- Reporting from Chennai about the Relief efforts on the Tsunami hit areas.
- கடிதம் டிசம்பர் 30, 2004-எஸ். அரவிந்தன் நீல கண்டன்: அருள் செல்வன் கந்த சுவாமி: சலாஹுத்தீன்: ஜோதிர் லதா கிரிஜா
- திரு பத்மநாப ஐயருக்கு 2004 ஆம் ஆண்டிற்கான இயல் விருது
- கடிதம் டிசம்பர் 30,2004 – பத்திரிகைகளின் தவறான போக்கு!
- உடன் பயின்ற நண்பனுக்கு ஒரு மடல்!
- ரெஜி
- ஓவியப் பக்கம் – பதினொன்று – ஜார்ஜ் கிராஸ்ச்- ஓவியமும் அரசியலும்
- மெய்மையின் மயக்கம்-32
- மக்கள் தெய்வங்களின் கதைகள் – 15. வன்னியன் கதை
- சங்கீதமும் வித்வான்களும்
- கடிதம் டிசம்பர் 30,2004
- துயருறும் இலங்கை மக்களின் நிவாரணத்திற்கு அவசர வேண்டுகோள்!
- சதாத் ஹசன் மண்டோ நூல் வெளியீடு
- ‘சும்மா வருவாளா சுகுமாரி ? ‘ – இசை விழா விமர்சனம் – II
- விடுபட்டவைகள்-3 -தீர்க்கம்
- பத்மநாபஐயர்
- சுனாமி
- சுனாமி
- கடிதம் டிசம்பர் 23,2004
- மார்க்ஸ், டார்வின் மற்றும் பிரச்சாரம்
- ஒரு வேண்டுகோள்
- சாகித்ய அக்காதமி விருதுகள் – தமிழன்பனும் சகரியாவும்
- தெற்காசிய இந்து/இஸ்லாமியப் பண்பாடுகள் – ஒரு மறுசிந்தனை -1
- கடல் கொந்தளிப்பைக் குறித்த எச்சரிக்கையில் குளறுபடி
- இராக்கில் இஸ்லாமிய மக்களாட்சி ? – பகுதி 2
- சுனாமி அழிவு :: உரிமையும் கடமையும்
- கடல்கோள் அழிவிற்கு உதவுவோர் கவனிக்க வேண்டியது!
- சமஸ்கிருதமயமாதலும் நடுக்காட்டு இசக்கி அம்மனும்
- சூசன் சாண்டாக் – ஒரு வாசகனின் அஞ்சலி
- பெரானகன்
- வாரபலன் டிசம்பர் 30,2004 – தோழர் நிர்பன் , யசோதர – யமுனா, அரசாங்க விருந்து ,கொலைகள் அலைகள்
- நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் – 52
- இன்று புதிதாய்ப் பிறந்தோம்.. ?
- கடற்கோள்
- விலங்குகளுக்கு ஆறாம் அறிவு உண்டு என்ற நம்பிக்கையை வலுப்படுத்துகிறது ட்சுனாமி
- இந்து மாக்கடல் பூகம்பத்தில் எமனாய் எழுந்த பூத அலை மதில்கள்! (Earth Quake Giant Sea Waves Attack South Asian Countries 2004)
- கடலம்மா….
- அழுகிறபோது எழுதமுடியுமா ?
- கடற்கோள்
- தவறான திருப்பம் (ஆங்கில மூலம் : ஆகா ஷாஹித் அலி)
- பெரியபுராணம் – 24
- கவிக்கட்டு 42
- ஞானக்கோமாளி – கவிதாப் பிரசங்கம்
- அறிவியல் சிறுகதை வரிசை 7 – நம்பிக்கையாளன்
அறிவிப்பு

26-12-2004 காலை சுமத்திரா தீவுக்கு அண்மையாக வங்காள விரிகுடாவில் தோற்றங்கொண்ட சுனாமி (வுளுருேயுஆஐ) எனப்பெயரிடப்பட்டுள்ள பூமியதிர்ச்சியும் கடற்கொந்தளிப்பும் தெற்கு மற்றும் தெற்கிழக்கு ஆசிய நாடுகளைக் கடுமையாகத் தாக்கி பலத்த சேதத்தினை விளைவித்துள்ளது என்பதனை நீங்களனைவரும் அறிந்ததே. குறிப்பாக இலங்கையின் வங்காள விரிகுடா கடற்பரப்பில் ஐம்பதடிவரை கொந்தளித்தெழுந்த கடல் அலைகள்> அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில்> மட்டக்களப்பு> திருமோணமலை> முல்லைத்தீவு> பருத்தித்துறை வரையிலான தெற்கு> கிழக்கு மற்றும் வடக்குக்கரையோரங்களில் நாங்கள் எண்ணிப்பார்க்க முடியாதளவிற்கு பேரழிவொன்றினை ஏற்டுத்திச் சென்றுள்ள துயரச்செய்திகள் எமது காதுகளில் விழுந்த வண்ணமுள்ளன. இலங்கையின் கடந்த பல நுாற்றாண்டுகால வரலாற்றில் மிகவும் மோசமானதாக வர்ணிக்கப்படும் இயற்கையின் இந்தக் கோரத்தாண்டவத்தால் பல கடற்கரையோர கிராமங்கள் கடல் அலையினால் அள்ளிச்செல்லப்பட்டும்> ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தும்> ஏறத்தாழ ஒரு மில்லியன் மக்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்தும் உள்ளனர். முன்னெச்சரிக்கை எதுவுமின்றி கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாமே நடந்து முடிந்துவிட்டதாகக் கூறப்படுகின்றது. இதற்கு முன்னதாக பெரும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மிகவும் பாதிக்கப்பட்ட வடக்கு> கிழக்கு மாகாண மக்களுக்கு நிவாரண உதவிகள் உரியவகையில் கிடைப்பதற்கு முன்னரே இதுவும் நிகழ்ந்து முடிந்திருக்கிறது.
