செம்பருத்தி

This entry is part [part not set] of 46 in the series 20031218_Issue

வேதா மஹாலக்ஷ்மி


பழைய சோற்று மிச்சத்தின்
பழகிப்போன புளிப்பைத் தாண்டி,
மனதில்
உணரும் சாராய வாசனை…
புதிதான காலைகளில்
புற்றாய் முளைவிடும் உன்
முன்னூறு சந்தேகங்களில்!!

நான்
பூட்டி வைத்த புன்னகை
புதிர் அவிழ்க்கும், புரிந்ததுபோல்…
இனியும் புதிது புதிதாய்
ஒரு பிறப்பெதற்கு.. என்னும்படி!

போகவும் துணிவில்லை
இருக்கவும் துணியவில்லை…
அடித்துப் போகும் ஆற்றாமையில்
இயல்பாய் , ஏதும் செய்ய இயலா இலையாய்…
உன் வார்த்தை இழைகளின்
வக்கிர முடிச்சில், வன்மையில்..
சிக்கி சிதைந்து சிவப்பாகும்
பருத்தியின் மென்மையாய்…

இங்கே நானும், என் இளமையும்!!
——————————————
veda
piraati@hotmail.com

Series Navigation

வேதா மஹாலக்ஷ்மி

வேதா மஹாலக்ஷ்மி