- அறிவியல் சிறுகதை வரிசை 7 – நம்பிக்கையாளன்
- நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் – 52
- இன்று புதிதாய்ப் பிறந்தோம்.. ?
- சுனாமி
- சுனாமி
- கடற்கோள்
- ஞானக்கோமாளி – கவிதாப் பிரசங்கம்
- கவிக்கட்டு 42
- பெரியபுராணம் – 24
- தவறான திருப்பம் (ஆங்கில மூலம் : ஆகா ஷாஹித் அலி)
- கடற்கோள்
- அழுகிறபோது எழுதமுடியுமா ?
- கடலம்மா….
- இந்து மாக்கடல் பூகம்பத்தில் எமனாய் எழுந்த பூத அலை மதில்கள்! (Earth Quake Giant Sea Waves Attack South Asian Countries 2004)
- விலங்குகளுக்கு ஆறாம் அறிவு உண்டு என்ற நம்பிக்கையை வலுப்படுத்துகிறது ட்சுனாமி
- வாரபலன் டிசம்பர் 30,2004 – தோழர் நிர்பன் , யசோதர – யமுனா, அரசாங்க விருந்து ,கொலைகள் அலைகள்
- பெரானகன்
- சூசன் சாண்டாக் – ஒரு வாசகனின் அஞ்சலி
- சமஸ்கிருதமயமாதலும் நடுக்காட்டு இசக்கி அம்மனும்
- கடல்கோள் அழிவிற்கு உதவுவோர் கவனிக்க வேண்டியது!
- சுனாமி அழிவு :: உரிமையும் கடமையும்
- இராக்கில் இஸ்லாமிய மக்களாட்சி ? – பகுதி 2
- கடல் கொந்தளிப்பைக் குறித்த எச்சரிக்கையில் குளறுபடி
- பத்மநாபஐயர்
- விடுபட்டவைகள்-3 -தீர்க்கம்
- ‘சும்மா வருவாளா சுகுமாரி ? ‘ – இசை விழா விமர்சனம் – II
- தெற்காசிய இந்து/இஸ்லாமியப் பண்பாடுகள் – ஒரு மறுசிந்தனை -1
- சாகித்ய அக்காதமி விருதுகள் – தமிழன்பனும் சகரியாவும்
- சங்கீதமும் வித்வான்களும்
- மக்கள் தெய்வங்களின் கதைகள் – 15. வன்னியன் கதை
- மெய்மையின் மயக்கம்-32
- ஓவியப் பக்கம் – பதினொன்று – ஜார்ஜ் கிராஸ்ச்- ஓவியமும் அரசியலும்
- ரெஜி
- கடிதம் டிசம்பர் 30,2004 – பத்திரிகைகளின் தவறான போக்கு!
- சதாத் ஹசன் மண்டோ நூல் வெளியீடு
- Reporting from Chennai about the Relief efforts on the Tsunami hit areas.
- திரு பத்மநாப ஐயருக்கு 2004 ஆம் ஆண்டிற்கான இயல் விருது
- கடிதம் டிசம்பர் 30, 2004-எஸ். அரவிந்தன் நீல கண்டன்: அருள் செல்வன் கந்த சுவாமி: சலாஹுத்தீன்: ஜோதிர் லதா கிரிஜா
- கடிதம் டிசம்பர் 30,2004
- துயருறும் இலங்கை மக்களின் நிவாரணத்திற்கு அவசர வேண்டுகோள்!
- ஒரு வேண்டுகோள்
- மார்க்ஸ், டார்வின் மற்றும் பிரச்சாரம்
- கடிதம் டிசம்பர் 23,2004
- உடன் பயின்ற நண்பனுக்கு ஒரு மடல்!
கவியோகி வேதம்

இன்றுபுதி தாய்ப்பிறந்தோம்!..என்றுசொல்ல ஆசைதான்!
மன்றில்உம்முன் அலட்சியமாய் வார்த்தைகளாய்ப் பசப்பிவிட்டு,
..
செகம்புரட்டும் சித்தரென வந்தவன் இல்லையேநான்!
குகையில் இருளிருக்கக் கூவுசதுர் வேதமாநான் ?
..
