எட் ஸ்டோட்டார்ட்
இந்தியப் பெருங்கடலில் தோன்றிய ட்சுனாமி காட்டுவிலங்குகளைப் பாதிக்கவில்லை என்பது விலங்குகளுக்கு ஆறாம் அறிவு உண்டு என்ற நம்பிக்கையை வல்லுனர்களிடம் வலுப்படுத்தியிருக்கிறது.
24000 பேர்களைக் கொன்ற ட்சுனாமி இலங்கையின் கடலோரத்தில் இருக்கும் வனவிலங்கு சரணாலயத்தில் ஒரு விலங்கையும் கொல்லவில்லை என்பதை இலங்கை வனத்துறை அலுவலர்கள் கூறியிருக்கிறார்கள்.
‘எந்த ஒரு யானையும் இறக்கவில்லை. ஒரு முயல் கூட இறக்கவில்லை. விலங்குகள் வரப்போகும் பேரழிவை உணர்ந்துகொள்ளும் சக்தி படைத்தவையாக இருக்கலாம். விலங்குகளுக்கு ஆறாம் அறிவு உண்டு என்று நினைக்கிறேன். மறுபாடான விஷயங்கள் நடப்பதை அவை அறிந்துகொள்கின்றன ‘ என்று இலங்கை வனத்துறையின் உதவி இயக்குனராக இருக்கும் ஹெச் டி ரத்னாயகே கூறினார்.
தென் கிழக்கு இலங்கையின் யாலா தேசிய பூங்காவில் சுமார் 2 மைல்கள் தொலைவுக்குகடலலைகள் உள்ளே வந்திருக்கின்றன. இந்த பூங்காவில் நூற்றுக்கணக்கான காட்டு யானைகளும் ஏராளமான சிறுத்தைகளும் இருக்கின்றன. ‘எரிமலை வெடிப்பதற்கு முன்னர் நாய்கள் கத்துவதும், பறவைகள் அங்கிருந்து பறந்துவிடுவதைப் பற்றியும் பலமுறை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இவை நிரூபிக்கப்படவில்லை ‘ என்று ஜோஹன்னஸ்பர்கில் இருக்கும் விலங்குகள் சரணாலயத்தில் இருக்கும் விலங்குகள் குணாம்ச நிபுணர் மாத்தியூ வான் லைரோப் தெரிவித்தார்.
‘ ஒரு பரிசோதனைச்சாலையில் இவற்றை பரிசோதித்திப்பார்த்து நிரூபிக்க முடியாது என்பது ஒரு காரணம் ‘ என்றும் அவர் குறிப்பிட்டார்.
மற்றும் பலர் இந்த கருத்தோடு ஒத்துப்போகிறார்கள்.
‘பறவைகள் வரப்போகும் பெரும் அழிவை உணர்ந்து கொள்கின்றன என்பதைப் பலர் குறிப்பிட்டிருக்கிறார்கள். ‘ என்று கிளைவ் வாக்கர் கூறினார். இவர் ஆப்பிரிக்க வன உயிர்களைப்பற்றி ஏராளமான ஆராய்ச்சிகள் செய்து புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.
விலங்குகள் தம் மோப்ப உணர்வையும், கேட்கும் சக்தியையும் பயன்படுத்தி தமக்கு வரும் ஆபத்துகளிலிருந்து தப்புவது தெரிந்த விஷயமே.
விலங்குகளுக்கு ஆறாம் அறிவு உண்டு என்ற பரவலான நம்பிக்கையை, இலங்கையின் அழிக்கப்பட்ட கடற்கரையோரம் வலுப்படுத்துகிறது.
ரோமானியர்கள் ஆந்தைகளை இப்படிப்பட்ட அழிவை முன்னமே எடுத்துரைக்கும் சகுனங்களாகக் கருதினார்கள். பல மூதாதையர் கலாச்சாரங்கள் யானைகளை இப்படிப்பட்ட புனித மிருகங்களாக, வரப்போகும் அழிவைத் தெரிவிக்கும் சக்தி படைத்தவை என்று கருதின.
