உனை ஈர்க்காவொரு மழையின் பாடல்
எம்.ரிஷான் ஷெரீப்,
நான் மழை
ஈரலிப்பாக உனைச் சூழப் படர்கிறேன்
உன் பழங்கால ஞாபகங்களை
ஒரு கோழியின் நகங்களாய்க் கிளறுகிறேன்
எனை மறந்து
சிறுவயதுக் காகிதக் கப்பலும், வெள்ள வாசனையும்
குடை மறந்த கணங்களும், இழந்த காதலுமென
தொன்ம நினைவுகளில் மூழ்கிறாய்
ஆனாலும்
உன் முன்னால் உனைச் சூழச்
சடசடத்துப் பெய்தபடியே இருக்கிறேன்
உனைக் காண்பவர்க்கெலாம்
நீயெனைத்தான் சுவாரஸ்யமாய்க்
கவனித்தபடியிருக்கிறாயெனத் தோன்றும்
எனக்குள்ளிருக்கும் உன்
மழைக்கால நினைவுகளைத்தான்
நீ மீட்கிறாயென
எனை உணரவைக்கிறது
எனது தூய்மை மட்டும்
இன்னும் சில கணங்களில்
ஒலிச் சலனங்களை நிறுத்திக்
குட்டைகளாய்த் தேங்கி நிற்க
நான் நகர்வேன்
சேறடித்து நகரும் வாகனச்சக்கரத்தை நோக்கி
‘அடச்சீ..நீயெல்லாம் ஒரு மனிதனா?’
எனக் கோபத்தில் நீ அதிர்வாய்
எனைத் தனியே ரசிக்கத் தெரியாத
நீ மட்டும் மனிதனா என்ன?
– எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
- யாழ்ப்பாணத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டம்
- தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின்….
- ரீங்கார வரவேற்புகள்
- வார்த்தையின் சற்று முன் நிலை
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 1
- நட்பு
- சூர்யகாந்தனின் ‘ஒரு தொழிலாளியின் டைரி’
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -11
- அரசியல் குருபெயர்ச்சி
- தூசி தட்டுதல்
- நகர் புகுதல்
- தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் மௌனி
- இவர்களது எழுத்துமுறை – 39 பி.வி.ஆர் (பி.வி.ராமகிருஷ்ணன்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (மாயக் காட்சிகள் மீது மர்மச் சிந்தனைகள்) (கவிதை -36 பாகம் -1
- முகபாவம்
- சாலைக் குதிரைகள்
- திரிநது போன தருணங்கள்
- உதிரமெழுதும் தீர்ப்பின் பிரதிகள்
- முள்ளால் தைத்த நினைவுகளுடன்…..
- ஒரு பூ ஒரு வரம்
- பிரதிபிம்ப பயணங்கள்..
- இந்த வாரம் அப்படி – ராஜீவ் விளம்பரங்கள், கனிமொழி கைது,
- இலக்கியத்திற்கு ஒரு ’முன்றில்’…!
- உனை ஈர்க்காவொரு மழையின் பாடல்
- ஜப்பான் டோகைமுரா யுரேனியச்செறிவுத்தொழிற்கூடத்தில் நேர்ந்த விபத்து(1999 Fatal Accident at Tokaimura Uranium Enrichment Factory)
- தானாய் நிரம்பும் கிணற்றடி! கவிஞர் அய்யப்ப மாதவனின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டுவிழா!
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 37
- இற்றைத் திங்கள் – ஸ்பெக்ட்ரம் ஊழலும் ஊழலை விட மோசமான நாடகங்களும்
- எழுத்தாளர் துவாரகை தலைவனின் இரு நூல்கள் வெளியீட்டுவிழா – சில பகிர்வுகள்
- நாளை நமதே என்ற தலைப்பில் உயர் திரு ஆசீஃப் மீரான்
- இது மருமக்கள் சாம்ராஜ்யம்
- நம்பிக்கை
- மூலக்கூறுக் கோளாறுகள்..:_
- யார்
- இவைகள் !
- கை விடப்பட்ட திசைகள்..
- அகம்!
- அரசியல்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -1)
- கவிஞர் வைதீஸ்வரனின் கட்டுரைத்தொகுப்பு ‘திசைகாட்டி’ குறித்து