புல்லில் உறங்குதடி சிறு வெண்மணிபோல் பனித்துளியே!

This entry is part [part not set] of 41 in the series 20061109_Issue

கரு.திருவரசு


எடுப்பு

புல்லில் உறங்குதடி – சிறு

வெண்மணிபோல் பனித்துளியே

உள்ளம் தெளியுதடி – அந்த

ஒரு துளியின் தூய்மையிலே

கண்ணிகள்

வானத் திறங்கி வந்த – அந்த

வண்ணத் துளி போலிருந்தேன்

ஞாலப்பெரு வெளியில் – வந்து

விழுந்து எனை நானிழந்தேன்

முத்துப் பனித்துளியோ – சுடர்

மூலத்திலே சேர்ந்துவிடும்

பித்துப் பிறவி இது – இங்கு

பேதம் வளர்க்குதடி

சொட்டும் மணி வைரம் – வாழும்

சின்னஞ்சிறு வாழ்வினிலே

முற்றும் உயர்ந்ததடி – அம்மம்மா

மோனத்திலே மின்னுதடி


thiru36@streamyx.com

Series Navigation

கரு.திருவரசு

கரு.திருவரசு