- Reporting from Chennai about the Relief efforts on the Tsunami hit areas.
- கடிதம் டிசம்பர் 30, 2004-எஸ். அரவிந்தன் நீல கண்டன்: அருள் செல்வன் கந்த சுவாமி: சலாஹுத்தீன்: ஜோதிர் லதா கிரிஜா
- திரு பத்மநாப ஐயருக்கு 2004 ஆம் ஆண்டிற்கான இயல் விருது
- கடிதம் டிசம்பர் 30,2004 – பத்திரிகைகளின் தவறான போக்கு!
- உடன் பயின்ற நண்பனுக்கு ஒரு மடல்!
- ரெஜி
- ஓவியப் பக்கம் – பதினொன்று – ஜார்ஜ் கிராஸ்ச்- ஓவியமும் அரசியலும்
- மெய்மையின் மயக்கம்-32
- மக்கள் தெய்வங்களின் கதைகள் – 15. வன்னியன் கதை
- சங்கீதமும் வித்வான்களும்
- கடிதம் டிசம்பர் 30,2004
- துயருறும் இலங்கை மக்களின் நிவாரணத்திற்கு அவசர வேண்டுகோள்!
- சதாத் ஹசன் மண்டோ நூல் வெளியீடு
- ‘சும்மா வருவாளா சுகுமாரி ? ‘ – இசை விழா விமர்சனம் – II
- விடுபட்டவைகள்-3 -தீர்க்கம்
- பத்மநாபஐயர்
- சுனாமி
- சுனாமி
- கடிதம் டிசம்பர் 23,2004
- மார்க்ஸ், டார்வின் மற்றும் பிரச்சாரம்
- ஒரு வேண்டுகோள்
- சாகித்ய அக்காதமி விருதுகள் – தமிழன்பனும் சகரியாவும்
- தெற்காசிய இந்து/இஸ்லாமியப் பண்பாடுகள் – ஒரு மறுசிந்தனை -1
- கடல் கொந்தளிப்பைக் குறித்த எச்சரிக்கையில் குளறுபடி
- இராக்கில் இஸ்லாமிய மக்களாட்சி ? – பகுதி 2
- சுனாமி அழிவு :: உரிமையும் கடமையும்
- கடல்கோள் அழிவிற்கு உதவுவோர் கவனிக்க வேண்டியது!
- சமஸ்கிருதமயமாதலும் நடுக்காட்டு இசக்கி அம்மனும்
- சூசன் சாண்டாக் – ஒரு வாசகனின் அஞ்சலி
- பெரானகன்
- வாரபலன் டிசம்பர் 30,2004 – தோழர் நிர்பன் , யசோதர – யமுனா, அரசாங்க விருந்து ,கொலைகள் அலைகள்
- நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் – 52
- இன்று புதிதாய்ப் பிறந்தோம்.. ?
- கடற்கோள்
- விலங்குகளுக்கு ஆறாம் அறிவு உண்டு என்ற நம்பிக்கையை வலுப்படுத்துகிறது ட்சுனாமி
- இந்து மாக்கடல் பூகம்பத்தில் எமனாய் எழுந்த பூத அலை மதில்கள்! (Earth Quake Giant Sea Waves Attack South Asian Countries 2004)
- கடலம்மா….
- அழுகிறபோது எழுதமுடியுமா ?
- கடற்கோள்
- தவறான திருப்பம் (ஆங்கில மூலம் : ஆகா ஷாஹித் அலி)
- பெரியபுராணம் – 24
- கவிக்கட்டு 42
- ஞானக்கோமாளி – கவிதாப் பிரசங்கம்
- அறிவியல் சிறுகதை வரிசை 7 – நம்பிக்கையாளன்