நேசிப்பாளர்கள் தினம் (VALENTINE ‘S DAY )

This entry is part [part not set] of 32 in the series 20060210_Issue

ஆல்பர்ட் பெர்னாண்டோ


பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளில் வளர்ந்து, பரவலாக உலகம் முழுக்க

பரவியதுதான் பிப்ரவரி மாதம் 14ம் தேதி கொண்டாடப்படும் வாலண்டைன் தினம்.

நண்பர்கள், காதலர்கள், ஏன், கணவன் – மனைவி இப்படி நெஞ்சில் நேசங்களை

வளர்த்துக் கொண்டவர்கள் ஒருவருக்கொருவர் நேரில், அஞ்சல் மூலமாக மகிழ்ச்சி

நிறைந்த ‘வாலண்டைன் வாழ்த்துக்கள் ‘ என்று சொல்லி தங்களை வெளிப்படுத்திக்

கொள்கிற உற்சாக தினம் இது! மையல் கொண்ட இரு இதயங்களுக்கு குதூகலமளிக்கிற

வசந்த தினம் இது! ‘BE MY VALENTINE ‘ என்றும் ‘FROM YOUR VALENTINE ‘

என்றும் தங்கள் உள்ளக் கிடக்கையை உணர்த்துகிற உணர்ச்சிப்பூர்வமான நாள்

இது!

இதன் தொடக்கம் என்ன ? எப்படி ? ஏன் ? என்ற கேள்விகள் எழுவது இயற்கை. இதற்கு

விடை தெரிந்து கொள்வதை விட, தமக்குப்

பிடித்த மனதின், எண்ண ஓட்டங்களை அறிந்து கொள்வதில் தான் ஆர்வம் காட்டுவர்

பலர் என்பது, உள்ளங்கை நெல்லிக் கனி

விஷயம். காலம்காலமாக வாழ்க்கையோடு ஒன்றிக் கலந்து நிற்கிற இந்த இனிய

தினம் உலகில் முகிழ்த்த விதத்தை சற்று ஆராய்ந்து பார்ப்போமா ?

ரோமானியர்கள் லூப்பர்காலியா என்ற திருவிழா கொண்டாடுவதை வழக்கமாகக்

கொண்டிருந்தனர். இன்னும் சிலர் கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றுக்கும்

மேற்பட்ட புனிதர்களைக் குறிக்கும் வகையில் இந்த நாளைக் கொண்டாடியதாகவும்

ஒரு கருத்து

நிலவுகிறது. இன்னும் சிலர் பிப்.14ம் தேதி மத்திய இங்கிலாந்தில்

ஒருவிதப் பறவைகள் மூலமாகத் தங்கள் ஜோடிகளைத் தேர்வு செய்த ஆங்கிலேயப்

பழமைவாதிகளின் இந்த நாளையே வாலண்டைன் தினமாகக் கொண்டாடியதாகவும் கருத்து

நிலவுகிறது.

ரோமானிய அரசனின் ஆட்சிக் காலத்தில்தான் வாலண்டைன் தினம் கொண்டாடத்

துவங்கியதற்கான வலுவான சான்றுகள் உள்ளன. ரோமானியச் சக்கரவர்த்தி

கிளாடிஸ் II கொடூரமாகவும், கோமாளித்தனமாகவும் ஆட்சி புரிந்தகாலகட்டம்

அது! முட்டாள் தனமாக தமது இராணுவத்திற்கு கட்டளை பிறப்பிப்பான். இதனால்

இராணுவத்திலிருந்து வீரர்கள் வெளியேறினர். புதிதாக இராணுவத்தில் சேர

யாரும் முன்வரவில்லை. தனது மந்திரி பரிவாரங்களை அழைத்து ஆலோசனை

நடத்தினான். உருப்படியாக ஒருவரும் சொல்லவில்லை என கோபப்பட்டான்.

