- நிலவோடு நீ வருவாய்
- பின் நாற்றம்
- தாகூரின் நோபல் பரிசைத் திருடியவனே
- கதவாக நான்..
- பகை
- வீழ்த்துவதேன் ?
- கவிதை
- முணுமுணுப்பு
- மே நாள்
- விமானப் பயணங்கள்.
- கண்ணாடியும் விலங்கும்
- புள்ளிக்கோலம்.
- அட்சய பாத்திரங்கள்…!!!
- சத்தியின் கவிக்கட்டு 5
- அன்புடன் இதயம் – 16 – ஐயா, இது அமெரிக்கா
- விதைத்தது
- தமிழவன் கவிதைகள்-நான்கு -மணியாட்சி ஸ்டேஷன்
- எழிற்கொள்ளை
- ஈரோப்பை பிரிட்டனுடன் இணைக்கும் உலகிலே நீளமான கடலடி ஈரோக் கணவாய் [World ‘s Longest Subsea Eurotunnel Connecting Britain to Europe
- இடக்கரடக்கல்
- பனிநிலா
- நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -18
- பிறந்த மண்ணுக்கு..- 1
- கதை 07 : இசைக்கலைஞனின் கதை
- பருந்துகள் பறந்துகொண்டிருக்கின்றன…
- கதவு திறந்தது
- இயற்கையே நீயுமா…. ?
- குற்றவாளிகள் யார் ?
- வாரபலன் – மே 6,2004 – அ.ஜீ.ரணம் , நிறுத்தமுடியாத நோயாளி டி வி ,நச்சுறவு நிராகரணம்
- மதங்கள் அழிக்கப்படவேண்டும்
- நாராயண குரு எனும் இயக்கம்-2
- கலைஞருடன் பேசுங்கள் – மாலன் நிகழ்ச்சி
- ஜமாலனின் ஆழ் மனத்தில் மதம் நிகழ்த்தும் மாயங்கள்
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 4 :திரு.கருணாநிதியின் சன் டிவி பதில்கள்:
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 1)
- அ.முத்துலிங்கம் கதைகள்
- மாற்றுக் கருத்துக்கான குரல்(வன்முறை வாழ்க்கை- புத்தக அறிமுகம்)
- ஜெய் ராம்! திரைப்படம் – ஃபாசிசத்தின் இன்னொரு வடிவம்
- கவிதை உருவான கதை – 5
- கவிஞர் அன்பாதவனின் நெருப்பில் காய்ச்சிய பறையின் சில அதிர்வுகள்..
- சிற்றின்பமும் பேரின்பமும் (தூங்கும் அழகிகள் இல்லம்- புத்தக அறிமுகம்)
- திருச்சியில் எஸ் ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி நாவல் கருத்தரங்கம்
- தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்…
- தாய்க்கு ஒரு நாள்
- கடிதங்கள் – மே 6,2004
- கடிதம் மே 5, 2004 -இஸ்லாமிய அன்பர்களுக்கு ஒரு தன்னிலை விளக்கம்
- பாரதி இலக்கியச் சங்கம் – 23-5-2004 கவிதை கருத்தரங்கு
- மூன் டிவி கலந்துரையாடல் – கேட்காத கேள்விகளும் சொல்லாத பதில்களும்
புகாரி

ஐயா இது அமெரிக்கா
கடன் அட்டை
இல்லாதான் வாழ்க்கை
கனவிலும் தைக்க இயலா
ஓட்டை
வீதி அழுக்கும்
விரும்பி வந்து ஒட்டாத
வறட்டு மொட்டை
அட்டைகளோ அட்டைகள்
என்று
ஆயிரமாயிரம் அட்டைகள்
இங்கே
எந்த அட்டை
இருந்தால் என்ன
கடன் அட்டை
இழந்தோரெல்லாம்
உடன் கட்டை ஏறுவோர்தான்
O
இன்றைய நிலையில்
அம்மா பிடிக்குமா
அப்பா பிடிக்குமா என்று
ஐந்து வயது பொடியனை
நிறுத்தினாலும்
கடன் அட்டைதான் பிடிக்கும்
என்றே ஓடுவானோ
என்ற ஐயம் தின்கிறது
O
ஆயிரம் சாகசங்களை
நிகழ்த்தி நிமிர்ந்தாலும்
ஓர் அசிங்கமும் கிடைக்காது
‘ஐலவ்யூ ‘ சொல்ல
கடன் அட்டை மட்டும்
கொஞ்சம் கண்ணில் பட்டுவிட்டால்
கிளியோபாட்ராதான்
கையணைவில்
O
கடன் அட்டையிலும்
அந்தத் தங்க அட்டை
கிடைத்துவிட்டாலோ
அலாவுதீன் பூதம்
தன் முழுமொத்த சக்தியையும்
முறுக்கிக்கொண்டு
அப்போதே வந்து நிற்கும்
நம் உத்தரவிற்கு
O
வரிசை வரிசையாய்
கழுத்துப் பட்டை அணிந்த
நாகரிகத் திருடர்கள்
வாசல்வழியை
அடைத்தால்
தொலைபேசி வழி
தொலைபேசி வழியை
அடைத்தால்
மின்னஞ்சல் வழி
மின்னஞ்சல் வழியை
அடைத்தால்
கனவுவழி என்று
வந்து வந்து வழிவர்
O
நொந்த மனமுடன்
ஓர் இதய வருடல் தேடி
ஊருக்குத் தொலைபேசினால்
‘இங்கு மட்டும்
என்ன வாழுதாம்
அந்தச்
சனியன்தான் ‘
என்கிறாயே
நிசமா தோழா
—-
கடன் அட்டை – Credit Card, கழுத்துப் பட்டை – Neck Tie
*
அன்புடன் புகாரி
buhari2000@hotmail.com