இமாம்.கவுஸ் மொய்தீன்
போதை!
விலை மாதர்!
வேண்டாச் சேர்க்கை!
‘வேண்டாம்
தவறு
கூடாது’
சொன்ன வார்த்தைகள்
செவிடன் காதில் ஊதிய
சங்காகிப் போனது….
தந்த வினையால்
வந்த வினை!
பொதுவாகவே
பெற்றோர்
தம் குழந்தைகட்கு
கல்வி ஒழுக்கம்
அசையும் அசையாச்
சொத்துக்கள்
உறவுகளை
விட்டுச் செல்வர்!
இவர்களை
விட்டுச் சென்றவர்களோ
இவர்களுக்கு
விட்டுச் சென்றது
உருக்கி(HIV) நோய்!
அறிந்தோ
அறியாமையிலோ
பெரியவர்களால்
நிகழ்ந்துவிட்ட
தவறுகளுக்கு
தண்டனை
அனுபவித்துக்
கொண்டிருக்கிறார்கள்
இப் பரிதாபத்துக்குறிய
அப்பாவிகள்!
மொட்டாக இருக்கும்
இவர்கள்
பூவாக
காயாக
கனியாக
விதையாக
ஆகாமலேயே
உதிர்ந்துவிடப்
போகிறவர்கள்!
இவர்களை
அரவணைப்பதாலோ
ஆதறவு கொடுப்பதாலோ
அன்புசெலுத்துவதாலோ
ஏன்? முத்தமே
கொடுத்தால் கூட
இந்நோய்
தொற்றிக் கொள்ளும்
ஆபத்தில்லை!
இரத்தத் தொடர்பு
மட்டுமே
அச்சத்துக்குறியது!
இவர்கள்
இம்மையில்
நரகம்
அனுபவிப்பவர்கள்!
பெரியவர்கள்
தம் இச்சைகளைக்
கட்டுப் படுத்தாதால்
ஏற்பட்ட நிகழ்வுகளுக்கு
எடுத்துக்காட்டுகள்!
பாவங்களல்ல இவர்கள்!
பாடங்கள்! பரிதாபங்கள்!!
drimamgm@hotmail.com
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 4
- காதல் நாற்பது – 35 காதல் என்பது மனக்குடைவு !
- பூம்பூம் காளை!!
- ஸூபி முஹம்மதிற்கு…..
- கால நதிக்கரையில் – அத்தியாயம் – 20
- சீனக்கவிதைகள்
- எஸ்.ராமகிருஷ்ணனின் ‘இலைகளை வியக்கும் மரம்’
- கவிச்சக்கரவர்த்தி கம்பன் ஆவணப்படம் தொடக்கவிழா
- எனி இந்தியன் பதிப்பகம் நடத்தும் கருத்தரங்கு
- ஊர்விலக்கத்தினூடே தொடரும் பயணங்கள்
- குடியேற்றம் முத்தமிழ்ச்சுவைச்சுற்றம் பதினொன்றாம் ஆண்டு பைந்தமிழ்த்திருவிழா
- அரிமா விருதுகள் 2006
- பத்துப் பைசா பெறாத ஃபத்வாக்கள்
- ‘நாங்கோரி என்ற உறுப்பினர்’ கதையை பற்றி
- மும்பையனுக்கு மும்பாதேவி
- திரு அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரை
- தொடர்நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் இருபத்திநான்கு: அனிஸ்மானின் ஆலோசனை!
- மழை என்னும் மாபெரும் சக்தி – சரவணன் கவிதைத்தொகுப்பு
- பிழைதிருத்தம் 13 : வாய்பாடு – வாய்ப்பாடு
- ஜப்பான் நிலநடுக்கமும், அணுமின் நிலையங்களின் கண்காணிப்பும் -2 (ஜூலை 17, 2007)
- அறிவுநிதி கவிதைகள்
- உருக்கியில் (HIV) உருகும் சிறார்!!
- விமர்சனக்குருவிகள்
- ஒரு புயலும் சில பூக்களும்
- என் வெளி…..
- தஸ்லிமாவின் முன்னோடி : இஸ்மத் சுக்தாய் எதிர்கொண்ட ஆபாச எழுத்து வழக்கு
- ஹெச்.ஜி.ரசூல் மீதான ஊர்விலக்கமும் எழுத்துக்களின் உடனான உரையாடலும்
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்)
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 24