அந்தப்புரத்தில் தனது அந்தரங்க நாயகியுடன் சல்லாபமாக கிளாடிஸ் இருந்த

நள்ளிரவு வேளையில் திடாரென ஞானோதயம் ஒன்று பிறந்தது. மஞ்சத்தை விட்டு

எழுந்து மளமளவென அரசவுடை தரித்து தர்பாருக்கு கிளம்பினான். மூத்த

அமைச்சரை அழைத்து வரச் சொன்னான். அர்த்த ராத்திரியில் என்னமோ ஏதோவென

அவரும் பதறியடித்து ஓடி வந்தார். ‘நாட்டு மக்களுக்கு ஓர் அறிவிப்பை

உடனடியாக அறிவிக்கச் செய்யுங்கள், ரோமாபுரி நாட்டில் இனி எவருமே திருமணமே

செய்து கொள்ளக்கூடாது. ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களும் ரத்து

செய்யப்படுகிறது. இந்த அரச கட்டளையை மீறுபவர்கள் யாராயினும் கைது

செய்யப்பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப்படுவார்கள். பின்னர்

அறிவிக்கப்படும் ஒரு நாளில் பொது இடத்தில் அவர்கள் கல்லால் அடித்து தலை

துண்டிக்கப்பட்டுக் கொல்லப்படுவார்கள். இது இன்றே, இப்போதே அமலுக்கு

வருகிறது ‘ என்றான் அரசன்.

அமைச்சர் ஏதோ சொல்ல வாயெடுக்க…கிளாடிஸின் உறுமல், ‘ மறை கழன்ற மன்னனிடம்

பேசிப் பயனில்லை என முடிவு செய்து அவ்வாறே அறிவித்தான். அரசனின்

அறிவிப்பை அறிந்து ரோமானியர்கள் அதிர்ந்து போனார்கள்.

அரசனின் அறிவிப்புக்கு காரணம், திருமணமானவர்கள் தங்கள் அன்பு மனைவியைப்

பிரிந்து வரத் தயங்குகிறார்கள். திருமணமான வாலிபர்களோ தங்கள் காதலியை

விட்டுவிட்டுப் பிரிந்து வரத் தயங்குகிறார்கள். குடும்ப வாழ்க்கை,

அன்புக் காதலி இல்லாதபட்சத்தில் மனம் வெறுத்து இராணுவத்தில் சேருவார்கள்.

போரிலும் மூர்க்கத்தனமாகப் போரிடுவார்கள். வெற்றி எளிதில் கிட்டும்

என்று மன்னனுக்கு எழுந்த எண்ணமே இந்த அறிவிப்பை வெளியிடச் செய்தது.

திருமணங்கள் கனவாகிப் போனதை எண்ணி சோகக் கண்ணீரில் ரோம் மிதந்தது.

ஆணும் பெண்ணும் கூடிக் களிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆதியில் கடவுளே

தாம் ஏவாளைப் படைத்தார். இறைவன்

அங்கீகரித்த இரு மன இணைப்பை அரசன் அறுத்தெறியத் துணிந்தது அநியாயம் என்று

கொதித்தெழுந்த கிறிஸ்தவ பாதிரியாரான வாலண்டைன் அரச கட்டளையை மீறி

இரகசியமாகத்

திருமணங்களை நடத்தி வைத்தார்.

முதல் வாலண்டைன் வாழ்த்து!

எட்டப்ப ஒற்றர்கள் மூலம் இந்தச் செய்தி அரசனுக்கு எட்டிவிட வாலண்டைன்

கைது செய்யப்பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். மரணதண்டனையை

நிறைவேற்ற நாளும்

நிர்ணயிக்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் சிறையில் இருந்த பாதிரியார்

வாலண்டைனுக்கும் சிறைக் காவலர் தலைவனின் பார்வை இழந்த மகள்

அஸ்டோரியசுக்கும் அன்பு பூத்தது. மரணத்தின் வாசற்படியில் நின்று

கொண்டிருந்த வாலண்டைனை விடுவிக்க அஸ்டோரியஸ் முயன்றாள். இதை அறிந்த

சிறைத் துறைத் தலைவன் மகளை வீட்டுச் சிறையில் வைத்தான். இழந்த கண்கள்

கிடைத்தது போன்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்த அஸ்டோரியஸின் கனவுகள்

சிதைந்தது. உருக்குலைந்து போனாள், அஸ்டோரியஸ். அஸ்டோரியஸுக்கு, அத்தனை

கட்டுக் காவலையும் மீறி காகித அட்டை ஒன்று, செய்தி சுமந்து வந்தது.

