குடியேற்றம் முத்தமிழ்ச்சுவைச்சுற்றம் பதினொன்றாம் ஆண்டு பைந்தமிழ்த்திருவிழா

This entry is part [part not set] of 29 in the series 20070823_Issue

அறிவிப்பு


வேலூர் மாவட்டம் குடியேற்றம் தமிழ்ப்பற்றாளர்கள் பரவி வாழும் பேரூர். இங்கு முத்தமிழ்ச்சுவைச்சுற்றம்
என்னும் பெயரில் இலக்கிய அமைப்பை நிறுவிப் புலவர் வே.பதுமனார் அவர்கள் தமிழ்ப்பணியாற்றி வருகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களை அழைத்து இலக்கியப்பேருரை,பட்டிமண்டபம்,
சொற்பொழிவு வழக்காடுமன்றம்,கலைநிகழ்ச்சிகளை நடத்துகிறார்.ஊரில் உள்ள அனைவரும் பங்கெடுப்பதும்,
பங்குபெறுவதும் சிறப்பு.
முத்தமிழ்ச்சுவைச்சுற்றத்தின் சார்பில் இந்த ஆண்டிற்கான விழா இயல்,இசை, நாடகம் பற்றிய பொருண்மையில்நடைபெறுகிறது.

இடம்: பி.இராசகோபால் நாயுடு ஆத்திக சம்மாஜம்,
காட்டுப்பாடிச்சாலை,குடியேற்றம்

நாள்: 24,25,26 -08-2007(வெள்ளி,சனி,ஞாயிறு)

தமிழகத்தின் சிறந்த பேச்சாளர்களான பேராசிரியர் மு.அப்துல்காதர்,முனைவர் மு.இளங்கோவன்,தமிழ்க்கடல்
நெல்லைக்கண்ணன், புலவர் மா.இராமலிங்கம்,சிந்தனைச்செல்வர் பழ.கருப்பையா,பேராசிரியர் சோ.சத்தியசீலன்
முதலானவர்கள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்ற உள்ளனர்.

வழக்காடுமன்றம்,பண்பாட்டுமன்றம்,தமிழ்ப்பொழில்,இளைஞர் கலைவிழா, எழுச்சியுரை, கலைச்சோலை,
பட்டிமண்டபம் என்றவாறு நடைபெறும் விழாவைப் புலவர் வே.பதுமனாரும்,அவர்தம் அணியினரும்
சிறப்பாக நடத்த உள்ளனர்.

மு.இளங்கோவன்,புதுச்சேரி
muelangovan@gmail.com

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு