இரு பிரம்மப் படிமங்கள்
Published February 6, 2011 • By
கலாசுரன்
கலாசுரன்

*
அவர்களுக்கான
வானத்தின் ஓரங்களில்
நட்சத்திரங்களையும்
கோள்களையும்
தொங்கவிட்டான்
உள்ளிருந்து ஒளிரும்
விளக்குகளை ஏற்ற
அனைத்தும்
நிறைவேறிற்று
அவனது விருப்பப்படி
சில விண்மீன்களை
மாலையாகக் கோர்த்து
கண்சிமிட்டிக்கொண்டிரு.. என்றான்
அதுவும்
அப்படியே ஆயிற்று
சலனமற்று
பார்த்துக்கொடிருந்தாள்
சிறுமி ஒருத்தி
ஊழிகள் கடந்து
மிதந்தது
அவள் சிந்தனைகள்
படைத்தவை அனைத்தும்
உள்வாங்கி நிற்கும்
இரு பிரம்மப் படிமங்களாக
அவள் கருவிழிகள்
அசைவுராதிருக்க
அதற்குள்
அவனும்
சிறு புள்ளியாகவே
அவனுக்குத் தெரிந்தது..
*
****
–கலாசுரன்