விழி இருந்தும்

வழி இல்லாமல் – மன்னன்

பழி தாங்கிப் போகிறேன்.

விழி இழந்து – பார்க்க

வழி இழந்து, நீ மன

வலி தாங்காது கதறும்

ஒலி கேட்டும், உனை மீட்க

வழி தெரியாமல் மக்களுக்காக

பலியாடாய் போகிறேன்; நீ

ஒளியாய் வாழு! பிறருக்கு

வழியாய் இரு!! சந்தோஷ

ஒளி உன் கண்களில்

மிளிறும்!!

-உன்னுடைய வாலண்டைனிடமிருந்து!

( -From your Valentine…. அன்றிலிருந்து இன்று வரை நேசிப்பாளர்களிடையே

பரந்து விரிந்து நிறைந்து நிற்கிற வைர வரி வாசகமாகும். இது மட்டுமே

உண்மையாக இருக்குமானால் இந்தச் செய்தியைத் தாங்கி வந்த முதல் வாலண்டைன்

அட்டை இதுவாகத்தானிருக்கும். )

வாலண்டைனின் செய்தியை, தோழி வாசிக்க அஸ்டோரியஸின் கண்கள் கண்ணீர்

பூக்களைச் செறிந்த அதே நேரத்தில் வாலண்டைன் கல்லால் அடிக்கப்பட்டு

சித்திரவதை செய்த பின் வாலண்டைனின் தலை துண்டிக்கப்பட்டது. அந்த நாள்

270வது வருடம் பிப்ரவரி மாதம் 14ம் தேதி.

அரச கட்டளையை மீறி மனங்களை இணைய வைத்து தன்னையே பலி கொடுத்த வாலண்டைன்

‘ரோம் ‘ மக்களின் மனங்களில் மறையாமல் நிறைந்திருந்தார். ரோமானிய

சர்ச்சுகள் ஐரோப்பியரின் கட்டுப்பாட்டுக்குள் வந்த போது ‘பாகான் ‘

விடுமுறை தினம் அறிவிக்கப்பட்டது. பாகான் என்றால் மதமற்றவன் என்று

பொருள். பின்னர் இதுவே வாலண்டைன் தினமாகக் கொண்டாடப்பட்டது. ஏறக்குறைய

200 வருடங்களுக்குப் பிறகு போப்பாண்டவர் ஜெலாசியஸ் I ( 496 ம் ண்டு )

வாலண்டைனைப் புனிதராக அறிவித்தார். அன்றிலிருந்து மனிதப் புனிதர்

வாலண்டைன் தினம் ( St.Valentine ‘s Day ) உலகம் கொண்டாடத் தலைப்பட்டது.

அமெரிக்கா…

அமெரிக்காவில் மழலையர் வகுப்பில் துவங்கி பல்கலைக் கழகம் வரையிலும்

வாலண்டைன் பார்ட்டி நடக்கிறது. மழலையர் வகுப்பில் விபரம் புரியாத அந்தப்

பிஞ்சுகள் கர்ம சிரத்தையாக தாமே வாலண்டைன் வாழ்த்து அட்டை தயாரிப்பது,

விதவிதமான ‘ ?ார்ட் ‘ டுகள் என்று மெனக்கெட்டு செய்வதைப் பார்த்தால் நம்

ஊரில் கல்லூரி மாணவர்கள் கூட இது போன்று ஈடுபடுவதில்லை என்றே சொல்ல

வேண்டும். மழலையர் வகுப்பில் பயிலும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு

காகிதப்பை பிப்ரவரி முதல் வரத்தில் கொடுக்கப்படுகிறது. அந்த வகுப்பில்

பயிலும் குழந்தைகள் பெயர் அடங்கிய பட்டியலையும் கொடுத்துவிடுகிறார்கள்.

