மழைத்துளியா ?மறுபிறவியா ?

This entry is part [part not set] of 35 in the series 20021022_Issue

கோமதிநடராஜன்.


கங்கையும், கழனியும்,
கதிரவன் ஒளி பட்டு,
கணத்தில் ஆவியாகி,
அந்தரத்தில் ஆனந்தமாய் பவனிவரும்.
அடித்த காற்றில்,திசைமாறி,
இடித்த இடியில்,இடம் மாறி,
கங்கையிலும் கழனியிலும்,மறுபடியும்
விழுந்த மழைத் துளியில்,
கங்கை எது ?கழனி எது ?
மாகானும் மாபாவியும் ,
காலனின் கயிறு தொட்டு,
நொடியில் ஆவி அடங்கி,
அண்டம் தொடாத,ஆத்மாக்களாய் உலவும்.
பாவக்கணக்கில் இடம் மாறி,
புண்ணியக் கணக்கில்,இனம் மாறி,
மகானாய் மாபாவியாய் என்றிருக்க,மறுபடியும்
ஜனித்த சிசுக்களில்,
மகான் யார் ?மாபாவி யார் ?

***
ngomathi@rediffmail.com

Series Navigation

கோமதிநடராஜன்

கோமதிநடராஜன்