை – ஜூன் 2008 இதழில்
- தாகூரின் கீதங்கள் – 32 முன்னறியாப் பாதையில் நடந்து !
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 9 (சுருக்கப் பட்டது)
- மரங்களும் மனிதர்களும் : ழான் ழியோனோவின் “மரத்திற்கு வித்திட்ட மாமனிதன்”
- அம்மாவின் ஆசை
- அவனுக்கு நீங்களென்று பெயர்
- உங்கள் சாய்ஸ்
- 35வது இலக்கியச்சந்திப்பு ஸ்ருட்காட், ஜேர்மனி. ஜூன் 14-15, 2008.
- மனவெளியின் மறுபக்கம்
- கடவுளின் மொழி ( பாவண்ணனின் “புன்னகையின் வெளிச்சம் ” கவிதைத்தொகுதியை முன்வைத்து)
- பரிவிற் பிறந்த இலக்கியம்
- தனித் தமிழ்
- இலக்கியச் சந்திப்பு
- நூலகத் திட்டத்தினரின் தினமும் ஒரு மின்னூல் வெளியீடு
- ஹாங்காங் தமிழ் வகுப்பு நான்காம் ஆண்டு விழா
- ஆர்.கே.நாராயணன்: ஆங்கிலத்தில் எழுதிவென்ற சென்னைத் தமிழர்
- காலச்சுவடு நடத்திய சுந்தரராமசாமி -75 சிறுகதைப் போட்டியில் எம்.கே. குமார் எழுதிய சிறுகதை முதல் பரிசு பெற்றிருக்கிறது
- தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் சங்கம் மூன்றாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்
- ஒர் எழுத்தாளனின் கடைசி கலந்துரையாடல்
- ஈஸ்வர அல்லா தேரே நாம்
- என்னை மட்டும்.. ..
- கடிதம்
- குற்றாலக் குறவஞ்சியும் திருமுறைப் பெருமையும்
- Last Kilo byte – 15 : தேடலும், தேடியதும் உரச
- விழுப்புரம் ‘தமிழ்க் கணிப்பொறி’ வலைப்பதிவர் பயிலரங்கு-தொடர்ச்சி
- த.அகிலனின் ‘தனிமையின் நிழல் குடை’
- மீரான் மைதீனின் சித்திரம் காட்டி நகர்கிறது கடிகாரம் – நூல் விமர்சனம்
- பேராண்டிகள்: தாண்டவக்கோனின் நான்காவது குறும்படம்
- கூட்டத்தின் கடைசியில் ஒருவன்- சிறுகதை
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 13
- கவிதைகள்
- மரம் தாவும் சிலந்திகள்
- முன்கர்நகீர் என் தோழர்
- அவர் தன்னொடு எடுத்துச் சென்று விட்ட உலகம்
- அறிவியல் தமிழின் ஆரம்ப நாயகன் – அப்புஸ்வாமி
- பெண்மை விலங்கில்
- ‘தொராண்டோ’வின் இரவுப் பொழுதொன்றில்….