ஒவ்வொரு குழந்தையும் அத்துனை பேர்களுக்கும் வாழ்த்து அட்டை தயாரித்து

அல்லது கடையில் வாங்கி பிஞ்சு விரல்களால் வண்ணக்குச்சிகளை வைத்து எழுதி,

வரைந்து கூடவே மிட்டாய்கள், சாக்லேட்டுகள் போன்ற இனிப்புகளையும் கொண்டு

போய் பள்ளியில் உள்ள அந்தந்த மாணவர்கள் பைகளில் பெயரைப் படித்து

சந்தோஷமாக அவரவர் பைகளில் போடும்போது ஏற்படும் உற்சாகத்திற்கு ஈடு இணை

ஏது ?

உணவு விடுதிகள், கேளிக்கை அரங்குகளில் முன்பதிவு செய்துவிட்டு

புத்தாடைகள் சகிதமாக யுவன்களும்,யுவதிகளும் டேட்டிங் வைத்துக் கொண்ட

வயதான ஜோடிகள் உட்பட நடனங்களிலும் ஷாம்பெய்ன் பார்ட்டிகளிலும்

அமெரிக்காவில் அமரிக்கையாக சந்தோஷ சாம்ராஜ்யத்தில் நீந்தி மகிழ்கிற

ஒப்பற்ற தினமாகக் கொண்டாடப்படுகிறது.

அமெரிக்காவில் ரிச்மாண்ட் என்ற இடத்தில் 1898 நவம்பர் 21ம் தேதி உலகின்

முதல் வாலண்டைன் மியூசியம் திறந்து வைக்கப்பட்டது.

பிரிட்டன்…

பிரிட்டிஷ் குழந்தைகள் இந் நாளில் விஷேசமான பாடல்களைப்

பாடிக்கொண்டாடுவார்கள். பெரியவர்கள் இவர்களுக்கு பரிசுகள், பழங்கள்,

கேக்குகள், சாக்லேட்கள் மற்றும் பணமும் கொடுத்து மகிழ்வார்கள்.

இங்கிலாந்தின் ஒரு பகுதியில் இந் நாளில் விஷேசமாகத் தயாரிக்கப்பட்ட

‘வாலண்டின் பண் ‘ணை பிறந்த நாள் கேக் போல வாங்கி நண்பர்களுக்கும் தங்கள்

மனங்கவர்ந்தவர்களுக்கும் அளித்து மகிழ்வார்கள்.

1700களில்….

வனிதையர்கள் தங்கள் வருங்கால இணையைத் தேர்வு செய்ய 1700களில் நூதனமான

முறையைக் கையாண்டுள்ளனர். தங்களுக்குப் பிடித்தமான ஒரு சிலரின்

பெயர்களைக் காகிதங்களில் எழுதி களிமண்ணில் மடித்து குளத்துத் தண்ணீரில்

போடுவார்கள். முதலில் எந்தப் பெயர் கொண்ட காகிதம் தண்ணீருக்கு மேல் தலை

காட்டுகிறதோ, அந்தக் காகிதத்தில் உள்ள நபர் தான் விசுவாசமான கணவராக

இருப்பார் என்று கருதி தேர்ந்தெடுப்பார்களாம். அந்த நாள் பிப்.14!

இதுவே மத்திய இங்கிலாந்தில் திருமணமாகாத பெண்கள் ஒரு விதமான வாசனை தரும்

இலைகள் ஐந்தை தங்கள் தலையணையின் நான்கு முனைகளிலும் ஒன்றை நடுவிலும்

வைத்துக் கொண்டு வாலண்டைன் தினத்தன்று தூங்குவதை வழக்கமாகக்

கொண்டிருந்தனராம். அப்படித் தூங்கும் போது கன்னியரின் கனவில் வருங்காலக்

கணவன் வருவான் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்ததாம்.

( மூட நம்பிக்கைகளில்

நம்மவர்களையும் மிஞ்சித்தான் இருந்திருக்கின்றனர். )

