கடிதம் டிசம்பர் 30,2004 – பத்திரிகைகளின் தவறான போக்கு!
மாயவரத்தான்
ஒரு காலத்தில் தமிழ்ப் பத்திரிகையுலகில் ‘காமிக்ஸ் ‘ புத்தகங்கள் கலக்கிக் கொண்டிருந்தன. முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ், ராணி காமிக்ஸ் என்று வெளிநாட்டு காமிக்ஸ் வீரர்களின் தமிழ் பதிப்பை சிறுவர் முதல் பெரியோர் வரை ரசித்து படித்துக் கொண்டிருந்த காலம். அதன் தாக்கத்தில் தினப் பத்திரிகைகளில் கூட மந்திரவாதி மாண்ட்ரேக் போன்ற காமிக்ஸ் தொடர்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள்.
பிறகு வந்ததோ சிறுவர்கள் கதை புத்தகங்கள். கோகுலம், பூந்தளிர், அம்புலிமாமா என்று சக்கை போடு போட்டன.
அதன் பிறகு நாவல்களின் ஆட்டம்…பாக்கெட் நாவல், கிரைம் நாவல், அந்த நாவல், இந்த நாவல் என்று பத்திரிகையுலகமே கத்தியும், ரத்தமும், துப்பாக்கியும், சத்தமுமாய் வெளிவந்து கொண்டிருந்தன.
பக்தி பத்திரிகைகள், சிறுவர் பத்திரிகைகள், ஜனரஞ்சக பத்திரிகைகள் என்று அனைத்து பத்திரிகைகளும் போணியாகிக் கொண்டிருக்கும் நேரம் இது!
புலனாய்வுப் பத்திரிகைகள் என்ற பெயரில் ஒரு பகுதி இருக்கிறது. இதற்கு முன்னோடி என்று ஜூ.வி. என்று வாசகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ‘ஜூனியர் விகடன் ‘ பத்திரிகையை குறிப்பிடலாம். ஜூ.வி.யின் வெற்றியைத் தொடர்ந்து அதே போல ஜெராக்ஸ் காப்பிகளாக இன்றும் பல பத்திரிகைகள் வெளிவருகின்றன.
மேற்படி பத்திரிகைகளைத் திறந்தாலே ‘ரத்த வாடை ‘ வீசுகிறது என்று சொன்னால் அதில் மிகையில்லை! வெட்டு, குத்து, கொலை என்று ஒரே களேபரச் செய்திகள் தான்! மக்களுக்கும் இப்படி ஒரு பரபரப்பு தேவைப்படுகிறதோ ?!
பரபரப்புக்காக இந்த இதழ்கள் வெளியிடும் செய்திகளால் முக்கால்வாசி நேரம் மக்களுக்கு நேரடியான நன்மை கிடைக்கிறது என்றாலும் சமயத்தில் பாதிப்பும் ஏற்பட்டு விடுகிறது என்பதும் உண்மை தான்.
சமீபத்தில் வெளியான நடிகை ‘த்ரிஷாவின் திவ்யதரிசன ‘ செய்தியையே எடுத்துக் கொள்ளுங்களேன்…மேற்படி அசிங்கமான காட்சியில் இடம் பெறுவது த்ரிஷாவா அல்லது அவரைப் போன்ற வேறொருவரா என்ற கேள்விக்கெல்லாம் நாம் போக வேண்டாம். பத்திரிகைகளில் இந்த செய்தி தெரிய வருவதற்கு முன்பு ஓரிரு நூற்றுக்கணக்கானவர்களுக்கோ, அல்லது ஆயிரக்கணக்கானவர்களுக்கோ மட்டும் தெரிந்த அந்த விவகாரம், பத்திரிகைகளில் வெளியான உடன் உலகமெங்கிலும் உள்ள அனைத்து தமிழர்களின் பார்வைக்கும் வந்து விட்டது. ‘அந்தப்படம் பாத்திட்டியா ? ‘ என்று ஏதோ சூப்பர் ஸ்டாரின் சந்திரமுகி படத்தை பார்த்து விட்டு வரும் ரசிகனை கேள்வி கேட்பது போல கேட்டு, அதை எப்படியாவது பார்த்து விடும் ஆசையில் பெரும்பாலோர்!
