- Home »
- கவிதைகள் »
- பக்தி
பக்தி
This entry is part of 2 in the series 20010911_Issue
வெங்கடரமணன்

மாலை கோவில் போக வேண்டும்;
மறக்காமல் அர்ச்சனை செய்ய.
அரளி இல்லாத கதம்பம் வேண்டும்;
அரளி பட்டால் அரிக்கும் இவளுக்கு.
கனிந்த வாழைப்பழம் வேண்டும்;
காலையில் இரண்டு நாளாய்க்
கழிவறை போகவில்லை.
முத்திய தேங்காய் நல்லது;
திரும்பும் ஒற்றைமூடி
தோசைக்குச் சட்டினியாகும்.
அய்யருக்குச் சில்லரை தேவை ‘
ஐந்தாய்த் தட்டில் போட்டால்
மீதி தரமாட்டார்.
உண்டியலுக்குத் தேவையில்லை;
போனமுறை சில்லரையின்றி
முழுரூபாய் போட்டான் உதாவாக்கரை.
செருப்பை மறக்காமல்
பிரித்து விடவேண்டும்.