இத்தாலி…

இத்தாலியில் இந்நாளை விசேஷ நாளாக அனுசரிப்பதோடு பெரிய வாலண்டைன்

விருந்துடன் (Valentine ‘s Day Feast ) கொண்டாடி மகிழுகின்றனர். மேலும்

திருமண வயதைக் கடந்தும் தள்ளிப் போகிற ?டே என்கிற ஏக்கங்களில் அழுத

கண்ணும், சிந்திய மூக்குமாக இருக்கிர மங்கையர்க்கு இந்த நாள் மகிழ்ச்சிப்

பூக்களை மலர வைக்கிற மங்கல நாள்! சூரியன் சுதாரித்து எழுமுன் அதிகாலையில்

எழுந்து நீராடி தங்களை அழகுபடுத்திக் கொண்டு ஜன்னல் முன்னால் அமர்ந்து

விடுவார்களாம். அறிந்தும் அறியாமல் அவ்வழியாக வருகிற வாலிபர்களை இந்த

‘ஜன்னல் மின்னல்கள் ‘ கண்களால் தூதுவிடுவார்கள். ( இதை அறிந்தே சில

ஜொள்ளுப் பார்ட்டிகள் இப்படியும் அப்படியும் நடமாடியிருக்கக் கூடும்! ?)

வேல் விழிகளின் வீச்சில் சிக்கிக் கொண்டால்… அப்புறம் என்ன பேண்டு

வாத்திய முழக்கத்தோடு சர்ச்சில், தம்பதியராகி விடுவார்களாம். இந்த

வழக்கம் வாழையடி வாழையாக இன்றும் இத்தாலியிலும், பிரிட்டனிலும் கூட

நிலவுகிறது. அந்தக்காலத்தில் இப்படி நடந்தது என்பதற்கு ஆதாரமாக ‘

ஷேக்ஸ்பியர் ‘ இருக்கிறார். தனது பிரபல நாடகமான ‘ ?ாம்லெட்டில் ‘ வரும்

‘ஓப்பெலியா ‘ என்ற பெண் கதா பாத்திரம் ஜன்னல் ஓரமாக அமர்ந்து இந்த

சம்பவத்தைப் பாடுவதாக அமைத்துள்ளதிலிருந்து அறியலாம். அந்தப் பாடல்

வரிகள் இதோ : –

காளையரே காலை வணக்கம்!

உங்கள் நல் வரவிற்காக

காலை வேளையில் ஜன்னல் முன் – நான்

தவமிருக்கிறேன். நீ வந்து என்

வளைக் கரம் பற்றக் காத்திருக்கிறேன் –

உன்னுடைய வாலண்டைனாக ! – ( ?ாம்லெட் -1603 )

டென்மார்க்…

டென்மார்க்கில் ஒரு வகை வெள்ளைப் பூக்களை ( Snow Drops Flower )

தங்களுக்குப் பிரியமானவர்களுக்கு அளித்து மகிழ்ச்சியைப்

பரிமாறிக்கொள்வர். டேனிஷ் வாலிபர்கள், ‘கெக்கேப்ரேவ் ‘ என்ற வாலண்டைன்

கடிதத்தை எழுதி வனிதையர்களுக்கு அனுப்புவர். தமாஷான வசனங்களையோ,

கவிதைகளையோ எழுதி பெயரை எழுதுவதற்குப் பதிலாக புள்ளிகளை வைத்து

அனுப்புவார்கள். பெயரில் எத்தனை எழுத்து இருக்கிறதோ அத்தனை புள்ளிகள்

இருக்கும். இதை வைத்து தமக்கு வலை வீசிய வசீகரன் யார் என்பதைக் கண்டு

பிடித்துவிட்டால் அவருக்கு ‘ஈஸ்ட்டர் எக் ‘ கொடுத்து ‘ ?க் ‘ பண்ணிக்

கொள்வார்கள். பிரிட்டனில் பல இடங்களில் இந்தப் புள்ளிக் கடிதம் மூலம்

தங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் வழக்கத்தைக்

கொண்டிருக்கிறார்கள்.

இப்படி மேற்கத்திய நாடுகளில் வளர்ந்து பரவிய வாலண்டைன் தினம் வரலாறு

அறியாமலே உலகம் முழுக்க ‘காதலர் தினம் ‘ என்கிறதாகவே பீடு நடை போடத்

துவங்கியுள்ளது. கீழை நாடுகளில் மேல்தட்டு மக்களிடையே மட்டுமே வாலண்டைன்

வாழ்த்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படுகிறது. இன்னும் சில, பல ஆண்டுகளில்

அதிகாரப்பூர்வமாகவே பிப் 14ம் தேதி ‘காதலர் தினம் ‘ என அங்கீகரிக்கப்

பட்டுவிடலாம். வாலண்டைன் பற்றி பல கிளைக் கதைகள் கூட முளைக்கலாம்.

