வைகைச் செல்வி
அடுக்கு மாடிகளில்
சொர்க்கத்தைத் தவிர
எல்லா மாடிக்கும்
ஏற்றிச் செல்லும்
ஏழை-பணக்காரன்
என்றேதும் பாராமல்
கூப்பிட்ட குரலுக்குச்
சேவகனாய் ஓடிவரும்
ஒற்றைப் பனைமரமாய்
அதிகாரிகள்
பேச்சுகள்…கோப்புகள்
மற்றும்.. . .பணியாளர்.
காரியம் முடிக்கவரும்
‘கனத்த ‘ பைகளையும்
அப்பாவி மக்களின்
வெற்றுக்கை மனுக்களையும்
சமமாய்ச் சுமந்துவரும்
அலுவலக மாடிக்கு.
தடங்கல் ஏற்படினும்
துாக்கி எறியாது.
ஒரு மூட்டை ஆண்களும்
இடிதாங்கிப் பெண்களுமாய்
எத்தனை பேர் வந்தாலும்
பத்திரமாய்ச் சுமந்து வரும்
கண்ணாடிச் சுவர்களும்
கம்பிச் சட்டமெனில்
உள்ளுலகம் காட்டும்.
மூடிய கதவிற்குள்
என்றென்றும் ஆட்கள்தான்.
இருந்தும்-
என்றோ ஒரு நாள்
கிளிகள் சிக்கிவிட்டால். . .
வேரின்றிக் கனிசுவைக்க
வேறெதையோ சுமந்து வரும்.
—-
vaigai_anne@yahoo.com
- நகைச்சுவைத் தொடர் – இம்மொபைல் ஆக்கும் மொபைல் -3
- நைல் நதி நாகரீகம், எகிப்தியரின் பிரமிட் படைப்பில் காணும் புதிர் வானியல் முறைகள் -9 [Egyptian ‘s Hermetic Geometry]
- 32 வது ஐரோப்பிய இலக்கியச் சந்திப்பு
- கொணர்ந்திங்கு சேர்க்கும் மதுமிதா (நூல் அறிமுகம்)
- ‘நிலாக்கீற்று ‘ தொகுப்பு-1
- பாரிஸில் 12-13 நவம்பர் 2005-ல் 32-ஆவது இலக்கியச் சந்திப்பு
- நான் கண்ட சீஷெல்ஸ் – 2
- சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – IX
- த.தவமிருந்து ::: திரையில் ஒரு கிராமத்து ‘மெட்டி ஒலி ‘
- பூகோள இடநிலை உணர்த்தும் அமைப்பு (GPS)
- கடிதம் – மலர்மன்னன்: நேர்மையான படைப்பாளியின் தைரியமான கருத்துக்கள்
- தில்லை வாழ் அந்தணர்களுக்கு
- ‘சிந்தனா சுதந்திரம் ‘ என்ற அறக்கட்டளை தொடக்கம்
- பண்பாடும் கருத்தும் – கலந்தாய்வு அரங்கு – 08-12-2005 வியாழன்
- விளக்கு இலக்கிய அமைப்பு – ஒரு வேண்டுகோள்
- சக்கரியாவுக்கு உள்ள மரியாதை எனக்கு ஏன் இல்லை ?
- பாரதி இலக்கிய சங்கமும் காவ்யா அறக்கட்டளையும் இணைந்து நடத்திய 2005 ஆம் ஆண்டுக்கான பரிசுப் போட்டி முடிவுகள் சி. க நினைவுபரிசுப் போ
- ஈ.வே.ரா.: ஒரு முழுமையான பார்வை முயற்சியில்
- அவன் மீண்டான்
- சிங்கிநாதம்
- புனித அணங்கு ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (முடிவுக் காட்சி)
- எந்தையும் தாயும்
- என் இனமே….என் சனமே….!
- இந்தியா : உலகமய வெற்றியும் மனிதவள தோல்வியும்
- ஜோஸப் கேம்பெல் -வாழ்க்கைக் கோலம்
- தத்துவார்த்தப் போர்கள்
- மைனாரிட்டி !
- லிஃப்ட்
- பெரியபுராணம் – 68 – 32. திருநீலநக்க நாயனார் புராணம்
- எழுத்து, கவிஞர், படைப்பு – கவிஞர் குஞ்ஞுன்னி நோக்கில்…
- ஒற்றித் தேய்ந்த விரல்
- இடம்
- ஒரு வசந்தத்தின் இறப்பு
- கீதாஞ்சலி (52) எங்கிருந்து வந்ததோ ? ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )