மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கை

This entry is part [part not set] of 50 in the series 20040812_Issue

மயிலாடுதுறை சிவா


கரூர் அருகில் உள்ள மேட்டு மகாதன புரம் என்ற ஊரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் ஆண்டுதோறும்

ஆடிப் பெருக்கு கொண்டாடுவது வழக்கம். இதற்கு அருகில் உள்ள, சுற்றுப் பட்டு அனைத்து

கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் பெரும் திரளாக கலந்து கொள்வது வழக்கம். இதில் கொடுமை

என்ன வென்றால், சாமி புறப்படும் பொழுது பக்தர்கள் தங்கள் காணிக்கையாக, தலையில் படார்,

படாரென்று தேங்காய் உடைப்பது வழக்கம். தங்களுடைய கஷ்டங்களும் தேங்காய் உடைவது

போல் சிதறி விடும் என்று நம்புகிறார்கள், அதுதான் ஐதீகமாம்….என்ன கொடுமை இது…. ? ? ?

====இது சென்ற வார செய்தி…

இந்த வாரம் மனித உரிமைகள் ஆணையம் உறுப்பினர் ஒய்வுப் பெற்ற நீதிபதி திரு சம்பந்தம்

இதனை அடுத்த ஆண்டு முதல் நடக்காமால் இருக்க கட்டாயம் நடவடிக்கை எடுக்கப் படும்

என்று அறிவித்தார்.

வாழ்க மனித உரிமைகள் ஆணையம் !!!

நன்றி.

மயிலாடுதுறை சிவா…

Series Navigation

மயிலாடுதுறை சிவா

மயிலாடுதுறை சிவா