வாலண்டைன் வாழ்ந்த காலத்தைவிட வரலாறுகளைத் தேடிப் பிடித்து வருங்காலச்

சந்ததியினருக்கு பொக்கிஷமாக்கி வைக்கிற பேராளர்கள் ஏராளமாய் இருக்கிற

காலமிது.

எனவே கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன்பே

அன்பு,ஆசை,நேசம்,பாசம்,பற்று,காதல் என்கிற மூவெழுத்துக்கள்

முகிழ்த்துவிட்டது. இன்னும் மூன்று நூற்றாண்டுகள் பிறந்து வந்தாலும்

இந்த மூவெழுத்துக்குரிய தினமாக வாலண்டைன் தினம் வாழும்!

வாழ்த்து அட்டை…

பொங்கலுக்கும் தீபாவளிக்கும், கிறிஸ்துமஸுக்கும் முன்பே வாழ்த்து

அட்டைகள் கடைகளில் படு சுறுசுறுப்பான விற்பனையைத் துவங்கிவிடுவது போல

இந்த நாளுக்கும் விதவிதமான வாழ்த்து அட்டைகள், அலங்கரிக்கப்பட்ட

?ார்ட்டுகள், வீட்டை அலங்கரிப்பதற்கான பொருட்களின் கோலாகலமான விற்பனை

துவங்கிவிடுகிறது. பெரிய பெரிய பேனர் விளம்பரங்களிலும் கண்ணைப்

பறிக்கும் மின் விளக்குகளிலும் கடைகள் வரவேற்பு வாசிக்கும். இந்த

நாளுக்கான விசேஷ கேண்டிகளும், கேக்குகளும், பூங்கொத்துகளும், அலங்காரக்

காகிதப் பூக்களும், மலரத் துடிக்கும் ரோஜாக்களையும் வாங்கிடும்

கூட்டங்கள், நாள் நெருங்க,நெருங்க அதிகரிக்கிறது. மிக நேர்த்தியான

வண்ணக் காகிதங்களில் பேக் செய்யப்பட்டு சிறிதும் பெரிதுமாக பல அளவுகளில்

பரிசுப் பொருட்களை வாங்கி வெளியேறும் இளைஞ இளைஞிகள் கூட்டம் 1800களில்

துவங்கியதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கிறது.

பிரிட்டிஷ் பெண் ஓவியர் கேட்டி கிரீனவே 1865 களில் வாழ்த்து அட்டைகளை

வெளியிட்டார். மடிக்கப்பட்ட அட்டையின் உட்பக்கம் வாழ்த்துச் செய்தி

எழுதுவதற்காகக் காலியிடம் விட்டும், வெளிப்பக்கங்களில் குழந்தைகள்,

பூந்தோட்டங்கள் போன்ற ஓவியங்களுடன் வெளியிட்டார். இதனைக் கண்ட

அமெரிக்கப் பதிப்பாளர் எஸ்தர் ?ாவ் லாண்ட் ( மசாச்சுசெட்ஸ் ) முதலில்

வாழ்த்து அட்டைகள் தயாரித்து கடைகளில் ஆடர் பெற்றார். பெண்கள் சிலரை

வேலைக்கு வைத்துக் கொண்டு விதவிதமான வாலண்டைன் தின வாழ்த்து அட்டையைச்

செய்து விற்கத் துவங்கினார். நல்ல வரவேற்பு கிடைக்க கைவேலைப்பாடுகளுடன்

கூடிய புதிய டிசைன்களை அறிமுகப்படுத்தினார். குறுகிய காலத்தில் அதாவது

1870ல் ஒரு லட்சம் டாலர் லாபம் ஈட்டினார். ஒரு டாலரிலிருந்து 35 டாலர்

வரை வாலண்டைன் வாழ்த்து அட்டை விற்று விற்பனையில் ஒரு ரெக்கார்டு பிரேக்

ஏற்படுத்தினார். சிகாகோ அஞ்சலகத்துக்கு திடாரென் வந்து குவிந்த 25

லட்சம் வாழ்த்து அட்டைகளை நாங்கள் டெலிவரி செய்யமாட்டோம் என்று தெருவில்

வீசி எறிந்த நிகழ்வுகள் குறிப்பிடத் தக்கது.

