தாகூரின் கீதங்கள் – 13 கண்ணீர்ப் பூக்கள் !

This entry is part [part not set] of 40 in the series 20080124_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


என் இதய ரகசியத்தின் மீது

உன் பார்வையைத் திருப்பி

என்ன கண்டாய் நீ

என்னினிய நேசனே ?

எனது பாதாள வீழ்ச்சிகளை,

என் தவறுகளை,

என் முரண் பாடுகளை

என் முயலாத தவிர்ப்புகளை

எல்லாம் நீ

மன்னித் தருள்வாயா ?

வழிபடாத நாட்கள்

எத்தனையோ ? உன்னை

வணங்கிடாத இரவுகள்

எத்தனையோ ?

உன்னை அடிக்கடிப்

புறக்க ணித்தேன் நேசனே !

பறிக்கப் படாமலே

கருகிப் போயின

நெருக்க மரக்கொத்தில்

பூத்து விரியும்

பூஜைக் குரிய மலர்கள் !

என்னுடைய இந்தப்

புல்லாங் குழலில் நீ புகுத்திய

இன்னிசைத்

தொனி தணிந்து போனது

அடிக்கடி,

அடுத்து அடுத்து !

இன்னிசை அமைக்கும்

கவிஞனே !

உன்னிசைக்குப் பாட முடியுமா

என்னால் ?

உன் தோட்டத்தைக்

கண்காணிக்க

முயலும் போது

உறங்கிப் போனேன் நிழலை

அண்டிப் போய் !

அலைகள் பொங்கி எழ

விழிகள் நிரம்பி விழ

விரிந்திடும்

கண்ணீர்ப் பூக்களைக்

கொண்டு வந்துள்ளேன்

உனக்கு !

************

Original Source: A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (January 21, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா