முத்துசாமி பழனியப்பன்
வசைக்குச் சோம்பல் முறித்தெழுந்து
ஊதுகுழாய் ஒத்தடம் பெற்றுப் பின்
கருவேலங் குச்சியை கடித்துத் துப்பி
கருப்பட்டித் தண்ணீர் குடித்து முடித்து
நட்புக்களை ஒரு சுற்று நலம் விசாரித்து
நேற்றிரவு கொள்ளவில்லையென
மீதம் வைத்த சோற்றை இன்றைக்கு
கரைத்து காலையுணவு முடித்துவிட்டு
ஆடு மாடுகளை காடுகளில் மேயவிட்டு
அங்கிங்கு தெ(தி)ரியும் நட்புக்களை
இழுத்து – சோளத்தட்டையும் கிழங்கும்
பின் கம்பும் காவல்கார பொம்மைக்கு
தெரியாமல் சுட்டுத் தின்று
எல்லை மீறி மேய்ந்த ஆடுகளுக்காய்
அடுத்த காட்டுக்காரனிடம் அடிவாங்கி
அரிப்புக் கொள்ளாமல் ஓடுமொரு ஆற்றில்
குதித்து அலுப்பும் அழுக்கும் நீங்கக் குளித்து
அம்மா மதியம் கொண்டு வரும் கூழும் தயிரும்
சேர்த்துக் குடித்து வேப்பமர நிழலில் காட்டுத்
தலைவன் போலப் படுத்துறங்கிப் பின்
மாலையில் பண்டங்கள் கொட்டகையடைத்து
மீண்டுமொருமுறை நட்புக்களைச் சேர்த்து
ஏரிக்கரையில் வலம் வந்து கதை பேசிக்
களைத்து வீடேறி ஆவி பறக்கும்
நெய்ப்பருப்புண்டு நிலாப் பார்த்துப்
படுத்துறங்கும் – அந்த வாழ்க்கை
பெருமையாகவும்; வேப்பமர நிழலாகவும்
இனிக்கிறது – இந்த வாழ்க்கைக்கு..,
muthusamypalaniappan@gmail.com
- அறிவியலும் அரையவியலும் -2
- உன்னைப்போல் ஒருவன்
- பிரான்சிஸ் கிருபா கவிதைகள் – ஒரு பார்வை
- நினைவுகளின் தடத்தில் – (35)
- சாகித்திய அகாதமி: ரஸ்யாவில் உலகப்புத்தகக்கண்காட்சியில் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன்
- பாடிப்பறந்த ‘வானம்பாடி’ கவிஞர் பாலா
- வடமராட்சி இலக்கிய நிகழ்வுகள்
- தமிழ்ஸ்டுடியோ குறும்படவட்டம் (பதிவு எண்: 475/2009)-தொடக்க விழா
- மலேசியாவின் கலை இலக்கிய இதழ் ‘வல்லினம்’.
- 15 வது கவிஞர் சிற்பி இலக்கிய விருது 2010
- அன்புள்ள ஆசிரியருக்கு
- நவீனத்துவம் – பின்நவீனத்துவம் கேரள மாநிலத்தில் தேசிய கருத்தரங்கம்
- என் வரையில்…
- தொடரும்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 55 << சொந்த இல்லம் நோக்கி >>
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு கவிஞனின் கூக்குரல் >> கவிதை -16 பாகம் -3
- வேத வனம் விருட்சம் 54
- உள்வெளிப்பயணங்கள்
- தனிமையிலிருந்து தப்பித்தல்
- உயிரின் துடிப்பு
- இது(ரு) வேறு வாழ்க்கை
- தினேசுவரி கவிதைகள்
- அடைக்கலப் பாம்புகள்
- ஆகு பெயர்
- அறிவியல் புனைகதை-9: நித்யகன்னி ரூபவாஹினி
- நினைவுகளின் பிடியில் ..
- மழைச்சாரல்…..
- தெய்வம் நீ என்றுணர்
- ஒரு புகைப்படத்தைப் பொருள்பெயர்த்தல்
- அந்த ஏழுகுண்டுகள்…..(1)
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -2
- தொடர்பில்லாதவை
- சுழற்றி போட்ட சோழிகள்
- புரிய இயலாத உனது அந்தரங்கம்
- சாயங்கால அறை
- சேரா துணை..
- பாத்திரத் தேர்வு
- முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ (1564-1642)
- அகில நாட்டு விண்வெளி நிலையத்தை நோக்கி மனிதரில்லா ஜப்பான் விண்வெளிப் பளு தூக்கி !
- குறுக்கெழுத்துப் புதிர் – அக்டோபர் 2009
- படம்