உலக நண்பர்கள் தினம் (ஆகஸ்ட் 4ம் திகதி)

This entry is part [part not set] of 24 in the series 20020805_Issue

புஷ்பா கிறிஸ்ரி


அன்புள்ள நண்பனே!
அன்புள்ள நண்பியே!

நாம் நண்பர்கள் என்பதால் தான்
இந்த நாள் நமக்கு
நாம் இந்த நாளுக்கு,

இந்த நட்புக் கடலுக்குள்
உன் படகும் என் படகும்
சங்கமிக்கட்டும்,

நம் நட்புக் கலந்த
இனிய வாழ்க்கை
சிறந்து விளங்கட்டும்.

எம் நட்பு உறவுக்குள்
நானில்லை, நீயில்லை.
நாம் என்று ஒருமித்து,
நாம் என்றும் பயணிப்போம்

நான் உன் வானமாக,
நீ என் சுவாசமாக,
என்னை நீயும்
உன்னை நானும்
தேடும் போது, நாம் அங்கே
ஒருவர்க்கொருவர் தெரிவோம்

சூரியக் கதிரின் சுடரொளியாய்
நம் சிரிப்பு, நம்மை நிறைக்கட்டும்

துன்பம் உன்னைத் தொடும் போது
என் நெஞ்சில் ஈரம் நிறையட்டும்

எம் நல்ல நாட்களை நாம்
ஒன்றாய் கொண்டு தொடங்குவோம்

இறைவன் வரும் படி கேட்டால்
நாம் ஒன்றாய் பயணம் தொடருவோம்

நட்புக்கு இலக்கணம் நாம் என்று
நல்ல மனிதர்கள் கூறட்டுமே!
அதை நாம் காதாரக் கேட்காவிடிலும்,
இந்த உலகம் அதனை உணரட்டுமே!

புஷ்பா கிறிஸ்ரி
Pushpa_christy@yahoo.com

Series Navigation

புஷ்பா கிறிஸ்ரி

புஷ்பா கிறிஸ்ரி