This entry is in the series 20090129_Issue

செல்வராஜ் ஜெகதீசன்


காரின் முன்புறம்
அமர்ந்தபடி
காலையில் கண்ட
வெண்புறா

திறந்த கதவுச்
சத்தத்தில்
தாவிப்போய்
தன் இருப்பிடமாய்
கொண்டது
இன்னொரு காரின்
இரு சக்கரங்களுக்கு
இடைப்பட்ட
இடமொன்றை.

அலுவலக வேலைகள்
அத்தனைக்கும் இடையில்

இன்னமும் சிறகடித்து மனதில்
இம்சையாய் அந்த வெண்புறா

இடம் மாறி
இருக்குமா – அந்த
இன்னொரு கார்
கிளம்பும் ஓசையிலும்.


SJEGADHE@tebodinme.ae

Series Navigation