சென்னை-நவின்
சென்னை-நவின், கலிபோர்னியா (அமெரிக்கா)
.
அன்னை தேசத்தை விட்டு
எண்ணை தேசத்தில்
எரியும் எண்ணற்ற
இந்தியச் சகோதரர்களுக்கு…..
பால் குடிக்கும் குழந்தையையும் மறந்து
பாதி ராத்திரி வரை தன் கணவனின்
தொலைபேசி மணிக்காகக் காத்துக்கிடந்து
மொபைல் போன்களுடனேயே
முழு வாழ்க்கையையும் வாழ்ந்து விடும்
என் தேசத்தின் கற்புக்கரசிகளுக்கு….
தள்ளாத வயதிலும்
தன் தனையன் வரவை நோக்கி
நாழிகைக் கணக்காக
நாட்களைத் தள்ளிக்கொண்டிருக்கும்
என் தாயகத்துத் தாய்மார்களுக்கு…
நிலவைக் காட்டிச் சோறு ஊட்டும்போதெல்லாம்
‘அப்பா எப்பம்மா வருவாரென’க் கேட்கும்
பச்சிளங்குழந்தையின் கண்ணில் படாமல்
கண்ணைக் கசக்கி உயிரைப் பிசைந்துத்
தொண்டை வழியாக தானும் விழுங்கும்
அந்தத் தாயுள்ளத்துக்கு….
வாழ்க்கையில் வளம் சேர்த்து
வாழ்ந்து பார்த்துவிடவேண்டுமென்ற
வைராக்யத்தோடு வையகம் விட்டு
வான்வழியே பறந்துபோய்
பொருள் தேடும் போதையில்
வாழ்க்கையை தொலைத்து விட்ட
என்னைப்போன்ற
எண்ணற்ற சகோதரனுக்கு….
இருக்கும் நாடு
வேறாக இருந்தாலும்
இதயங்கள் என்
இந்தியாவை நோக்கியே….
என்று தாய்நாட்டை எப்போதும்
தாயைப்போல் நேசிக்கும்
என் இந்தியச் செல்வங்களுக்கு…
எத்தனை யுகங்கள்
எந்தெந்த நாட்டில் இருந்தாலும்
என் கடைசி மூச்சு
என் தாய் மடியில்….
என் தாய் மண்ணில்தான்
என்ற வைராக்யத்தோடு
உயிரற்று வாழ்ந்துகொண்டிருக்கும்
உன்னதத் தோழனுக்கு….
அமெரிக்க ‘ஹைவே’யில்
அதிவேகக் கார்களில்
ஆங்கில இசைகளில்
ஆர்ப்பரிக்கச் சென்றாலும்…
ஒற்றையடிப் பாதைகளில்
சைக்கிளில் ‘விசில்’ அடித்துச் சென்றதில்
லயித்துப்போன
என் இந்திய மண்ணை
இன்றுவரை நினைத்து நெகிழ்ந்துபோகும்
நிஜமான மனங்களுக்குத்…….
தெரியும்……………
இந்த உயரின் வலி
ஏ! இந்தியனே!
உன்னைப்பெற்ற
உன் தாய்நாடு கேட்கிறேன்!
மகனே!
நீ எப்போது வருவாய்?
குறைந்தபட்சம்
என் கடைசி நிமிடங்களிலாவது!!
நீ
உன் தாய்த்திரு நாட்டில்
விளக்கேற்ற வரவேண்டாம்…
வீதி வழி போகிற பொழுதுகளிலாவது!!
என் புதல்வனே!
நீ
இழந்தது
வாழ்க்கையை மட்டுமல்ல
உன் தாய்த்திருநாட்டையும்தான்…..
எப்போது வருவாய் மகனே!
இந்தியவை நோக்கி…
கண்ணீருடன்
இந்தியத்தாய்…..
navneethsmart@yahoo.com
- பகுதி நேரக் கடவுளின் நாட்குறிப்பேடு! – அமிர்தம் சூர்யாவின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு
- நாடகர் தாசீசியஸ் 2006க்கான இயல்விருதினைப் பெற்றுக்கொண்டார்
- கூடங்குளம் அணு உலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்புகள் !
- சுந்தர ராமசாமி என்கிற மாமனிதர்!
- மரணதண்டனை எதிர்ப்பாளர்களை தூக்கில் இட வேண்டும்
- தேசியம் என்பது கதையாடலா?
- சிவாஜி
- உலகத்துக்கு எழுதிய கடிதம்
- தொடர்நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் பதினான்கு: ‘வேடிக்கையான குடிவரவுத் திணைக்கள அதிகாரி!’
- உள்ளங்கைச் சூடு
- ஒரு கடிதம்: தலைக்கேறும் மதப் பித்தால் தடுமாறல் சகஜம்
- கடிதம்
- வெசாவின் திண்ணை கட்டுரை எழுப்பிய கருத்துக்கள்
- சிலப்பதிகாரம் -குற்றாலக்குறவஞ்சி இசைக்குறுந்தகடுகள் வெளியீட்டு விழா
- புதுச்சேரி வட்டாரம்-வரலாறு சார்ந்த நாவல்கள்: ‘நீலக்கடல்’ குறிப்பாக…
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 5
- காதல் நாற்பது (25) கனத்துப் போன மனது !
- கருணாகரன் கவிதைகள்
- கடவுளும் கந்தசாமியும் (புதுமைப் பித்தனின் அழியா நினைவுக்கு.)
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 14
- அன்னை (தேசத்தின்) யின் ஏக்கம்!
- பெரியபுராணம்-133 (நிறைவு)
- மீண்டு வருவாரோ?
- கோயில்களில் பிறமதத்தார் – ஒரு முரண்பார்வை – பாகம் 2
- கொசு
- தள்ளு வண்டி
- பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
- கால நதிக்கரையில்……(நாவல்)-10
- உருகிய சாக்லெட்