பாரிசில் மகாகவி பாரதியாரின் 125 ஆம் ஆண்டு விழா

This entry is part [part not set] of 38 in the series 20071018_Issue

தேவமைந்தன்


அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,

வணக்கம்.

பாரிசில் மகாகவி பாரதியாரின் 125 ஆம் ஆண்டு விழா அண்மையில் கொண்டாடப் பட்டதை அழகிய சொற்சித்திரமாக்கியுள்ளார்
பேராசிரியர் பெஞ்சமின் லெபோ.
அந்த விழாக் கருத்தரங்கத்தில் வாசிக்கப் பெறுவதற்கு, நம் திண்ணை.காம்-இல் இவ்வாண்டு ஏப்ரல் 19 அன்று வெளிவந்த – “ஆவுடையக்காள் பற்றிப் பாரதியார் கூறாது மறைத்ததேன்? – ஆய்வறிஞர் சு.வேங்கடராமனின் கேள்வி” என்னும் என்
கட்டுரையை [“நன்றி: திண்ணை.காம்” குறிப்பிட்டு] நண்பர் நாகி மூலம் அனுப்பிவிட்டு, விழாவில் பங்கேற்க இயலாதிருந்த
எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் உயிரோட்டமுள்ள இந்தச் சித்திரமும் தெளிவான படங்களும் மகிழ்ச்சியைத் தருவன.
கட்டுரையைத் தக்க தருணத்தில் வெளியிட்ட தங்களுக்கு என் பாராட்டுகள்.
அன்புடன்,
தேவமைந்தன்


தேவமைந்தன்(அ.பசுபதி)
A.Pasupathy(Devamaindhan)

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்