தூக்கத்தோடு சண்டை

This entry is part [part not set] of 26 in the series 20080626_Issue

முருகன் சுப்பராயன்


இரவு நேரங்களில்
ஞாபக பதிவேட்டில் உள்ள
மயிலிறகுகள்
விழித்தெழிந்து
ஆடுகின்றன

ஒரு காலத்தில்
ஞாபக சக்திக்கு
மருந்து சாப்பிட்ட நான்
ஞாபக மறதி வேண்டுமாய்
இறைஞ்சி
வேண்டுகிறேன்

அசரீ சொல்லுகிறது
தியானம் செய்
இல்லையேல்
ஞாபக பதிவேட்டில்
எழுதா பக்கங்களை
நிரப்பு

ரெண்டாவது பரிகாரம்
எனக்கு சுலபம்
ஆனாலும் பக்கத்தில்
வர தயங்குகின்றன
எழுத்துக்கள்

அதற்குள்
தூங்க போகிறது
இரவு
எனது தூக்கத்தை
கலைத்து விட்டு


Murugan Subbarayan
murugan_ambal@yahoo.com

Series Navigation

முருகன் சுப்பராயன்

முருகன் சுப்பராயன்