வ.ஐ.ச.ஜெயபாலன்
இன்னும் தொடுவானில் கையசைக்கும்
மணக்கோலச் சூரியன்.
கீழே படுக்கையில்
பொறுமை இழந்த பூமிப் பெண்
வெண்முல்லைப்பூ தூவிய
நீல மெத்தைவிரிப்பை உதைக்கிறாள்.
எப்படியும் வந்துவிடுகிறது விடைபெறும் நேரம்.
என் இரு கண்களிவை என்ற துடுப்புகளை
கரையில் வீசிவிட்டுச் செல்கின்றான் மாலுமியும்.
வழித்துணையை போற்றினும் புணரினும்
எப்படியும் ஒருநாள் வந்துவிடுகிறது
விடைபெறும் நேரம்.
தோழி
உடன் இருக்கிற இன்பங்களும்
பிரிகிற துன்பங்களும் அடுக்கிய
நினைவு நிகழ்வு நூலகம் அல்லவா
நம் வாழ்வு.
பறவைகளாக உதிர்ந்து உதிர்ந்து
ஆர்ப்பரித்த வானம்
இனி வீதியோரப் பசும் மரங்களுள் அடைந்துவிடும்.
என் தலைக்குமேல் இன்று நிலா முளைக்குமா
நட்சத்திர வயல்தான் பூக்கப் போகிறதா
அல்லது கறுப்புக் கம்பளத்தில் பறக்குமா
இந்த மாரி இரவு.
கண்சிந்தும் பிரிவுகளில்
நிறைகிறது வாழ்வு.
ஒவ்வொரு தோழ தோழியர் செல்கிறபோதும்
காதலியர் வசைபாடி அகல்கையிலும்
நாளை விடியாதென உடைந்தேன்.
இனி முடிந்ததென்கிற போதெல்லாம்
பிழைத்துக் கொள்கிறது
வெட்டுண்ட தாய் அடியில் புதிதாய் ஒரு
குட்டிவாழை பூக்கிற உலகு.
என் இன்றைய கனவுகளின் நாயகியோ
எப்போதும் காதலில் நீந்துகின்ற மீன்.
இன்னும் எத்தனை நாள் எத்தனை நாள்
எனக்காக அந்த
ஏந்திழையாள் யாழ் மீட்டும் ?
தோழி உன் யாழிசையில்
சந்தணமாய் எனது மொழி தேய்கிறது.
கிடங்கில் திராட்சை மதுவாய்
முதிர்கிறதென் கவி மனசு.
எச்சில் ஒழுக வழி மறித்து
முத்தமிடும் துருவத்துப் பனிக் காற்றிலும்
எரிகிறது என் ஆத்மா.
கண்டங்களே அசைகிற உலகில்
மனிதர்களிடையே நிலையானது எது ?
எங்கள் நடுகல் வேலித் தாய் மண்ணில்
கரு கறுத்த மேகங்களின் கீழ்
பஞ்சு விதைகளாய் மிதக்கும்
மாவீரர் கனவுகள்போல
உயிர்தெழுமெம் வாழ்வு.
-2005. May
visjayapalan@yahoo.com
- கவிதைக் கோபுரத்தின் பொற்கலசங்கள்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல் நான்காம் காட்சி பாகம்-1)
- காற்றுப் பிரிந்த போது. .
- நட்போடு வாழ்தல்
- முயல்தலில் ஒளிர்தலானது….
- அபகரிப்பு
- The Day After Tomorrow கடல் நீரோட்டம் மெதுவாவதால், பிரிட்டானியா கடும் குளிரை எதிர்நோக்குகிறது
- ஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் (1847-1922) தொலைபேசி கண்டுபிடிப்பு -1
- அசையும் நிழல்கள்
- வேட்கை வேண்டும்
- அகவியின் நூல் வெளியீடும் விமர்சனமும் -அறிவிப்பு
- தமிழ் சினிமா எழுத்தாளர்களின் விபச்சாரச் சிந்தனை:
- ஒரு கடிதம்
- வாழும் தமிழ் – புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் யூன் 4, சனிக்கிழமை ஸ்காபரோ சிவிக் சென்டர்(ரொறன்டோ-கனடா)
- காலம் எழுதிய கவிதை – ஒன்று
- எங்கே என் அம்புலி ?
- தோழமையுடன்….
- கலாச்சாரமும் பண்பாடும் பெண்களுக்கு மட்டுந்தானா! ?
- இரயில் பயணங்களில்…
- அவனும் அவளும்
- திருவண்டம் – 2
- கூண்டுகள்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல் நான்காம் காட்சி பாகம்-1)
- சிந்திக்க ஒரு நொடி -தமிழ் சாதி
- அனைத்துலகத் தமிழிலக்கிய அடையாளமும் இப்போதைய விவாதங்களும்
- ஹாங்காங்கில் தமிழ்க் கல்வி
- கோபி கிருஷ்ணனின் ‘முடியாத சமன் ‘ சிறுகதையின் நாடகமாக்கம். சனிக்கிழமை, ஜூன் 04, 2005 தக்கர் பாபா வித்யாலயா
- இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்வரும் சட்டமன்றத்தேர்தலிலும் பிரதிபலிக்குமா ?
- பணம் தேடுவதில் உள்ள ஆர்வம் குடும்பப்பிணைப்பில் இல்லை!
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – 6 – மார்ட்டின் லூதர் கிங் – பாகம் 1
- இந்திய நிறுவனங்களை ஒதுக்கிவிட்டு மாண்சாண்ட்டோ பன்னாட்டு விதை நிறுவனத்துக்கு மத்திய அரசு ஆதரவு தருகிறது
- பெரியபுராணம்- 42 திருக்குறிப்புத்தொண்டர் நாயனார் புராணம்
- ராணி
- கீதாஞ்சலி (25) நெஞ்சில் மலரும் நறுமணம்! மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்