நாகூர் ரூமி
====
ஊருக்குள்ளே அவசரமாய்
வந்து கடல் போனபோது
நொந்து போயின உடல்கள்
வெந்து போயின உயிர்கள்.
அடையாளங்கள் அனைத்தும்
அழிந்து போனபின்
சேர்ந்து கொண்டன சடலங்கள்
ஒரே குழிக்குள்
சகோதரத்துவத்துடன்.
மரங்களும் மனங்களும்
வீடும் வாழ்வும்
கவலையும் கனவும்
மூழ்கிப் போயின ஒன்றாய்.
துடைக்கப்பட்ட பல லட்சம் சிலேட்டுகளில்
எஞ்சியிருப்பது
சமுத்திர எச்சில் மட்டுமே.
‘அ ‘ போட்டுத்தான் இனி
ஆரம்பிக்க வேண்டும்.
நெருப்பை மீறிவிட்டது நீர்
எனினும்
வெறுப்பை மீறுவது எப்போது ?
கண்ணெதிரே —
கண்ணியம் களையப்படும்போது
கணவன் கொல்லப்படும்போது
பிள்ளைகள் பறிக்கப்படும்போது
பெண்கள் எரிக்கப்படும்போது
கறுப்புத் தோல் கிழிக்கப்படும்போது
உறுப்புகள் அறுக்கப்படும்போது
பொறுப்புகள் மறுக்கப்படும்போது
அணுக்கள் தோறும் அவஸ்தைகளை
அனுபவிக்கும்போது
வார்த்தைகளால் விளக்க முடியுமா
வேதனைப் பாடத்தை ?
சிதைந்த முகங்களுடன்
சிரிக்கின்றன குழந்தைகள்
செத்துப்போனததன்
அம்மா என்று அறியாமல்.
காயங்களிலிருந்து
வடிந்துகொண்டே இருக்கின்றன
வல்லரசுகளின் வெறியும் வெறுப்பும்.
வானத்தை ரசிப்பதும்
கானத்தை ருசிப்பதும்
மானம் இருக்கும் வரைதான்.
அலைகள் எல்லை மீறுவது
வெறும் ஆசையினால் அல்ல
அதிகாரம் எல்லை மீறுவது
வெறும் ஓசையினால் அல்ல.
அலைகளை மன்னிக்கலாம்
ஆனால் கொலைகளை ?
10:34 AM 1/19/05
- கடிதம் ஜனவரி 20,2005 – செருப்பு: குறும்படம்.
- ஆறடி அறைகளின் குரல்கள்
- தியாகத்தின் கதை – போர்க்குதிரை – நுால் அறிமுகம்
- நெரூதா அனுபவம்
- காஞ்சி மடம் – க.நா.சு – பிலோ இருதயநாத் – மாலதி சந்தூரின் தெலுங்கு மிட்டாய் – வலம் போன நரி (அல்லது – மஞ்சரி 1955 தொகுப்பு)
- மதம் அலுத்துப் போனது – மாதவிக்குட்டியின் கட்டுரை
- பிரம்மராஜன் மொழிபெயர்ப்பில் கால்வினோ கதைகள்
- ஓவியப்பக்கம் பதினான்கு – வில்லியம் கெண்ட்ரிட்ஜ் – நவீன் ஊடகத்தில் உயிர்த்தெழும் கோட்டோவியங்கள்
- வெங்கட்ரமணனின் குவாண்டம் கனி
- புத்தக விழாவில் ‘பிடித்தவை ‘
- கடிதம் ஜனவரி 20,2005
- ஹதீஸ் – ஒரு சிறு விளக்கம்!
- இயற்பியல்::2005 புதிய இணையதளம்
- கடிதம் ஜனவரி 20,2005 – நேச குமார் தெளிவுபெறவேண்டும்
- கடிதம் ஜனவரி 20 ,2005
- கடிதம் ஜனவரி 20,2005 – ஷரியா அடிப்படை நீதி என்ற பெயரால் கல்லால் அடித்துக் கொல்வதற்கு எதிர்ப்பு… பணிந்தது இரான்
- கடிதம் ஜனவரி 20,2005 – திருமாவளவனும் தமிழ்த்திரையுலகும்
- அவரவர் உடை அவரவர் விருப்பமே!
- முகம்
- ஓவியர்களின் உலகம் அழைக்கிறது – ஜனவரி 25 ,2005
- ஜனவரி 30,2005 – ராஜராஜேஸ்வரம் நிகழ்ச்சி
- அறிவியலும் ஒரு போலி அறிவுஜீவியின் நியோ-மனுவாதமும்
- குர்பான்
- சுனாமிக்கு (அமெரிக்கா) IRS காட்டும் பரிவு:
- மறுபடியும்
- இப்படிக்கு இணையம்….
- த ளி ர் ச் ச ரு கு
- து ை ண – குறுநாவல் – 1
- நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -55
- வேட்கை
- பேரழிவுச் சீரமைப்பு -உளவியல் கண்ணோட்டம்-2
- நிஜமான போகி
- வீங்கலை விபரீதங்கள்…. என் அனுபவம்
- வாய் மூடிப்போன நடுநிலையாளர்கள்
- அஞ்சலி: சீன கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஜாவ் ஜியாங்
- சொன்னார்கள் சொன்னார்கள் – ஜனவரி 20 ,2005
- தினம் ஒரு பூண்டு
- கவிதைகள்
- என் பொங்கல்
- பெரியபுராணம்- 27 -16. கண்ணப்ப நாயனார் புராணம்
- கவிக்கட்டு 45 – என்னை என்ன செய்யப்போகிறாய் ?
- உதிரிப்பூக்கள்
- அலைகளை மன்னிக்கலாம்
- கவிதைகள்
- இவ்வாண்டு படைத்த கடற்பொங்கல்!
- கண்டு கொண்டேன் !
- சனிக்கோளின் துணைக்கோளில் தடம் வைத்த ஈரோப்பியன் விண்ணுளவி ஹியூஜென் [ESA Probe Huygens Lands on Saturn ‘s Moon Titan] (Jan 14 2005