கே. ஆர். மணி
வண்ணத்துப்பூச்சி
வழிதவறி எப்படி என்
வீட்டில் நுழைந்தது.
புத்தக அலமாரி மேய்தலில் அது
அமைதியாய்விடும் என்று
அற்பமாய் எண்ணினேன்.
புத்தகங்களை வேகமாய்
புரட்டிவிட்டு நகர்ந்துவிட்டது.
எந்த பக்கங்களை தனது இறக்கைகளில்
இறக்குமதி செய்துகொண்டது ?
என் அழகான கழிப்பறையில்
நுழையாததில் எனக்கு வருத்தம்தான்.
கடவுளர்களின் அறையில்
தனது சிறகுகளால் ஏதையோ
தூளாவியது.
சமையலைறையில் தனது
இறக்கை தூசுகளால் அசுத்தப்படுத்துமோ
என்று அஞ்சினாள் அவள்.
ஐந்துவயது அஸ்வத்தாமனுக்கு
அதை கண்டதும்பயம்.
அவன் பார்த்த வண்ணத்து பூச்சிகள்
புத்தகத்தைவிட்டு பறப்பதில்லை.
தொலைக்காட்சிக்கு வெளியே வருவதில்லை.
அவன் பயந்த கண்களை கண்டதும்
அதற்கும் சந்தோசம் பிறந்திருக்கலாம்.
எலி, கொசு, கரப்பான்பூச்சி
விரட்ட இருக்கிறது மருந்துகள்.
வண்ணத்துப்பூச்சியை
எதை எடுத்து அடிக்க, விரட்ட ?
யோசனையிலே படுத்தோம்.
மூடிய வீட்டில் அது எங்கேயோ
சுற்றிக்கொண்டிருக்கலாம்.
மின்விசிறியில் அடிபட்டு
செத்துபோயிருக்கலாம்.
ஏதாவது இடைவெளி கண்டு
தப்பிப்போயிருக்கலாம்.
எதற்காக வந்ததோ அதை
எடுத்துக்கொண்டுபோயிருந்தால் சரிதான்.
அது சரி,
அது எதற்காக வந்திருக்கும் ?
mani@techopt.com
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 10
- தாகூரின் கீதங்கள் – 50 ஆசீர்வதிப்பாய் அவனை !
- போலீஸ்காரன் மகன்
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஒன்பது
- வள்ளலாரின் சீர்திருத்தம் -என்னதான் சொன்னார்? எதைத்தான் கேட்டோம்?
- நான்கு கவிதைகள்
- எதைத்தேடி?
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் காலைக் கவிதை -5
- அக்டோபர் 2008 வார்த்தை இதழில்…
- வேதவனம் விருட்சம் 5
- வழியும் தெரியாத உன்னை
- நினைவுகளின் தடத்தில் – (19)
- புதுக்கவிதை அரங்கம்
- மனித நேயத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்க ஒன்றிணைவோம்.
- பாரதி கலை மன்றம் பஹ்ரைன்
- ‘காட்சிப்பிழை’ திரையிதழ் நடத்தும் வெகுமக்கள் சினிமா பற்றிய இரண்டு நாள் கருத்தரங்கு
- TamFest 2008 – An Evening of Fun and Galatta
- சாகாத கருப்பு யானை
- மலாய் மொழியில் : ABDUL GHAFAR BAHARI கவிதைகள்
- உள்ளிருந்து கேட்கும் குரல்!
- புளிய மரமும் குரல் சுமந்த பள்ளமும்
- நாளைய உலா
- நடுநிசி
- ஆசை ஆசை.. இப்பொழுது பேராசை..
- துவாரகனின் ‘மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்’ கவிதைத் தொகுதி பற்றி ஒரு சாதாரண வாசகனின் மனப்பதிவுகள்
- காதிலே கேட்ட இசை
- தவிர்க்க முடியாதவைகளாய்…
- பிறர்தர வாரா
- குகைச் சித்திரங்களின் அவுலியா
- நிரந்தரம் இல்லா நின்மதியில்……
- ஒரு சோம்பேறியின் கடல்
- மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 4
- உண்மை,அறிவு,அதிகாரம் குறித்த விளிம்புநிலை இஸ்லாம் என்ற கோட்பாடு
- காஷ்மீர்: குழியும் பறிக்கும் குதிரைகள் – 1
- ஆப்பிரிக்கப் பஞ்சாயத்து
- உலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரம் – 2 முதல் சோதனைக்குப் பின் நேர்ந்த ஹீலியக் கசிவு விபத்து !
- போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்