ஆ. மணவழகன்
முடிவு தெரியாது முடிந்துபோன
கவிதையின் மிச்சமாய்…!
முரண்டு பிடித்தும் முகம் தெரியாத
கனவின் சொச்சமாய்…!
பேசிப்பேசி மாளாது நீண்ட
கதையின் பக்கமாய்…!
ஊசி கொண்டு தைத்துவைத்த
உணர்வுகளின் மொத்தமாய்…!
துடிக்க வைத்துத் தூக்கம் தொலைத்த
இரவுகளின் ஏக்கமாய்…!
துடைக்க நினைத்தும் தொடர்ந்து வந்த
நினைவுகளின் தாக்கமாய்…!
பார்த்து நின்றே பசிபோக்கிய
ஆசைமுகத்தின் அம்சமாய்…!
பார்த்துப் பார்த்து செதுக்கி வந்த
உருவத்தின் பிம்பமாய்…!
எனக்குள் மொட்டுவிட்ட
மோகத்தின் இரகசியமாய்…!
என் இளமையைக் கிள்ளிவிட்டுத்
தாலாட்டும் அதிசயமாய்…!
இதோ,
ஏதும் அறியாத
எந்திரப்பாவையாய்
என்முன்னே…
நீ…!
************
a_manavazhahan@hotmail.com
- இலையுதிர்க் காலம்.
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது -4( தொடர்கவிதை)
- வலி
- வாழ்வும் கலையும் (இறுதிப்பகுதி)
- ஆவலும் அப்பாவித்தனமும் (எனக்குப் பிடித்த கதைகள் – 36-வைக்கம் முகம்மது பஷீரின் ‘ஐஷூக்குட்டி ‘)
- ஊசியின் காதும் ஒடுங்கிய தெருவும் (கபீர் தாசாின் சிந்தனைகள் பற்றி சில குறிப்புகள்)
- செயற்கைக் கதிரியக்கம் ஆக்கிய ஐரீன் ஜோலியட் கியூரி [Irene Joliot Curie] (1897-1956)
- அறிவியல் மேதைகள் ரூதர் ஃபோர்ட் (Ruther Ford)
- பாட்டு படும் பாடு
- நீங்கள் இன்று…
- படிக்க மறந்த கவிதை
- நலமுள்ள நட்பு
- பால்
- கடற்கரை வாக்கிங்
- வட்டத்தின் வெளி
- வேங்கூவர் – கனடா
- வேகத் தடுப்புகள்
- வாழ்வும் கலையும் (இறுதிப்பகுதி)
- சிந்து சமவெளி நாகரிகம் : ஒரு மறு பார்வை
- எஸ் என் நாகராஜன் 75 ஆண்டு நிறைவு : மலர் வெளியீடு
- என் குர் ஆன் வாசிப்பு
- சுற்றம்
- அரிசிபால்தீ
- நாங்கள் பேசிக்கொள்கிறோம்