ஹெச்.ஜி.ரசூல்
என் கவிதை ஒரு துப்பாக்கிக்கு சமம்.
அதிலிருந்து பாயும் குண்டுகள்
எதிரிகளை ஒவ்வொன்றாக
சுட்டு வீழ்த்திக் கொண்டிருக்கின்றன.
புத்தனை கொன்றுவிட்டு வந்த
சீடனொருவன் பிணமானான்.
காந்தியை படுகொலை செய்த
இந்தியன் ஒருவன் பிணமானான்
மாவோவை கொன்று புதைத்துவிட்டு
ஆயுதத்தோடு வந்தவனும் அப்படியே.
என் இருப்பிடத்திலிருந்து
முன்னோக்கிச் செல்ல எத்தனிக்கிறேன்
பரவும் புகை மண்டலங்களில்
எதிரியின் முகம் துல்லியமாய் தெரியவில்லை.
ஏற்கெனவே என்மீதுபட்ட காயங்களிலிருந்து
ரத்தம் பீறிட்டு கிளம்புகிறது.
நெற்றிப் பொட்டிலும் நெஞ்சுக் குழியிலும்
குண்டுகள் துளைத்திருக்கின்றன.
என் விரல்களின் வேகம் குறைய
என்னுடல் தளர்ச்சியுற்று தடுமாறுகிறது.
தூரத்தில் ஒரு பொம்மைத் துப்பாக்கிவைத்து
என் மகளும் விளையாடிக் கொண்டிருக்கிறாள்
அவளுக்கும் தெரியாது
அது பொம்மை துப்பாக்கியல்ல என்பது.
குண்டுகள் தீர்ந்த பின்னரும்
என்கவிதை சுட்டுக் கொண்டேஇருக்கிறது.
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -37 << வறுமையும் சொத்தும் >>
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)<< மனித விதிக்கூண்டில் சிறை >> கவிதை -9
- ஈசா விண்வெளியில் ஏவிய ஹெர்செல்-பிளாங்க் பூதத் தொலைநோக்கிகள்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -3
- மே 2009 வார்த்தை இதழில்…
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 1
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 2
- கடவுளிடம் இருந்த கடைசி சைக்கிள்
- திரு நாகூர் ரூமி என்கின்ற பேராசிரியர் ஏ.எஸ்.முஹம்மது ரஃபி அவர்களுக்கு
- கலைவாணர் நூற்றாண்டு விழா/புதுமைப் பித்தன் நூற்றாண்டு விழா
- தமிழ் வகுப்பு ஐந்தாம் ஆண்டு விழா
- தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
- சங்கச் சுரங்கம் — 15: ஆறடி ஆறுமுகன்
- இந்திரா பார்த்தசாரதியின் “ஏசுவின் தோழர்கள்”
- நிதர்சனம் நாளை!கனவுகள் பொசுங்கிய உலகம்
- வேத வனம் -விருட்சம் 35
- ஏற்புடையதாய்…
- என்கவிதை சுட்டுவீழ்த்தியதில் பிணங்கள்
- புள்ளிகளை பரிகாசிக்காதீர்கள் !
- நினைவுகளின் தடத்தில் – (31)
- சைவம்
- பூ உதிர்ந்த ரோஜாச் செடி
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – நான்காவது அத்தியாயம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தாறு