மியம்மார் ஸ்ரீ அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீ கல்யாண வேங்கடேசப் பெருமாள் தேவஸ்தானம்.
சோலை.தியாகராஜன்
ஸ்ரீ அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீ கல்யாண வேங்கடேசப் பெருமாள் தேவஸ்தானம்.
ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹா சம்ரோஷணம் ( கும்பாபிஷேகம் )
மியம்மார் (பர்மா)நாட்டின் வர்த்தகத் தலைநகராகிய யாங்கோன் மாநில மைய நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சின்னத் தமிழகம் என்று போற்றப்பெறும் திருக்கம்பை மாவட்டத்தில் எழுந்தருளியுள்ள
ஸ்ரீ அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீகல்யாண வேங்கடேசப் பெருமாள் தேவஸ்தானத்தின் ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹா சம்ரோஷணம் (கும்பாபிஷேகம் ) நேற்று 27-1-2010 புதன்கிழமை காலை 9.30 மணிக்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள ஸ்ரீ உ.வே.பத்மஸ்ரீ அலங்கார பூஷகர் (ப்ரதான பட்டாச்சாரியார் )மற்றும் திரு.S.வெங்கட கிருஷ்ண பட்டாச்சாரியார் உள்ளிட்ட ஏழு பட்டாச்சாரியார்கள் 22.1.2010-ம் நாள் தொடங்கி விசேஷ யாக பூஜைகள் தினமும் சிறப்பாக நடத்தி, விக்கிரக பிரதிஷ்டைகள் செய்து நேற்று காலை ராஜ கோபுரத்தில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா கண்டனர்.
நேற்று மாலை திருத்தேர் உலாவும் நடைபெற்றது..
பல்லாயிரக்கணக்கான மக்கள் பக்தி உணர்வுடன் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.
நாடு ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த போது இரங்கூன் முனிசிபல் காண்டிராக்ட் தொழிலதிபர் திரு.வேங்கடசாமி நாயகர் 1904-ம் ஆண்டு தமிழக ஸ்தபதிகளைக் கொண்டு இக்கோயிலை எழுப்பி கும்பாபிஷேகமும் நடத்தினார்.
சைவ – வைணவத் தலங்கள் நிறைந்தும் திருத்தேர்கள் உலாக் காண்பதால் இவ்வூரை திருக்கம்பை என தமிழறிஞர் கி.வா.ஜ அவர்கள் தமது வருகையின் போது கவிபாடினார்.
மியம்மார் நாட்டின் மிகப்பெரிய தேவஸ்தானக் கும்பாபிஷேகம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
செய்தியும் படங்களுடன்,
என்றும் அன்புடன்,
சோலை.தியாகராஜன்
Yangon,Myanmar.
009598022897
- திரைகடல் ஓடியும் கலையைக் கற்போர் (ஹாங்காங்கில் பரதநாட்டிய அரங்கேற்றம்)
- இயற்கைதானே
- இயற்கைதானே
- கவிஞானி ரூமியின் கவிதைகள் கி. பி. 1207-1273) கவிதை -3 பாகம் -1 திக்குத் தெரியாத மனக் குழப்பம் !
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -6
- இன்று
- வேத வனம் விருட்சம் 70
- வாழ்வின் (அ) சுவாரஸ்யங்கள்
- துறை(ரை)களின் சூதாட்டமும் கவிழும் பொருளாதார / வெளியுறவு கொள்கைகளும்
- மொழிவது சுகம்: புர்க்காவும் முகமும்
- சூரியனும் சந்திரனும்
- அன்பாலயம்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -2
- மறுகூட்டல்
- ராகவன் உயிர் துறந்தான்
- பறவைகளின் வீடு
- முள்பாதை 15
- அணுக்கருத் தொடரியக்கம் தூண்டி அணுசக்தி வெளியேற்றிய என்ரிக்கோ ஃபெர்மி.
- தமிழ்ச்செல்வனுக்கு …
- மியம்மார் ஸ்ரீ அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீ கல்யாண வேங்கடேசப் பெருமாள் தேவஸ்தானம்.
- தமிழ் இணையப் பயிலரங்கம்
- Appeal for Donations For Temple’s permanent construction
- புதுவகை நோய்: இமி-முற்றியது
- நினைவில் உறைந்த வரலாறு முஹம்மது யூனூஸின் “எனது பர்மா குறிப்புகள்”
- எப்போதும் கவிதை என்னை எழுதியதேயில்லை கே.ஆர்.மணியின் “மெட்ரோ பட்டாம்பூச்சி” கவிதைகள்
- வீரசோழியம் இலங்கை நூலா? தமிழ்நாட்டு நூலா?
- கவிஞர் ஃபஹீமா ஜஹானின் இரண்டாவது கவிதைத் தொகுதியான ‘அபராதி’ எனும் குற்றமிழைத்தவன்
- வடமராட்சி – அண்மைக்கால இலக்கிய நிகழ்வுகள்
- கே.பாலமுருகனின் ‘அதிகாலை பொழுதும் ஆப்பே – தவுக்கே – மணியம் பேருந்துகளும்’ – சிறுகதை விமர்சனம்
- நூடில்ஸ்
- திரு ஜயபாரதன் கட்டுரைகள்