This entry is in the series 20071004_Issue

ரஜித்



காலாண்டு இருக்கும்போதே
கட்டியங்கூறும் தீபாவளி

பழையன கழிகிறது
பழங்கீற்றாய்
புதுக்குறுத்தாய் இதோ
புதுப்புது பொருட்கள்

குத்துவிளக் காகிறது
மொத்த வீடும்

அன்பு பரிமாறும்
அடுக்களைகன்
அண்டா குண்டாக்களில்
அதிரசங்கள் முறுக்குகள்

பிள்ளைகளுக் கெல்லாம்
வெள்ளிக் காசு முத்தங்கள்

மரணிக்கும்வரை சிரிக்கும்
மத்தாப்பூக்கள்

பூக்களே நாணும்
புத்தாடை பூரிப்புகள்

இரும்புத்தூளாக குடும்பங்கள்
காந்தமாக தொலைக்காட்சிகள்

படநாயகனுக்கு
பாலாபிஷேகங்கள்

எல்லாத் தீபாவளிகளும்
இப்படித்தான்

ஒரு கேள்வி

நரகாசுரர்கள் செத்துப்போனது
உண்மையா ?


rajid_ahamed@yahoo.com.sg

Series Navigation