பெரும்பாலான நேரங்களில் மக்களுக்கு நன்மைகளையே விளைவிக்கும் பத்திரிகைகள் சமயங்களில் சமுதாயத்தை ஒட்டு மொத்தமாக தவறான திசையிலும் திருப்பி விடுகின்றன என்பதற்கு இதுவும் ஒரு சான்று தான்!
– மாயவரத்தான் (info@mayiladuthurai.net)
- Reporting from Chennai about the Relief efforts on the Tsunami hit areas.
- கடற்கோள்
- சுனாமி அழிவு :: உரிமையும் கடமையும்
- கடல்கோள் அழிவிற்கு உதவுவோர் கவனிக்க வேண்டியது!
- சமஸ்கிருதமயமாதலும் நடுக்காட்டு இசக்கி அம்மனும்
- சூசன் சாண்டாக் – ஒரு வாசகனின் அஞ்சலி
- பெரானகன்
- வாரபலன் டிசம்பர் 30,2004 – தோழர் நிர்பன் , யசோதர – யமுனா, அரசாங்க விருந்து ,கொலைகள் அலைகள்
- நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் – 52
- இன்று புதிதாய்ப் பிறந்தோம்.. ?
- விலங்குகளுக்கு ஆறாம் அறிவு உண்டு என்ற நம்பிக்கையை வலுப்படுத்துகிறது ட்சுனாமி
- கடல் கொந்தளிப்பைக் குறித்த எச்சரிக்கையில் குளறுபடி
- இந்து மாக்கடல் பூகம்பத்தில் எமனாய் எழுந்த பூத அலை மதில்கள்! (Earth Quake Giant Sea Waves Attack South Asian Countries 2004)
- கடலம்மா….
- அழுகிறபோது எழுதமுடியுமா ?
- கடற்கோள்
- தவறான திருப்பம் (ஆங்கில மூலம் : ஆகா ஷாஹித் அலி)
- பெரியபுராணம் – 24
- கவிக்கட்டு 42
- ஞானக்கோமாளி – கவிதாப் பிரசங்கம்
- இராக்கில் இஸ்லாமிய மக்களாட்சி ? – பகுதி 2
- தெற்காசிய இந்து/இஸ்லாமியப் பண்பாடுகள் – ஒரு மறுசிந்தனை -1
- கடிதம் டிசம்பர் 30, 2004-எஸ். அரவிந்தன் நீல கண்டன்: அருள் செல்வன் கந்த சுவாமி: சலாஹுத்தீன்: ஜோதிர் லதா கிரிஜா
- கடிதம் டிசம்பர் 30,2004
- திரு பத்மநாப ஐயருக்கு 2004 ஆம் ஆண்டிற்கான இயல் விருது
- கடிதம் டிசம்பர் 30,2004 – பத்திரிகைகளின் தவறான போக்கு!
- உடன் பயின்ற நண்பனுக்கு ஒரு மடல்!
- ரெஜி
- ஓவியப் பக்கம் – பதினொன்று – ஜார்ஜ் கிராஸ்ச்- ஓவியமும் அரசியலும்
- மெய்மையின் மயக்கம்-32
- மக்கள் தெய்வங்களின் கதைகள் – 15. வன்னியன் கதை
- சங்கீதமும் வித்வான்களும்
- துயருறும் இலங்கை மக்களின் நிவாரணத்திற்கு அவசர வேண்டுகோள்!
- சாகித்ய அக்காதமி விருதுகள் – தமிழன்பனும் சகரியாவும்
- சதாத் ஹசன் மண்டோ நூல் வெளியீடு
- ‘சும்மா வருவாளா சுகுமாரி ? ‘ – இசை விழா விமர்சனம் – II
- விடுபட்டவைகள்-3 -தீர்க்கம்
- பத்மநாபஐயர்
- சுனாமி
- சுனாமி
- கடிதம் டிசம்பர் 23,2004
- மார்க்ஸ், டார்வின் மற்றும் பிரச்சாரம்
- ஒரு வேண்டுகோள்
- அறிவியல் சிறுகதை வரிசை 7 – நம்பிக்கையாளன்