This entry is in the series 20020512_Issue

சதீஷ்


உன் போலத்தான் இந்த கவிதையும்.
தூரமாய் நின்று கொண்டு
தொந்தரவு செய்கிறது.
எண்ணமாய் மனதில் நிரம்பி
காகிதத்தில் எழுதி வைக்கச்சொல்லி
சவால் விடுகிறது.
நெருங்கி அருகில் வர
சொல்லிழக்க வைக்கிறது.
எனக்காய் வசப்படுத்த எத்தனிக்கையில்
முரண்டு பிடிக்கிறது.
‘சாி, வேண்டாம் போ ‘ என்றிருந்தால்
கிட்ட வந்து கொஞ்சுகிறது.
சட்டென்று இழுத்து என்னருகில்
இருத்திக் கொள்ள
கைகளில் மலர்கிறது
மிக அழகாய்.

Series Navigation