தேவமைந்தன்(அ.பசுபதி)
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
வணக்கம்.
‘திண்ணைப் பேச்சு – ஒரு தன்னிலை(இன்மை) விளக்கம்’ வாசித்தேன்.
“சார்பற்றவர்கள் தான் ஜனநாயக உணர்வை உயிர்ப்புடன் வைத்திருப்பவர்கள்”
என்ற கருத்து மிகவும் மெய்யானது.
எனக்கு மலர்மன்னன் தொடர்பான உரைமடல் எழுதத் தயக்கம். இருந்தாலும், அவரை மதிப்பதால் நன்றியும் எதிர்வினையும் ஆற்ற வேண்டி வந்தது. இன்னும் அடுக்கடுக்கான விவரங்கள் புதுச்சேரி வரலாற்றுச் சங்கத்திலும் பிரெஞ்சிந்தியக் கழகத்திலும் (நானெழுதியது தொடர்பாக) உள்ளன. மிகவும் தொல்லைப்பட்டு, சுருக்கி, எல்லோரும் சரிபார்க்கத்தக்க ஆதாரங்களை மட்டும்
தந்தேன்.
தாங்கள் இந்த விளக்கம் தந்ததில் உண்மை மட்டுமே உள்ளது. இன்மை எங்கும் தென்படவில்லை..
தொடர்ந்து மறைக்கப்பட்டுவரும் தமிழறிஞர்களைக் குறித்தும் தமிழ் இலக்கண இலக்கியங்கள் பற்றியும் கட்டுரைகள் வெளியிட்டு வருவதொரு சான்று போதாதா! அதேபொழுது வேறுபட்ட துறைகளைச் சார்ந்தவர்கள், தங்களுக்கு வேறுபட்ட துறைகளை அறிந்து கொள்ளவும் திண்ணை இடம் கொடுப்பது போதாதா? குறை சொல்ல வேண்டும் என்று தீர்மானித்து விட்டால், அன்னை தந்த பாலையும் குறை சொல்லலாம் என்று கண்ணதாசன் பாட்டெழுதிக் காட்டவில்லையா? “மனிதர்கள் வரலாம்; வந்ததேபோல் போகவும் செய்யலாம்; நானோ எஞ்ஞான்றும் ஓடிக்கொண்டே இருப்பேன்” என்று மலைச்சாரலின் சிற்றோடையொன்று சொல்வதாகக் கவிஞன்
சொல்லும் இலக்கணம், சிற்றோடைக்கு மட்டுமல்ல; இயங்கும்(dynamic) ஒவ்வொன்றுக்கும் பொருந்தும். ‘திண்ணை’ – என்ன விதிவிலக்கா? அதில் எழுதுபவர்கள் – எழுதாதவர்கள் – எழுதுவதை விரும்பாதவர்கள் – எழுதுவதை நிறுத்திக் கொள்பவர்கள்.. ஒருவருக்கு மற்றொருவர் தாழ்வா? திண்ணையில் வந்து அமர்பவர்கள் எல்லோர் குறித்தும் திண்ணைக்கு மனிதர் என்ற ஒரே நோக்குதான்!
அன்புடன்,
தேவமைந்தன்(அ.பசுபதி)
karuppannan.pasupathy@gmail.com
- தைவான் நாடோடிக் கதைகள்
- அக்கினிப் பூக்கள் !
- தாகூரின் கீதங்கள் -4 உன் திருவிளையாடல் !
- ‘ஆடலரசன்’ இரகுநாத் மனே
- பெண்கள் நுழைய மறந்த துறைகளும், மறுக்கும் துறைகளும்
- NEW EXHIBITION OF V.P. VASUHAN : PAPILLON DE PARIS 10ème
- Tamilnadu Thiraippada Iyakkam And National Folklore Support Centre – Contemporary World Cinema
- திசை எட்டும் இதழின் நான்காம் ஆண்டு விழா – நல்லி -திசை எட்டும் மொழிபெயர்ப்பு விருது வழங்கும் விழா
- புதைந்து போன இரகசியம்!
- National Folklore Support Center – Prof Paula Richman “Folklore and Modern SHort Stories in Tamil”
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! கருமைப் பிண்டம் (Dark Matter) என்றால் என்ன ? (கட்டுரை: 4)
- “கிளை தாவி வரும் மின்னல்”
- காந்தியின் உடலரசியல்
- நினைவுகளின் தடத்தில் (2)
- லா.ச.ரா.வுக்கு அஞ்சலி – 3 அம்பாளின் தொப்புள்கொடி
- கடிதம் (ஆங்கிலம்)
- அ. முத்துலிங்கம் கதைகள் / உயிர்களின் மீதான வற்றாத கருணை
- தமிழில் சிறுகதை – தொடக்ககால இலக்கணங்கள்
- தமிழ்வாணன் பற்றிய திரு.மைத்ரேயனின் கட்டுரை
- ‘திண்ணைப் பேச்சு – ஒரு தன்னிலை(இன்மை) விளக்கம் பற்றி
- பன்னாட்டுக் கருத்தரங்கம்
- அது அங்கே இருக்கிறது
- கலவரப் பகுதி
- பேசும் யானை
- திரைகடலோடி,..
- 49வது அகலக்கோடு
- மாத்தா ஹரி அத்தியாயம் -37
- கடன்
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 4 காட்சி 1
- இறந்தவன் குறிப்புகள் – 3
- குறிப்பேட்டுப் பக்கங்கள் – 2!
- படித்ததும் புரிந்ததும்..(11) இலவச ஆட்சி – கண்ணாமூச்சி ஏனடா – துக்கடா!
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 8 – அரசியல் எழுப்பிய புயலில் முகம் மாறியது தில்லி
- இடதுசாரி இரட்டை டம்ளர்
- தமது தரப்பு வாதம் செய்ய காரை சிபி இன்றில்லை
- ஓரம் போ!
- வாடிக்கை கவுடா, வாடிய தாமரை : கர்”நாடக” அரசியல்
- மும்பை தமிழர் அரசியலும் தாதாக்களும்
- மீன்பாடும் தேன்நாடு
- இறுதி மரியாதை!
- பத்து வயதினிலே…