சிறகடித்து…
செல்வராஜ் ஜெகதீசன்

காரின் முன்புறம்
அமர்ந்தபடி
காலையில் கண்ட
வெண்புறா
திறந்த கதவுச்
சத்தத்தில்
தாவிப்போய்
தன் இருப்பிடமாய்
கொண்டது
இன்னொரு காரின்
இரு சக்கரங்களுக்கு
இடைப்பட்ட
இடமொன்றை.
அலுவலக வேலைகள்
அத்தனைக்கும் இடையில்
இன்னமும் சிறகடித்து மனதில்
இம்சையாய் அந்த வெண்புறா
இடம் மாறி
இருக்குமா – அந்த
இன்னொரு கார்
கிளம்பும் ஓசையிலும்.
SJEGADHE@tebodinme.ae