- நான்காவது கொலை !!! (அத்யாயம் 10)
- வேஷம்
- ஓட்டம்
- ஜனனம்
- எனதும் அவளதுமான மழைபற்றிய சேகரிப்புகள்
- சமயவேல் கவிதைகள்
- நம்பிக்கை
- கவலையில்லா மனிதன்
- நள பாகம்
- பாரத அணுகுண்டைப் படைத்த டாக்டர் ராஜா ராமண்ணா
- காசநோய்க்கு எதிராக அதிகப்படியான வேலை
- கடவுளும் – நாற்பது ஹெர்ட்ஸும்
- எழுதப்படாத தீர்ப்புகள் (ஹெகலின் தீர்ப்புகள் குறித்து)
- சீனம் கற்க தமிழில் முதல் நூல்
- நீ. அரவிந்தனின் வீரசவர்க்கார கருத்தியல் குறித்து..
- சீன மொழி – ஒரு அறிமுகம் புத்தகம் பற்றி
- இந்த வாரம் இப்படி – சூலை 28 2002
- காவிரி ஆறு – ஒரு சோகக் கதை
- மெழுகுவர்த்திகளும் குழந்தைகளும் (எனக்குப் பிடித்த கதைகள் -30 அந்தோன் செகாவின் ‘வான்கா ‘)
- மருதம் – புதிய இணைய இதழ்
- தலைகளின் கதை (Hayavadana – Girish Karnad)
- சமோசா
- ஒரு மனிதன் 500 ஆண்டுகள் வாழ்வது எப்படி ?
ஆனந்தன்

சில நேரங்களில்,
கவலைப்படவில்லையே
என்று கவலை..
உலக அழகி மனைவியானாலும்
பிரபஞ்ச அழகி கிடைக்கவில்லையேயன்றும்
சில நூறுகள் கிடைத்தால்
ஆயிரங்கள் கிடைக்கவில்லையேயன்றும்
இருக்க வீடு கிடைத்தால்
ஆள அரசவைக் கிடைக்கவில்லையேயன்றும்
இருப்பதை விட்டுவிட்டு
பறப்பது கிடைக்கவில்லையே
என்றும் கவலை…
ஆசைகளைத் துறக்க வேண்டுமே
என்ற கவலை புத்தனுக்கு
பாரதப் போரை வெல்ல வேண்டுமே
என்ற கவலை தருமனுக்கு
எதிர் வரும் தேர்வை
வெல்ல வேண்டுமே
என்ற கவலை மாணவனுக்கு,
மானிடனுக்கு,
தலை விரித்தாடும் தீவிரவாதம்
நிறுத்த வேண்டுமே
என்று கவலை…
என் வாழ்வில்
கவலையில்லா மனிதனைப் பார்ப்பேனா
என்ற கவலை,
எப்பொழுதும், எனக்கு..!
***
ஆனந்தன்
k_anandan@yahoo.com