நல்லடியாருக்கு / மலர்மன்னனுக்கு நான்கு கேள்விகள்:

This entry is part [part not set] of 30 in the series 20070726_Issue

எண்கோணம்



மரியாதைக்குரிய மலர்மன்னன் பற்றி கட்டுரை எழுதி, இஸ்லாமிய தீவிரவாதத்தை இஸ்லாமிய தீவிரவாதம் என சொல்லக்கூடாது என்று கூறியுள்ள நல்லடியாருக்கு நான்கு கேள்விகள்:

1. முகம்மதியர் அல்லாதவர்கள் முகம்மதியர்களுக்குத் தலைவர்களாக வருவதை எதிர்க்கிறீர்களா?

2. இஸ்லாம் சொல்லுவது மட்டுமே உண்மை, எனவே பிற கருத்துக்கள் மற்றும் மதங்களிலிருந்து அனைவரும் இஸ்லாத்திற்கு மாறுவதுதான் சரி என்று கருதுகிறீர்களா?

3. இஸ்லாத்திலிருந்து ஒருவர் பிற மதத்திற்கு மாறினால் அவருக்கு அளிக்கப்படவேண்டிய தண்டனை என்ன?

4. இஸ்லாமியராக இருக்கும் ஒருவர் தன்னளவில் நாத்திகராக இருக்க சுதந்திரம் உண்டா?


மலர்மன்னனுக்கு நான்கு கேள்விகள்:

நல்லடியாரை நான்கு கேள்விகள் கேட்டுள்ளதால் அதே கேள்விகளை மலர்மன்னனிடம் கேட்பதுதானே நியாயம்?

எனவே அவருக்கும் நான்கு கேள்விகள்:

1. ஹிந்துக்கள் அல்லாதவர்கள் ஹிந்துக்களுக்குத் தலைவர்களாக வருவதை எதிர்க்கிறீர்களா?

2. ஹிந்து மதம் சொல்லுவது மட்டுமே உண்மை, எனவே பிற கருத்துக்கள் மற்றும் மதங்களிலிருந்து அனைவரும் ஹிந்து மாறுவதுதான் சரி என்று கருதுகிறீர்களா?

3. ஹிந்து மதத்திலிருந்து ஒருவர் பிற மதத்திற்கு மாறினால் அவருக்கு அளிக்கப்படவேண்டிய தண்டனை என்ன?

4. ஹிந்துவாக இருக்கும் ஒருவர் தன்னளவில் நாத்திகராக இருக்க சுதந்திரம் உண்டா?


saakshin@gmail.com

Series Navigation

எண்கோணம்

எண்கோணம்