இருளும். . . .வெளிச்சமும். . .
வைகைச் செல்வி
வெளிச்சத்தை
நாள்தோறும்
உருவாக்க வேண்டும்.
இருட்டோ இயல்பானது.
வெளிச்சத்திற்கு
பல உருவங்கள்
பல நிறங்கள்
இருள்
மாறாதது.
ஆழ்ந்த இருள்
பயத்தை உண்டுபண்ணினாலும்
அமைதியும் இருக்கும்.
வெளிச்சத்தின்
இரைச்சலில்
மனம் குருடாகும்.
வெளிச்சத்தை
நேசிக்க வேண்டிய
எனக்கு
சில வேளைகளில்
இருட்டும் பிடித்திருக்கிறது.
இருளில்தான்
மனிதர்களால்
மாற இயலாது
பச்சோந்திகளாக.
*********
அனுப்பியவர்: சி. ஜெயபாரதன், கனடா
vaigai_anne@yahoo.com