எல்லைகள் இல்லா உலகம்

This entry is part [part not set] of 34 in the series 20090205_Issue

வே பிச்சுமணி



வேடன்தாங்கல் பறவைகளே
வாழ்க்கையின் உண்மைகளை
உலகில் பரப்புரை செய்பவர்களே

ஆறாம் அறிவின்
கற்பனை எல்லை கோடுகளை
விடுதலை சின்னமான இறக்கைகளால்
அழித்த அன்பு பறவைகளே

உங்களுக்கும் தாயகம் தமிழ்தானே
ஆதலால் புலம் பெயர்ந்து பறக்றீர்களோ
நீங்கள் விடுதலை உணர்வுடன்
நாங்கள் தாயகத்திலும் அகதிகளாய்

உங்கள் கூடுகள்
வேடர்களால் கூட அழிக்கபடுவதிலை
எங்கள் வீடுகள்
ஆள்பவர்களால் அழிக்கப்படுகின்றன

எங்களுக்கு எல்லைகள் உண்டு
எங்களுக்கு சிறகுகள் இல்லை
எங்களுக்கு ஆறாம் அறிவும் உண்டு
எங்களுக்கு உலகமே இல்லை

எல்லைகள் இல்லா உலகம்
யாதும் ஊரே யாவரும் கேளீர்
தமிழ் கவிகளின் ஆசை
இப்படியா நிறைவேற வேண்டும்

எல்லைகள் இல்லா உலகில்
வேடந்தாங்கல் பறவைகளாய்
மனிதன் விடுதலை பெறவேண்டும்
அந்த நாள் வரும் வரை
அகதிகளாய் சில இனங்கள் ……….

Series Navigation

வே பிச்சுமணி

வே பிச்சுமணி