கவிதைகள்…

கவிதைகள்…

வாலண்டைன் தின தலைப்பில் கவிதைப் புத்தகங்கள் இதுவரை 69 வெளிவந்துள்ளது.

அமெரிக்க கவிஞர் ‘எட்கர் ஆல்பர்ட் கெஸ்ட் (1881-1959) எழுதிய வாலண்டைன்

கவிதை 1919ல் மிகுந்த வரவேற்பு பெற்ற கவிதையாகும். ‘டிரேஸிபெர் ‘ட்டின்

கீப்பர் ஆப் த ஸ்டார்ஸ் என்ற தலைப்பில் வெளிவந்த இதயங்கள் இரண்டு

சந்தித்தால், ‘இப்போது இதயங்கள் தனிமையில் இல்லை ‘ போன்ற கவிதைகள் மிகப்

பிரபலமானது. வாலண்டைன் தின கவிதைகள் இதுவரை 1913 வெளிவந்திருப்பதாக

புத்தக நிறுவனப் புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது.

ரோஜா…

ஏறக்குறைய காதலர் உலகில் அங்கிங்கெனாதபடி எங்கும் வலம் வரும் ஒரு காதல்

சின்னம் தான் ‘ரோஜா ‘ என்றால் அதை யாராலும் மறுக்க முடியாது. ( ரோஜாப்பூ

கிடைக்காத இடங்களில் மாமன்,மச்சான்கள் மல்லிகைப்பூ வாங்கிக்

கொடுத்திருக்கலாம்! ?) 35 மில்லியன் வருடங்களாக உலகில் வாசமளித்து வாசம்

செய்கிற பூ ரோஜாப்பூ! வரலாறாக இருக்கிற ரோசாப் பூவிற்க்குக் கூட சில

ரகசியம் உண்டு தெரியுமா ? உங்களுக்கு. அத்தனை ரகசியத்தையும் இந்த திறந்த

பக்கத்தில் சொல்லிவிட முடியாது. வாலண்டைன் தின ரகசியத்தை மட்டும்

உங்களுக்கு இரகசியமாகச் சொல்லி வைக்கிறேன்.

வாலண்டைன் தினத்தன்று ஒரே ஒரு சிவப்பு ரோஜாவைக் கொடுத்தால், ‘நான் உன்னை

மனதார நேசிக்கிறேன் ‘ என்று சொல்லாமல் ‘அந்த ‘ அடையாளம் சொல்லிவிடும்!

ஒரு ‘வெள்ளை ரோஜா ‘ வைக் கொடுத்தால், ‘ நீதான் என் சொர்க்கம் ‘ என்று புரியவைக்கும்!

ஒரு வெள்ளை ரோஜாவோடு ஒரு ரோஜா மொட்டும் சேர்த்துக் கொடுத்தால், ‘ You ‘re

too young for LOVE ‘ என்று மென்மையாகப் பொருள் சொல்லும்!

அதற்காக சிவப்பு ரோஜாவையும் வெள்ளை ரோஜாவையும் கையில் எடுத்துக் கொண்டு

போய் கண்டவர்களிடம் கொடுத்தால் வேறுவகையான சன்மானம், வெகுமதி

செமர்த்தியாகக் கிடைக்கலாம். அதற்கு நான் பொறுப்பில்லை சாமி… ஆளை

விடுங்கள்!

அது சரி…

எத்தனையோ வாசமான மலர்கள் இருக்க ரோஜாவை ஏன் காதலர்கள்

தேர்ந்தெடுத்தார்கள் ? காரணமில்லாமல் இல்லை.

‘ROSE ‘ என்ற வர்த்தையைச் சற்று மாற்றி அமைத்துப் பாருங்கள். ‘EROS ‘

என்று வரும்! அடடே! காதல் கடவுளல்லவா ‘EROS ‘…. அதான்!!!

—-

albertgi@gmail.com

Series Navigation

ஆல்பர்ட் பெர்னாண்டோ.

ஆல்பர்ட் பெர்னாண்டோ.