இறுதியாக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில்> இலங்கை உட்பட இந்தியா> மாலைதீவு> பங்களாதேஷ்> இந்தோனேசியா> மலேசியா> தாய்லாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகின்றது. இம்மக்கள் அனைவருக்கும் இலக்கியச் சந்திப்பு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றது. மேலும் தெற்கு மற்றும் தெற்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் ஒப்பீட்டளவில் இலங்கையே மிகவும் மோசமாகப் பாதிக்கப்படடுள்ளதாகவும்> அதிகளவிலான உயிரிழப்புகள் (5000 பேர்) ஏற்பட்டுள்ளதாகவும் உலகச்செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன. கடந்த இரு சகாப்தங்களுக்கு மேலான உள்நாட்டு யுத்தத்திலிருந்து மீள முடியாமலிருக்கும் இலங்கை மக்கள்மீது இயற்கையும் தனது கொடுங்கரங்களைப் பதித்துள்ளது. வரலாற்றின் மிக முக்கியமான இக்கால கட்டத்தில் இலக்கியச் சந்திப்பு இலங்கையின் சகல இன மக்களின் துயரங்களிலும் பங்கெடுக்க வேண்டிய சமுதாயப்பணியில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டிய நிலையிலுள்ளது.
வங்காள விரிகுடாவில் உருக்கொண்ட சுனாமியின் அனர்த்தங்கள் ஐரோப்பிய நாடுகளில் வாழும் எங்கள் காதுகளை வந்தடைய முன்னரே> இலக்கியச் சந்திப்பு அண்மைக்கால வெள்ளப்பெருக்கினால் தங்கள் இயல்பு வாழ்வினை இழந்து பெரும் துயருக்குள்ளாகியுள்ள கிழக்கு மாகாண மக்களின் நிவாரணத்திற்கு நிதி சேகரிக்கும் பணியில் ஈடுபடத் தொடங்கியிருந்தனர். சுமத்திரா தீவுக்கருகிலிருந்து இலங்கையின் வங்காள விரிகுடா கடற்பரப்பினை அண்டிய நிலப்பரப்பினை வந்தடைந்த சுனாமி> இதுவரை எமக்குக்கிடைத்த செய்திகளின்படி இலங்கையின் கிழக்கு மாகாண பிரதேசங்களையும் மக்களையுமே மிக அதிகமாகவும் பரந்தளவிலும் தாக்கியளித்துள்ளதால்> இப்போது இப்பணியினை மேலும் விரிவுபடுத்த வேண்டிய நிலையில் நாங்கள் இருக்கின்றோம்.
இலக்கியச் சந்திப்பு ஆர்வலர்களும்> இலக்கியச் சந்திப்பில் ஈடுபாடுகொண்ட நண்பர்களும் தத்தமது நாடுகளில் நிவாரணப்பணிகளுக்கான நிதிசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். எமது வேண்டுகோளடங்கிய இச்சிறிய பிரசுரத்துடன் உங்களை அணுகும் எமது நண்பர்களை இனங்கண்டு> இந்நிவாரண உதவிக்காக உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யமாறு இலக்கிய சந்திப்பு உங்களனைவரையும் தாழ்மையுடன் வேண்டி நிற்கின்றது.
இலக்கியச் சந்திப்புக்குழு (ஸ்ருட்கார்ட்)
ஸ்ருட்கார்ட்
26.12.2004
தொடர்புகளுக்கு> : Chanthippu@yahoo.de