அதிகாலை.காம்
அறிவிப்பு
வணக்கம்.
நம் தமிழ் சமூகத்தின் அனைத்து விசயங்களையும் உள்ளடக்கி அதிகாலை.காம் ( www.adhikaalai.com) எனும் ஒரு புதிய இணைய தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவிலிருந்து இத்தளம் இயக்கப்படுகிறது.உலகத்தின் 20 -க்கும் மேற்பட்டுள்ள நாடுகளில் எமது செய்தியாளர்கள் உள்ளனர்.
உலகத்தின் பல்வேறு நாடுகளில் பரவியிருக்கும் நம் தமிழ்ச் சமூகத்தின் துடிப்புள்ள சிந்தனைப் படைதான் எமது தளத்தின் வேர்கள். எமது பின்புலமாய் சமூக அக்கறையுள்ள சில மாமனிதர்கள்.
சமூகத்தின் சகலமும் ஒலி-ஒளி வடிவில் இடம் பெறும். இதுவரை நம் ஊடகங்களால் பதிவு செய்யப்படாத நிகழ்வுகளும், சம்பவங்களும் உயிரோட்டத்துடன் இங்கு வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படும். சமூகத்தின் பன்முகத்தன்மைகளும் அசலாய் காட்டப்படும். கண்ணியாமான எழுத்துக்கள் கெளரவிக்கப்படும். சாராம்சம் நிறைந்த சச்சரவுகளுக்கு மட்டுமே சரிசம இருக்கைகள் கொடுக்கப்படும். விடை தேடும் பிரச்சினைகளுக்கான விவாதங்கள் முன் நிறுத்தப்படும்.
உடனடிச் செய்திகள், அரசியல், இலக்கியம், திரை உலகம், ஆன்மீகம், வர்த்தகம், பிரபலங்களின் நேர்காணல், குறும் படங்கள், புகைப்படத் தொகுப்பு, சூடான விவாதங்கள், மருத்துவ ஆலோசனை, சமூக நிகழ்வுகள், சமையல், சின்னத்திரை, சுற்றுலா, வணிகம், களஞ்சியம், பாட்காஸ்ட்… இப்படி பலவும் இங்கே ஆழமுடன் இடம்பெறும். சுருங்கச் சொல்வதாயின் சாப்பாடு முதல் சாஃப்ட்வேர் வரை சராசரி மனிதருக்கும் எட்டும் வகையில் எடுத்து வைக்கப்படும்.
எமது தளத்துக்கான ஆலோசனைகள் எத்திசையிலிருந்து வந்தாலும் அன்போடு ஏற்றுக் கொள்ளப்படும். மேலும் எமது பயணத்தில் தோள் கொடுக்க விரும்பும் அன்பு நெஞ்சங்களையும் அரவணைத்துக் கொள்ள தயாராகவே இருக்கிறோம்.
எனவே தயவு செய்து தங்களின் ‘திண்ணை’-யில் இது பற்றி வெளியிட்டு ஆதரவளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
ஆசிரியர் குழு,
அதிகாலை.காம்.
www.adhikaalai.com
editor@adhikaalai.com
- முலையகம் நனைப்ப விம்மி அழுதனள்
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 2
- நினைவுகளின் தடத்தில் (6)
- போட்டோ
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 2
- மகளிர்தினக் கவியரங்கம், திருச்சி
- குதிரை ஓட்டி
- மாற்றுப் பார்வையில் மனிதமாகும் பெண்ணியம்
- உலகை குலுக்கும் உண்டியல் புரட்சியாளர்கள்
- கிராமங்களின் பாடல்
- “வார்த்தை” மாத இதழ் சந்தா – சிறப்புச் சலுகைகள்
- காற்றினிலே வரும் கீதங்கள் – 10 நிலையற்ற வாழ்வு !
- ஆடுகளம்
- சம்மந்தமில்லை என்றாலும் – விவாதங்கள் விமர்சனங்கள்- சுஜாதா
- சுயமோகிகளுக்கு…..
- அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்!
- அதிகாலை.காம்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! செவ்வாய்க் கோளில் நீர் வரண்டது எப்போது ? (கட்டுரை: 20)
- தேம்ஸ் நதியின் புன்னகை
- இடமாற்றம்: சுஜாதாவின் பெங்களூர் நினைவஞ்சலிக் கூட்டம்
- அமரர் சுஜாதா
- SR நினைவுகள்
- உயிர்த்தெழும் ஔரங்கசீப்
- அமரர் சுஜாதாவோடு வாழ்ந்தது பற்றி
- வஹ்ஹாபி வெளிப்படுத்தும் அடிப்படை முகமதிய மனோபாவம், இஸ்லாமிய தர்க்கம்
- உடம்பு இளைப்பது எப்படி?
- ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாக அமைந்துவிட்டது
- பேராசிரியர் சுந்தரசண்முகனார் வாழ்வும் பணியும்(13.07.1922 -30.10.1997)
- பதங்களும் ஜாவளியும் – பக்தியும் சிருங்காரமும்
- ஜெய்பூர் கால்— டொக்டர் பிரமோத் கரன் சேத்தி மறைவு
- நிலம், பெண்ணுடல், நிறுவனமயம்: செந்தமிழன் கட்டுரைகளை முன்வைத்து
- தாகூரின் கீதங்கள் – 21 எல்லாமே வழங்கி உள்ளாய் !
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 15 – ஜெயமோகன்