சிலேடை வெண்பாக்கள்!

This entry is part [part not set] of 32 in the series 20070322_Issue

அகரம் அமுதா



கடிதமும் கண்ணும்!

மூடித் திறப்பதனால்; மையெழுதும் போக்கதனால்;

ஓடி இலக்கடையும் ஒற்றுமையால்; – நாடிப்

படிப்போர்க்குச் செய்தி பகிர்தலி னால்நற்

கடிதமும் கண்கள்நேர் காண்!

தனமும் குணமும்!

ஒன்றிருப்பின் ஒன்றிரா ஒற்றுமையால்; உற்றவர்க்கே

நன்றாய் பெருமைபல நல்குதலால்; – என்றும்

மனிதர் ஒருசிலர்க்கே வாய்த்தலால் குன்றும்

தனம்குணம்ஒன் றென்றால் தமும்!


agramamutha@yahoo.com

Series Navigation

அகரம்.அமுதா

அகரம்.அமுதா