விடிவெள்ளியோடு ஓர் விடியல்
திலகபாமா
வாசலிலே வாழைத்தோரணம் கட்டி
மாரியாத்தா கோவிலிலே
மங்களத் தாலி முடிஞ்சு
சீர் செனத்தி நகை செஞ்சு
ஊர் உறவு வாழ்த்து சொல்லி
பிணக்கும் மணக்கும்
போலிச் சண்டைகளூடே
எங்களது திருமணமும்
மூவேழு வருடமாயென்னிலிருந்த
நெற்றிவான் திலகம்
ஒரேழு திங்களாய்
ஓருடலாகி கலந்தவன்
நெருப்பில் வெந்து புகையாக
என் வானம் அமாவாசையானது
வீழ்ந்த கொழுகொம்பு என்னுள்
விரிந்த மலரையுமா
உதிர்க்கச் சொன்னது
மின்னும் விடி வெள்ளி யென்
மேனிக்குள்
உடலில் கலந்தவனால்
உயிர் பெற்ற உதிரம்
விடியலுக்காசைப்பட்டு
விடிவெள்ளி அழிக்க போதனை
புது
உறவுக்கசைப்பட்டு என்
உதிரம் கலந்த உயிர்
உருக்குலைக்க யோசனை
புதுப்பூசாரிக்காய் என்
கர்ப்பகிரகத்துளவதரித்த
குலதெய்வத்தை விரட்டவா ?
தொலைந்த விக்கிரகங்களுக்காக
என்னுள் ஒளிவீசும் ஜோதியை
ஊதி அணைத்திடவா ?
தொப்பூழ் கொடி உயிரழித்து
நான் படர கொடி தேடவா ?
நிலம் கை மாற்றும் கதையாய்
கழுத்தின் உரிமை
தந்தையால் தரப்பெற்று
தாலி கட்டியவனால் பெறப்பட்டது
கர்ப்பப்பையின் உரிமையை
குந்தியைப்பொல்
அடுத்தவர் தீர்மானிக்கவும்
ஆற்றில் விடவும்
அநுமதிக்கப்போவதில்லை
விடிவெள்ளியோடுஎன் வானம்
விடியச் செய்யும் கதிரவனுக்கென
காத்திருப்பு……..
- ஒரு காதலனின் டைாிக் குறிப்பு !
- ஒரு கலப்பை கண்ணீர் வடிக்கிறது….
- அவள்
- இவளோ ?
- பாரம்பரியத்தை உயிரோடு வைத்திருக்க போராடும் ஆப்கானியக் கலைஞர்கள்
- ஆண்மையின் புதிய அளவு கோல்கள் :ராஜ்குமார் கன்னட வெகுஜன தளத்தில் – 3
- இந்த வாரம் இப்படி – ஃபெப்ரவரி 11, 2001
- காதல்
- விடிவெள்ளியோடு ஓர் விடியல்
- பின்-நவீனத்துக்கு முன்னும் பின்னும் (பகுதி 2)
- நானோர் இந்தியக் குடிமகன்!
- ச.ஹ.ரகுநாத்தின் கன்னடக் கவிதைகள்
- எந்நாளும் தமிழ்ப் பெண் அழ விதியோ
- Day-O (The Banana Boat Song)
- உயிர்வழிஅடையாளத்துறை (Biometrics) -((எம் ஐ டி டெக்னாலஜி ரிவியூவில் பேசப்பட்ட 10 முக்கிய எதிர்காலத் தொழில் நுடபங்கள் – 5 )
- கணினியில் ஆவணங்களை வடிவமைத்தல்
- இலக்கியமும் திரைப்படமும்–பாண்டிச்சேரி கருத்தரங்கு (ஒளிப்படங்களுடன்)
- குற்றாலம் பதிவுகள் இலக்கிய அரங்கு – அனுபவப் பதிவுகள். -2