பாரதி மகேந்திரன்
திடீர் அடை – ஐந்தாம் வகை
தேவைப்படும் பொருள்கள் யாவுமே முன்னர் விவரித்த நான்கு வகை அடைகளுக்குத் தேவையானவைதான். ஆனால் இப்போது சொல்லப் போவது இந்த நான்கு வகை அடைகளையும் மிக எளிய முறையில் செய்ய உதவுவதாகும். உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு ஆகிய இரண்டு பருப்புகளைத் தவிர மற்ற எல்லாவற்றையும் மிளகாய் வற்றலுடன் சேர்த்து ரவைப் பக்குவத்தில் அரவை மில்லில் கொடுத்துத் திரித்து வைத்துக்கொள்ள வேண்டும். அல்லது இவ் விரண்டு பருப்புகளையும் கூட மற்றவற்றுடன் சேர்த்தும் திரிக்கலாம். ஊற வைத்துக் கடைசியில் மாவுடன் இவற்றைக் கலக்கும் வேலை மிச்சமாகும்.
இவ்வாறு திரித்து வைத்துள்ள பருப்புகளின் ரவையைத் தண்ணீரில் போட்டு ஊற வைக்க வேண்டும். அத்துடன் தேவையான உப்பு, பெருங்காயப்பொடி, கறிவேப்பிலை,கொத்துமல்லித் தழை ஆகியவற்றையும் சேர்த்து இந்த மாவு நன்றாக ஊறிய பிறகு அடைக்கல்லில் எண்ணெய் வார்த்து அடைகளாய்த் தட்டி எடுக்கலாம்.
மிளகாய் வற்றலைப் பருப்புகளுடன் சேர்த்துத் திரிக்கலாம்; அல்லது மாவைத் தண்ணீர் ஊற்றித் தயாரிக்கும் போது மிளகாய்த் தூளையும் அதில் போட்டுச் செய்யலாம்.
பருப்புகளை ஊஊற வைத்தல், களைதல், பிறகு மின் அம்மியில் அரைத்தல் போன்ற வேலைகள் இதனால் மிச்சப்படும். எனினும் பருப்புகளைக் களையாமல் திரித்து வாங்குவதால் தூசு, தும்புகளும் சேர்ந்து அரைபடும் சாத்தியம் இதில் உள்ளது. இது உடல் நலத்துக்கு ஊறு விளைவிக்கக் கூடியது. சில பெண்மணிகள் பருப்புகளைக் களைந்து வடிகட்டி நல்ல வெயில் காலத்தில் உலர்த்தி எடுத்துப் பிறகு திரிக்க அனுப்புவார்கள். இதுவே சிறந்தது.
உளுத்தம் பருப்பையும் பாசிப் பருப்பையும் மட்டும் தண்ணீரில் ஊற வைத்துக் களைந்து மாவுடன் சேர்த்து அடை தட்டினால் கரகரப்பு அதிகமாகி, அடையின் சுவையும் கூடும். அதற்கும் சோம்பல் படுபவர்கள் -அல்லது நேரம் இல்லாதவர்கள்- இவற்றையும் திரித்து வாங்கி வைத்துக்கொண்டு தேவைப் படும் போது திடீர் அடை தட்டலாம்.
இவ்வாறு செய்யப்படும் திரித்த பருப்பு அடைக்கு வெங்காயம் சேர்ப்பது நல்லது. அதிலும், பருப்புகளைக் களையாமல் திரிக்கக் கொடுப்பவர்கள் வெங்காயம் சேர்ப்பதன் மூலம் நலம் பெறலாம். ஏனெனில் வெங்காயம் கிருமி நாசினியாகும்.
mahendranbhaarathi@yahoo.com பாரதி மகேந்திரன்
- கால நதிக்கரையில்……..அத்தியாயம் – 8
- நாடக நெறியாளர், நடிகர் அ.சி. தாசீசியஸ_க்கு கனடாவில் இயல்விருதும் பாராட்டுவிழாவும்.
- தி.ஜானகிராமன் / அழியா நினைவுகள்!
- காதல் நாற்பது (23) சொர்க்கத்தைப் புறக்கணிப்பேன் !
- குமுதம் சுஜாதாவும் முஸ்லிம் முரசு மீரானும்
- அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் – ஒலிக்கவிதைப் பிரிவு
- எறும்பாய் ஊர்ந்த உலகம்
- ஒரு மனைவி,ஒரு குழந்தை,..சில வீடுகள் அவசியம்.
- வெண்ணிலவை நோக்கித் திட்டமிடும் இந்தியாவின் முதற்படி விண்வெளிப் பயணம்
- இலை போட்டாச்சு ! (31) திடீர் அடை – ஐந்தாம் வகை
- ஏழாவது ஆண்டின் நிறைவு கவிமாலை
- மீண்டும் காண்பேனா?
- அன்புடன் கவிதைப் போட்டிக்கு வந்த ஒலிக்கவிதைகளின் தேர்வுகள் பற்றி இரு நடுவர்களில் ஒரு நடுவரான ஜெயபாரதன் அவர்களின் கருத்துரை
- ஒலிக்கவிதைகளின் தேர்வுகள் பற்றி இரு நடுவர்களில் ஒரு நடுவரான கவிஞர் கதுமு. இக்பால் அவர்களின் நடுவர் உரை
- பிறைநதிபுரத்தானுக்கு பதில்
- சிங்கப்பூர், மலேசியத் தமிழ் இலக்கிய உள்ளங்களை ஒருங்கிணைக்கும் கருத்தரங்கம்
- நரேந்திரன் அவர்களுக்கு,
- தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் பன்னிரண்டு: மீண்டும் தொடங்கும் மிடுக்கு!
- வாழ்வின் பயணம்
- மெழுகுவர்த்தி
- பெரியபுராணம்-133 (நிறைவுப் பகுதி)
- என்னைப் பார்த்து என்ன கேட்கிறாய்?
- “கலைஞர் தொலைக்காட்சி” மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்
- தமிழ் நாட்டுப் பார்ப்பனர் பிரச்னையும் அதற்குத் தீர்வும்
- அணுகுமுறை
- நிலமகளின் குருதி! (இறுதிப் பகுதி)
- காட்சிகள் மாறும் கழக அரசியலும் கவிஞர் கனிமொழியின் அரசியல் பிரவேசம்.
- ஸஹாரா
- மாத்தா-ஹரி அத்தியாயம் 12
- உன் பாதை…
- பூங்கொத்து கொடுத்த பெண்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 3 பாகம்: 1-2)