ஸ்ரீமங்கை
____
அந்த கடல் அமைதியாகத்தான் இருந்தது..
நிலவின் அறிமுகம் நிகழும்வரை.
நீலத்தில் தவம்செய்யும்
பலபொழுதும் பகலில்.
திடாரென்று ஏதோநினைத்து
அடிமணல் வாரியிடுத்து
கருஞ்சாந்துக்குழம்பாய்,
திட்டுத்திட்டாய் குமிழித்து
கரைகளில் வண்டலடிக்கும்.
நிலவின் கண்ணாமூச்சி விளையாட்டில்
பித்தான கடலின் பதற்றங்கள்
மனிதனைவிட மோசம்.
நாளை நிலவு விடைபெறுமென
உணர்ந்ததாய்க் கடலின்
ஓதஓலங்கள்.காற்றில் கசிந்து
கானல்வரிகளாய்..
பொங்கிப் பொங்கி பாறைகளில்
முட்டிமோதி அலைபாய்ந்து.
வெள்ளைநகங்களால் கரைகளில்
கீறிப் புண்படுத்திக்கொண்டு,
செத்ததை கரைசேர்த்துப்
பொருமிஅழும்.
காயல்களில் ஒருங்கி
தென்னைகளின் வேர்களில்
பிரிவின் வலியைப் புலம்புகையில்
படகுகள் மெல்ல ஆடி மெளனமாய்
துக்கம் விசாரிக்குகையில்,
நெய்தலின் தீவிரம்
காற்றில் பரவி ஈரப்பதமாய்
எங்கும் வியாபிக்க…
ஓ… சோகத்தின் சிகரங்கள்
கடலின் ஆழங்களில்,
உடைந்த சிப்பிகளின் உள்சேரும் மணலில்..
நிலவின்மேல் கோபமில்லை எனக்கு…
இந்தக் கடலைப்பார்த்தால்தான் பச்சாதாபம்..
—-
kasturisudhakar@yahoo.com
- வாஷிங்டன் சந்திப்பு: எழுத்தாளர் வாஸந்தி
- முகத்தைத் தேடி
- கவிதை
- கடல் தினவுகள்
- இரவின் மடியில் ஆனந்தமாய் உறங்க…
- மத மாற்றமா ? மத ஒழிப்பா ?
- இணையத்தில் தமிழ் நூல்கள்
- கலாசாதனாலயா – சென்னை நடனக் குழு
- எழுத்தாளர் கந்தர்வன் மறைவு
- கடிதம் – 29 ஏப்ரல்,2004
- கேள்வியின் நாயகனே!
- சிவவாக்கியர் திருவாக்கியங்கள்
- கவிதை உருவான கதை – 4
- நாய்க்கும் நீரிழிவு வரும்
- இரண்டு கவிதைகள்
- இன்னும் விடியாமல்
- போய்வருகிறேன்.
- உடல் தீர்ந்து போன உலகு
- நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன
- விழிமீறல்
- வரவுயில்லாத செலவு
- கவிதை
- நட்பாராய்தல்
- கதவுகளும் சுவர்களும்
- விடியல்
- வினாக்கள் வியப்புகளாகட்டும்
- தமிழவன் கவிதை-3
- உள்ள இணையாளே
- உடலால் கட்டிய வாழ்வு
- தமிழ்வலை சுற்றி…. 1 (நா கண்ணன், உதயா, அருணா ஸ்ரீநிவாஸன்)
- முற்போக்கு எழுத்தாளர் கந்தர்வன் காலமானார்
- அறிந்தே அம்மணமாக இருக்கவில்லை
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 3
- திருடராய் பார்த்து திருந்தாவிட்டால்….
- இந்தியா பாகிஸ்தான் பாடப்புத்தகங்களில் பொய்களை நீக்க வேண்டும்
- வாரபலன் – ஏப்ரல் 29,2004 – தூக்கங்கெடுக்கும் தூக்கம் , ஸ்விஸ் நாடகக்காரர்கள் , மலையாள ஹரிதகம்
- ரஜினி – ‘ தமிழ் நாட்டின் குழப்பவாதி ‘
- ஜோனதன் கிர்ஷ் எழுதிய ‘தெய்வங்களுக்கு எதிரான தெய்வம் ‘
- நாராயண குரு எனும் இயக்கம் -1
- சூன்யம்
- கதை 6 : வஹீ வந்தவரும் வஹீ எழுதியவரும்
- கரடி ரூம்
- தவிப்பு
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம்-17
- ஆறுவது சினம்
- பிசாசின் தன் வரலாறு – 3
- விருதுகள், பரிசுகள் – சில கேள்விகளும், குறிப்புகளும்
- பாவண்ணனின் இரண்டு நுால்கள்
- சமீபத்தில் படித்த நூல்கள் 1- ராஜ் கெளதமன் , எல்லீ வீசல் , கவிஞர்கள், ரோஜர் வாடிம்
- சொற்புணர்ச்சி விளக்கச்சொற்கள் 2
- பிரென்ச் புரட்சி நூற்றாண்டில் தோன்றிய பொறியியல் மகத்துவமான ஐஃபெல் கோபுரம் [Eiffel Tower in Paris (1887-1889)]
- இன்னொரு தினம்:
- கவிதைகள்
- அன்புடன் இதயம்- 15
- ஞாபக மழை
- ஏமாற்றுக்காரி
- இயக்கம்
- தாலாட்டு
- கடைசியாய்….
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -21)