ஆயிரம் கொலைசெய்தே ‘அப்பு ‘றம் சிரிப்பேனோ ?
பாயிரம் மட்டுமே பாடியயான், சபைவந்து
..
காவியம் செய்ததுவாய்க் கதையளந்து சிலிர்ப்பேனா ?
ஓவியம் புதிதுசெய்ய ஒருதிறமை வேண்டாமா ?
..
செய்தித்தாள் சேதிபார்த்தால்,தினம்நெஞ்சு அழுகிறதே!
உய்வில்லை சோற்றுக்கு,ஒருகோடி பட்டினிச்சா(வு)
..
உலகை அழித்து.இட ஒப்பற்ற கவியாநான் ?
கலகம் அங்கங்கே,காவலர் தடுமாற்றம்!
..
ஒரு ‘சேல ‘ப் பெண்கைக்குள் ஒருநூறு காவலர்கள்!
ஒருதுறவி அகப்படினும்,திருந்தாத பலதுறவி!
..
‘என்நாடு ‘- உலகுக்கே வழிகாட்டி எனப்பாடி
தன்பாட்டில் இறுமாந்தே சட்டெனவே போய்விட்டான்!
..
இப்போ(து)என் பாரதத்தை எவன்பார்த்து வியக்கின்றான் ?
குப்புறப் பொத்தியன்றோ குபீர்ச்சிரிப்புச் சிரிக்கின்றான்!
..
நாடாளு மன்றுகண்டே நக்கல்பல செய்கின்றான்!
கோடிகோடி வேதாந்தம் கொண்டமண்ணில்,கூவ ‘நாற்றம்!
..
நாற்றம் வீசுகையில் நாம்புதிதாய்ப் பிறப்போமா ?
சீற்றமன்றோ வருகிறது! சிரிப்பு(உ)தட்டில் பிறந்திடுமா ?
..
குற்றாலம் பொங்கிவந்தால் குஷிஎல்லாம் பயிருக்கு!
வற்றாது நீர்வந்தால் மகிழ்ச்சிவரும் சென்னைக்கு!
..
தோட்டத்தில் ‘பூ ‘கொழித்தால் தொடர்ந்துயான் பூசைசெய்வேன்!
வாட்டமின்றி நெல்விளைந்தால், வனைந்திடுவேன் காவியமே!
..
நல்லவரே ஆட்சிசெய்தால்,நாள்தோறும் பாப்புனைவேன்!
வல்லவர்கள் தானம்செய்தால்,மனமுருகப் புகழ்ந்திடுவேன்!
..
இன்றேஒ ளிவந்ததுவாய் இறுமாப்பும் எய்திடுவேன்!
கன்றுமுட்டிக் குடிப்பதுபோல் பரவசத்தில் கலந்திடுவேன்!
..
தூயதமிழ் மொழிக்கனவில் துள்ளல்நடை போட்டிடுவேன்!
வாய்த்தஇந்த ஜன்மமெல்லாம் பயன்ஆச்சே! எனக்களிப்பேன்!
..
அப்படியா இருக்கிறது,அழகுசொட்டும் என்தேசம் ?
அப்படியா கொழிக்கிறது தமிழ்கொஞ்சும் தமிழ்நாடு ?
..
இடிகளும்,புயல்மழையும் இருக்கையிலே குதிப்பேனா ?
கடிக்கவரும் பாம்பின்முன் கவிசொல ‘நா ‘ எழும்பிடுமா ?
..
இமயமலைச் சித்தரெலாம் இங்குவந்தே ஆளட்டும்!
சுமைகூட்டா ‘மெய்த் ‘ துறவி ‘முதல்வர் ‘எனச் சூடட்டும்!
..
அப்போதே இவ் ‘வேதம் ‘ அரும்பாகப் பூத்துவரும்!
அப்போதே ‘புதுப்பிறப்பில் ‘ ஆநந்தம் பொங்கிவரும்!
..
சரியாகச் சொன்னேனா, சிந்துகவிச் சித்தர்களே ?
சிரிப்புவந்தால் குழந்தைக்கும் பொக்கைவாய் மலராதா ?
(கவியோகி வேதம்)
—-
kaviyogi_vedham@yahoo.com